என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, October 22, 2012

அன்பானவர்களே! சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2

அன்பானவர்களே! ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வழிபாட்டு முறைகள் -2


அன்பு நண்பர்களே, 

ஸ்ரீ ஸ்ரீ சிவன் கோயில் வலம் வருதல் பற்றிய வழிபாட்டு முறையின் தொகுப்பினை தொடர்ந்து காண்போம்.



நாம் இப்போது திருக்கோயில் கொடிமரம் வரை வந்து விட்டோம்.


உள்ளே செல்வதற்கு திருக்கோயில் வாசல் திறந்தே இருக்கும் ஆனாலும் கோயிலின் திருக்காவலராகிய நந்தியம்பெருமானின் உத்திரவு பெறாமல் உள்ளே செல்லக் கூடாது.
     ஸ்ரீ சிவாலயங்களில் வழிபட வருவோரைச் சமயம் பார்த்து உள்ளே விடுவதற்குரிய அதிகாரம் பெற்றவர் திருநந்தித்தேவர். அதனால் அவரை அதிகார நந்தி என்றும் கூறுவர். இவர் நெற்றிக் கண்ணும், நான்கு தோள்களும், இடபத்தின் முகமும், தேவ உடலும் கொண்டு கையில் கத்தியும், பிரம்பும் தாங்கி காட்சி அளிப்பார்.
     இச்சிறப்பெல்லாம் இவர் சிவபெருமானால் என்பதை

 மற்றிணையில் லாக் கயிலைமலை நாதன் நந்திக்கு
  நெற்றியிற்கண் நாலுபுயம் நெருப்புருவம் பிறைகொண்முடி
  சற்றுமொரு குறைவிலாச் சாரூபம் பணிந்தருளிப்
  பெற்றியினா லருட்சுரிகைப் பிரம்புமருள் செய்தனனே

எனவரும் திருவையாற்றுப் புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

     ஆனால் எல்லாகோயில்களிலும் நந்தியம்பெருமான் மேற்கூறிய தோற்றத்தில் இல்லை என்றாலும் பலிபீடம்,கொடிமரம்,அடுத்துள்ள நந்திதேவராகிய நந்தியிடம் பிரார்த்தித்து பின் உள்ளே செல்ல வேண்டும் உள்ளேயும் நேராக இறைவன் சந்நிதிக்கே சென்று விடாமல் வலம் வந்து செல்ல வேண்டும்.

பிரகார வலம் வருவதால் எல்லாவகையான அச்சங்களும், நோய்களும் விலகி அளவற்ற புண்ணியங்கள் உண்டாகின்றன என்று ஆகமங்கள் கூறுகின்றன.

அக்கூற்றுப்படி வியாதிகள் நீங்க முற்பகலிலும், இஷ்டசித்திகளை அடைய நண்பகலிலும், பாபங்கள் தொலைய பிற்பகலிலும், வீடு பேறடைய அர்த்த ஜாமத்திலும் வலம் வர வேண்டும் என்பதை அறிகிறோம்.

அடுத்து வலம் :

     வலம் வரும்போது மூல மூர்த்திக்கும், நந்தி, பலி பீடங்களுக்கு இடையில் புகுந்து வலம் வருதல் கூடாது. இதைப்பற்றிக் கூறும்போது
நூல்களில்  சமீபத்தில் பிரசவிக்கக் கூடிய பெண் ஒருத்தி நிறைந்த எண்ணெய் குடம் ஒன்றைத்தாங்கி நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படி நடந்து வலம் வர வேண்டும் என்று தெரிவிக்கின்றன. எப்பொழுதும் திருக்கோவிலை மூன்று முறை வலம் வருதல் நல்லது. வழி பாட்டின் பலனை முழுமையாகப் பெற நாம் சண்டேசுவரர் சந்நிதியில் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அவர்தான் சிவபூசையின் சிறப்பை உணர்த்தியவர், அதனாலேயே சிவபெருமான் அவருக்கு அடியார்களுக்கு வழிபாட்டு பயனை அளிக்கும் சண்டீச பதத்தை அருளினார். அவர் சதாசர்வ காலமும் சிவா தியானத்திலேயே இருப்பதால் நாம் வந்திருப்பதை அவருக்கு உணர்த்த இடது உள்ளங்கையில் வலது நடு மூன்று விரல்களால் ஓசை வராமல் மூன்று முறை தட்டி (தொட்டு) வருகையை தெரிவிக்கவேண்டும், பின்னர் நமது வேண்டுதல்களை தெரிவிக்க வேண்டும்.
    
