ஓம் நமசிவய
காண்பதற்கரிய தட்சிணாமூர்த்தி :
வழக்கமாக
சனகர்,
சனாதனர்,
சனந்தனர்,
சனத்குமாரர் என
நான்கு சீடர்களுடன்தான் தெட்சிணாமூர்த்தி
காட்சி தருவார்.
ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி
அருகிலுள்ள
திடியன் கைலாசநாதர் கோயிலில் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார்.
சிவனின் குரு வடிவமான
தெட்சிணாமூர்த்தியிடம்
ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர்
ஆகியோர் உபதேசம் பெற்றனர்.
இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம்
பெற்ற கோலத்தில் உள்ளனர்.
இத்தகைய அமைப்பில் தெட்சிணாமூர்த்தியின்
அமைப்பை காண்பது மிகவும் அரிது.
மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், தெட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு. இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது
நம்பிக்கை.
இக்கோயிலுக்கு அருகிலேயே ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் கோயிலும்,
மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோயிலும்
உள்ளது.
ஒருமுறை சென்று வாருங்களேன்
ஓம் நமசிவய
No comments:
Post a Comment