என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Sunday, August 25, 2013

ஐந்து ஐந்தாக அமைந்த பொக்கிஷங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே , வணக்கம் .

ஐந்திற்குள் அடங்கிய (இயற்கையின் ஐந்து நிலைக்குள்) அனைத்தும் என்னென்று பார்ப்போம்.



ஐந்தாக அமைந்தவைகள் 




* பஞ்சஅட்சரம்  -                      
   ந ம சி வ  ய  


* பஞ்சபுராணம் -                      

   தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,பெரியபுராணம். 


* பஞ்ச கங்கை -                      

ரத்ன கங்கை,தேவ கங்கை,கயிலாய கங்கை,உத்ர கங்கை, பிரம்ம கங்கை.  


* பஞ்சாங்கம் -                        

திதி, வாரம், நட்சத்திரம்,யோகம்,கரணம்.


* பஞ்ச ரிஷிகள் -                   

அகத்தியர், புலஸ்தியர், துர்வாசர், ததீசி, வசிஷ்டர். 



* பஞ்ச குமாரர்கள் -  
விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா. 


* பஞ்ச நந்திகள் -                    
போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி, 



* பஞ்ச மூர்த்திகள் -  

விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு. 


* பஞ்சாபிஷேகம் -  

வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர், 
பச்சை கற்பூரம்,குங்குமப்பூ கலந்த நீர் ,
கிராம்பு, கொரோசனம் கலந்த நீர் , விளாமிச்சை வேர் , 
சந்தனாதி தைலம் ஆகிய வாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம். 



* பஞ்ச பல்லவம் -  
அரசு, அத்தி, வில்வம், மா, நெல்லி. 


* பஞ்ச இலைகள் -  

வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை. 


* பஞ்ச உற்சவம் -  

நித்ய உற்சவம், வார உற்சவம், பட்ச(மாதம்இருமுறை) உற்சவம், 
மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.

  

* பஞ்ச பருவ உற்சவம் - 
அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதப்பிறப்பு.


* பஞ்ச பூதங்கள் -  

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்.


* பஞ்ச ஸ்தலங்கள் -        

காஞ்சிபுரம் , திருவானைக்காவல், திருவண்ணாமலை,  தி ருக்காளத்தி, சிதம்பரம் .


* பஞ்ச அவயங்கள்   -  

மெய், வாய், கண், மூக்கு, செவி.


* பஞ்ச கர்மாக்கள்   -  

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்


* பஞ்ச சபைகள் -  

ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.


* பஞ்ச ஆரண்யம் -  

உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,அர்த்தஜாமம்.


* பஞ்ச முகங்கள் (சிவன்)- 

தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்.


* பஞ்ச முகங்கள் (காயத்ரி)- 

பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.


* பஞ்ச மாலைகள் -                
இண்டை,தொடை,தொங்கல்,கண்ணி,தாமம்.


* பஞ்சமா யக்ஞம் -                

பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம்,தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம். 


* பஞ்ச ரத்தினங்கள் -  

வைரம்,முத்து,மாணிக்கம்,நீலம்,மரகதம்.


* பஞ்ச தந்திரங்கள் -             

மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.


* பஞ்ச வர்ணங்கள் -             

வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.


* பஞ்ச ஈஸ்வரர்கள் -  

பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்.


* பஞ்ச கன்னியர்கள் -  

அகலிகை,திரௌபதி,சீதை,மண்டோதரி,தாரை.


* பஞ்ச பாண்டவர்கள் -         

தர்மன்,அர்ச்சுனன்,பீமன்,சகாதேவன்,நகுலன்.


* பஞ்ச ஹோமங்கள் -         

கணபதி ஹோமம்,சண்டி ஹோமம்,நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், 
ருத்ர ஏகாதச ஹோமம்.


* பஞ்ச சுத்திகள் -   

ஆத்ம சுத்தி,ஸ்தான சுத்தி,திரவிய சுத்தி,மந்த்ர சுத்தி,லிங்க சுத்தி.


* பஞ்ச கோசம் -           

அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். 


* பஞ்ச காவ்யம் (பசு)-  

பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம். 


* பஞ்ச லோகம் -                    

 தங்கம்,வெள்ளி,பித்தளை,செம்பு,ஈயம்.


* பஞ்ச ஜீவநதிகள் -                

ஜீலம்,ரவி,சட்லெட்ஜ்,பீஸ்(பீயாஸ்),ரசனாப்.


* பஞ்ச ஆயுதங்கள்(மகாவிஷ்ணு) -                  

சங்கு, சக்கரம், கதை, வாள், வில்.


* பஞ்ச நிலங்கள் -               

குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை.


* பஞ்ச காப்பியங்கள் -         

மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி, சிலப்பதிகாரம்.


* பஞ்சமா பாதகங்கள் -             .

காமம்,கள்ளுண்டல்,களவு,கொலை,பொய்.


* பஞ்ச சயனம் -                             

அழகு,குளிர்ச்சி,வெண்மை,மென்மை,மணம்.


* பஞ்ச புராண ஆசிரியர்கள் - 

நால்வர், கரு ஆருத்தேவர், சேத்தனார், சேக்கிழார், கச்சியப்பர். 


தொகுத்தளித்தவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ,


அன்புடன் கருணாகரன் 

3 comments:

Dr.kr said...

பஞ்சாயத்து?...பஞ்சாட்சரம் ?..............

Dr.kr said...

மறக்கலாமா பஞ்சாட்சரத்தை கருணாகரா ?

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

தங்களின் சுட்டுதலுக்கு (குட்டுதலுக்கு) நன்றி , சேர்க்கப்பட்டுவிட்டது , பஞ்சாட்சரம் .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...