என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, April 10, 2018

கிரிவலமாகும் திருவலம்

திருவலம்.

உலகத்தின் தந்தையாகிய எம்பிரான் ஸ்ரீ சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் திருவண்ணாமலை மிக உயர்ந்ததாக கருதப்படுகின்றது.

காரணம் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியின் ஸ்தலமாக மேன்மைமிகு திருவண்ணாமலை விளங்குகின்றது .

பஞ்சபூதங்களில் அக்னிக்கு என்ன தனி சிறப்பு ?

பஞ்சபூதங்களில் மற்ற நான்கும் (காற்று,நீர்,ஆகாயம்,நிலம்) எதனுடன் சேர்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் தன்மைகளை கொண்டது.

நீர் கெட்ட நீருடன் கலக்கும்போது கெட்டநீர் ஆகின்றது.

நிலமும் அவ்வாறே கழிவுகளோடு கலக்கும் போது அசிங்கமடைகின்றது.

வானம் மேகங்களோடு சேரும் போது களங்கப்படுகின்றது.

காற்று எதன் மீது தழுவி தவழ்ந்து வருகின்றதோ அதன் வாசனையை சுமந்து செல்லும் . அதனால் காற்றும் மாசடைகின்றது 
.
ஆனால் அக்னி மட்டும் எதனோடு சேர்ந்தாலும் சேர்ந்ததை அக்னியாகவே மாற்றி விடும் தன்மையை கொண்டது.

அது மட்டுமல்ல எப்படி இருந்தாலும் மேல் நோக்கியே நிற்கும் நிலையை தன்னகத்தே கொண்டது. 

ஆகவேதான் உயர்நிலையை அடைய விரும்பும் ஆன்மாக்கள் அக்னியின் ஸ்தலமான திருவண்ணாமலையை விரும்பி நாடுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்து சிவபெருமான் கோவில்களும் அக்னியின் தன்மையையும் பெற்றே இருக்கின்றது.

பலரும் கிரிவலம் செல்கின்றார்கள். கிரி என்றல் மலை, வலம் என்றால் சுற்றி வருதல், 

ஆகவே மலையை சுற்றி வருவதை வலம் வருதல் என்கின்றோம்

திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய முடியாதவர்கள்.

தங்களது ஊரில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமான் கோவில் உள்ள வீதியை சுற்றி வலம் வருவது சிறப்பாகும்.

இதற்கு திருவலம் என்று பெயர் .

இறைவனார் அமைந்துள்ள கோவிலை சுற்றிலும் உள்ள வீதி திரு வீதியாகும். திருவீதியை வலம்வருதல் திருவலமாகும்.

கிரிவலத்திற்கு நிகரான பலன்தரும் இந்த திருவலத்தினை உங்கள் ஊரிலும் செய்யலாமே.

பௌர்ணமி அன்று சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக 
கைகளில் ஏற்றிய ஊதுபத்திகளின் மனம் கமழ ஏந்தியபடி ஸ்ரீ ஸ்ரீ சிவபுராணம் பாடிக்கொண்டு மெல்ல நடந்து 

தங்களது ஊரில் உள்ள
ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமானின் திருக்கோவிலை மூன்றுமுறை வலம் வருவது மிகவும் சிறந்தது.

கிரிவலம் ஒருமுறை வலம் வரும்வோம், திருவலம் மூன்று முறைகள் வலம் வரவேண்டும்.

திருவண்ணாமலையின் எம்பிரான் ஸ்ரீ ஸ்ரீ அருணாசலேஸ்வரர் எம்மாதிரியான வரம் தருவாரோ அதனை 

உங்கள் ஊர் சிவபெருமானும் தந்து மகிழ்வார்.

ஓடாமல் மெல்ல நடந்து 
ஸ்ரீஸ்ரீ சிவபுராணம் சொல்லி 
வலம் வந்து சகல நலமும் வளமும் பெற்று 
நிம்மதியுடன் சிவனருள் பெற்று வாழ வாழ்த்துகள்.

ஓம் நமசிவய. 
            


