ஓம் நமசிவய
வரும் (20.09.2017)அமாவாசை வரையில் நமது பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க வாய்ப்பு உள்ளது .
தவற விடாதீர்கள்.
வாழ்வில் வரும் எதிர்பாராத விபத்துக்கள் , திடீர் வியாதிகள், செலவுகள், குடும்ப பிரிவினைகள் , ஓயாத சண்டைகள் , மனக்கலக்கம் , மரண சம்பவங்கள், தொழிலில் முடக்கம் கடன் , வியாபார நஷ்டம் போன்ற பலவித துன்பங்களையும் தருகின்ற
பிதுர் தோஷம் எனும் மகா துயர்தரும் நிகழ்வினை இல்லாமல் செய்ய இந்த வாய்ப்பு மனிதர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கப்படுகின்றது
பயன்படுத்தி தோஷம் நீக்கி மகிழ்ச்சியை பெருக்கி நீங்களும் உங்கள் சந்ததியும் நலமுற்று வாழுங்கள் .
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஓம் நமசிவய
புரட்டாசி மாத 15 நாட்களும் நமது மூதாதையர் நாம் நிச்சயம் தருவோம் எனும் மாபெரும் நம்பிக்கையில்,
நாம் தரும் திதி தர்ப்பணத்திற்காக -
ஸ்ரீ எம தர்மராஜரால் அனுமதி தரப்பட்டு பூலோகம் வருகின்றார்கள்.
இராமேஸ்வரம் காசி கயா சென்று முறையாக திதி தர்ப்பணம் செய்தவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் நிச்சயமாக இந்த அருமையான வாய்ப்பினை பெரும் பேறாக கருதி
திதி தர்ப்பணம் தாருங்கள்.
------------------------------------------------------------------------------------
பிறப்பின் பயனாக இறப்பினை அடைந்த முன்னோர்களின் ஆன்மா அமைதியை பெற அவரது வழியில் வந்த உறவுகள் அவர்களுக்கு செய்யும் புண்ய கார்யமே திதி தர்ப்பணம் ஆகும்.
புரட்டாசியில் வரும் பௌர்ணமிக்கு மறுநாள் துவங்கி அமாவாசை வரை முன்னோர்களின் ஆன்மாக்களை உறவுகள் தருகின்ற திதி தர்ப்பணத்தை வாங்கிக்கொள்ள அனுமதித்து முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமி நோக்கி இறங்கி வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவ்வேளையிலும் நாம் அவர்களுக்கு திதி தர்ப்பணம் தரவில்லைஎன்றால் அவர்கள் மனம் நொந்து மேலுலகம் சென்று வெஞ்சிறையில் வாடுவார்கள்.
அவர்களின் கோபம் நமது வாழ்வில் பல வழியிலும் துன்பங்களை தரும்.
ஆகவே இந்த மகாளய பட்ச அமாவாசையில் மறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தமுற திதி தர்ப்பணம் செய்து அவர்களின் அன்பை பெற முயல்வோம்.
ஓம் நமசிவய.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
வேறு பதிவுகளில் வந்த விளக்கம்.
"மகாளயம்’ என்றால் "கூட்டமாக வருதல்’. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய பட்ச அமாவாசை எனப்படுகின்றது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம்.
ஆனால்,
மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூறவேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.
அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர்,
தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை.
அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும்.
அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.
மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்
2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் – சஷ்டி – புகழ் கிடைத்தல்
7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் – தசமி – நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்
13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல!
நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
இதைவிட பெரிய ஆனந்தம் நமது முன்னோர்கள் நம்மோடு அடிக்கடி வந்து நன்மைகளை செய்து மகிழ்வார்கள்.
ஓம் நமசிவய.