Tuesday, February 6, 2018

உணவு கட்டுப்பாடு ஏன்



ஓம் நமசிவய ,
உணவுக்கட்டுப்பாடு விரிவான விளக்கம் :
உணவு கட்டுப்பாடு என்பது சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதாகின்றது.
அசைவ உணவை அறவே விட்டொழிக்க வேண்டும் அப்போதுதான் ஆன்ம பலம் ஏற்படும்.
காரணம் என்ன ?
அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் நம்மை நம் நிலையில் இருந்து மேலேற விடாமல் செய்யும்..
ஞான ஸித்தி கிடைக்கப்பெறாமலே போய்விடும்.
வேறென்ன நடக்கும் ?
மேலும் நமது கலாச்சாரமும், தர்மமும் மறுபிறப்பையும், யாரும் விதியின்படி எதுவாகவும் பிறக்கலாம் என்பதையும் போதிக்கின்றது.
அதன்படி நமது உற்றார், உறவினரே நாம் உண்ணும் இறைச்சியாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதால் நாம் இறைச்சி உண்பதை தவிர்ப்பது நம்மை மேலும் பல பாபங்களிலிருந்து காக்கும்.
ஆகவே மாமிசம் உண்பது தவிர்க்கவேண்டும். சைவபிரியாணி போன்றவற்றையும் உண்பது ஆகாது.
சமரசம் என்பது எவ்வாறெனில்,
நம்மை விட மற்றவர்களை நன்றாக வைத்துள்ளார் எனும் குணம் கூடாது .
எல்லோரையும் நன்றாகவே இறவன் வைத்துள்ளார்.
இறைவனார் அவரவர்களுக்கு உரியதை கொடுத்துள்ளார் .
மதம் என்பது நம்மை சமணப்படுத்துவது மட்டுமே.
மதமே, ஞானம் தருவதோ , ஆன்மீக முதிர்ச்சி தருவதோ இல்லை.
மதம் என்பது காலண்டரில் உள்ள கிழமைகளைப்போல அவ்வளவே .
அதை மீறி அதில் வேறொன்றும் இல்லை.
இன்று திங்கள் கிழமை அலுவலகம் செல்லும் நாள் ஆனால் எல்லோரும் போவதில்லை, பணியாளர்கள்அலுவலகம் போகின்றார்கள், மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்கின்றார்கள்.
ஞாயிறு விடுமுறைநாள் ஆனால் எத்தனை பேர் விடுமுறையில் இருக்கின்றார்கள்.
வண்டி இழுப்பவரும் சுமை தூக்குவோரும் என்றைக்கு ஞாயிறு விடுமுறையை கொண்டாடினார்கள்.
அதுபோலவே மதமும் மனிதனுக்கு எதையும் போதிப்பதோ மாற்றுவதோ இல்லை.
மாற்றம் மனிதனிடம் உருவாகவேண்டும்.
ஆக மதம் மனிதனை சமணப்படுத்துவது.
எப்படி சமரசம் கொள்வது ?
குதர்க்க மற்ற மனநிலையை மனிதன் பெறவே மனிதன் முயலவேண்டும்.
எல்லோரையும் சமமாக எண்ணும் எண்ணங்களால் மனம் நிறைய வேண்டும்.
இறைவனார் யாரையும் பிரித்துப்பார்ப்பதில்லை எல்லோரையும் சமமாகவே பார்க்கின்றார், நடத்துகின்றார் .
ஞானம் பெறவும், மோட்சம் பெற்று அவரை அடையவும்,
மனிதனும் சமரசமாகவும் மனம் சமாதானமாகவும் இருப்பது அவசியமாகின்றது.
பொறாமையோ துர்குணங்களோ அற்ற இறைவனாரை நாட வேண்டுமானால்,
நாம் அவ்வாறு இருப்பது அவஸ்யமாகின்றது.
நாம் துர்குணங்களோடு உள்ளவரை இறைவனாரை சேர்வது என்பது,
பகலில் முழு நிலவை காண எண்ணுவது போலாகும்.
ஆகவே சமரசம் நமது குணமாகவேண்டியது மிக அவஸ்யம்.
பூர்ண ஸ்வசதந்திரமே சமரசமாகும்.
நம்முள் எந்த தீயஎண்ணமோ,
செய்கையோ ,
சொல்லோ இல்லாதிருத்தலே
முழுமையான ஸ்வசதந்திரம் ஆகும்.
முழுமையான ஸ்வதந்திரம் என்பது முழுமையான சமரசம்.
சமரசம் உள்ள நெஞ்சில் ஆனந்தம் ஆட்சி கொள்கின்றது.
அங்கே ஏக்கம் இல்லை
துக்கம் இல்லை
தேவை இல்லை அதனால்
துரோக சிந்தனை இல்லை.
எதிலும் சமரசம் கொள் மனமே.
இறைவனாரை உன்னுள் காண்பாய். ஓம் நமசிவய. 
Related Posts Plugin for WordPress, Blogger...