ஆலயத்துள்ளே கீழே வீழ்ந்து வணங்குதல் கூடாது. வலம் வரும்போது ஸ்தூபி, கொடிமரம், ஆகியவற்றின் நிழலையும், ஸ்வாமி மீதிருந்து களைந்த நிர்மால்யத்தையும் மிதிக்காமலும், தாண்டாமலும் வலம் வரவேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் மேலே சொன்ன நிழல்களின் ஐந்தில் மூன்று பாகம் நீக்கி மற்ற இரண்டு பாகத்தில் செல்லலாம்.

 உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் 
சண்டீசனுமாம் பதந் தந்தோம்

என்று சிவபெருமானே இவருக்கு அருள் புரிந்திருப்பதால் சிவபெருமான் திருமேனியிலிருந்து பிரசாதமாகப் பெற்ற நிர்மாலியத்தை ( திருநீறு,பழம்,பூ போன்றவைகளை ) சண்டேசுவரர் முன் சமர்ப்பித்து அவர் திருவருளோடு அதனைப் பெற்று= கொண்டு வணங்கி விடைபெறுதல் வேண்டும். இத்தகைய செயல்களையும், இவைபோன்ற செய்யத்தகாத காரியங்களையும் பெரியோர்கள் வாயிலாக கேட்டறிந்து செய்வது மிகவும் நலமளிக்கும்.

இந்த அளவில் சிவ வழிபாடு நிறைவடைகிறது. விநாயகரிடம் குட்டோடு ஆரம்பிப்பது சண்டீஸ்வரரிடம் தட்டோடு பூர்த்தியாவதாக ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

இவ்வாறு ஆலயத்துள் வழிபாடு நிகழ்த்தி பூர்த்தி செய்ததும் சிவ சிந்தனையோடு திரும்பி மீண்டும் பலிபீடத்தருகில் வீழ்ந்து வணங்கி வரவேண்டும். வணங்கி முடிந்ததும் உடனே வந்து விடக் கூடாது. ஏனென்றால் நாம் கோயிலுள் நுழைந்த உடன் நந்தியம்பெருமான்   அருளாணைப்படி நந்தி கணத்தவர் நமக்கு உடனிருந்து வழிபாடு செய்வித்தார்கள் அல்லவா? அவர்களை நாம் அலட்சியம் செய்ததாக எண்ணுவர். ஆகையால் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்து நந்தி கணத்தவரை வணங்கி விடை பெற்று தூய மனத்துடன் வீட்டிற்கு வருதல் வேண்டும்.


இனி சிவன் கோயிலில் முறையாக வலம் வருவோமே,பயன் அடைவோமே.


அன்புடன் கருணாகரன்6 , இடைப்பாடி 


Saturday, October 20, 2012

நாம் யாரென்றே விளங்காத


அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

இன்றுள்ள நிறைய ப்ளாக்குகளில் இந்து மதத்தையும் , அதனுடைய தோற்றம் , அதன் வழிபாடு , அதன் வழிமுறைகள் , அதன் இறையாண்மை போன்ற பலவற்றையும், கிண்டலும், கேலியும் செய்வதை சில அரைவேக்காட்டு மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள் .

இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை ! 

தான் வந்த ஒரு மதத்தை தானே கேவலமாக எழுதுவதும் , பேசுவதும் , தன்னை பெற்ற தாயை மகனே தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் ஒன்றே அன்றோ ! 

தான் மிகவும் நியாயமான மனிதன் பிற மதத்தார் மதிப்பர் என 
எண்ணுகின்றனறோ என்னவோ !

எந்த ஒரு வேற்று மதத்தாரும்  தன்னுடைய மதத்தை இந்துக்களைப் போல் பரிகசிப்பதில்லை , ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை .

எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்குமுன் அதனுடைய முழுமையையும் அறியாமல் தன்னுடைய புத்திக்கு எட்டியதை எழுதுவதும் , விமர்சிப்பதுவும் ஏதோ கூகுளில் நமக்கு ஒரு இலவச ப்ளாக் தந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் உளறிக் கொட்டும் மறைகழண்ட மண்டையர்களாகத்தான் நினைக்க வைக்கின்றது.

இந்துக்கள் பொறுமையின் இலக்கணத்திற்கு உட்பட்டு உள்ளதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் - நாம் எங்கிருந்து எழுதுகிறோம் என்று தெரியவாபோகின்றது என்றெண்ணி கன்னாபின்னா என்று எழுதுகின்றார்கள் போலும் .

கண்ணை மறைத்தோ , தன்னை மறைத்தோ எதை செய்தாலும் பூமிக்குள் போட்ட விதை பூமியை துளைத்து வெளி வருவது போல் - 

இன்றில்லாவிட்டாலும்  ஒருநாள் உங்கள் வினைகளுக்கு உண்டான பலனை , இயற்கையே , எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடி தரும். 
அப்போதுதான்  மதம் என்றால் என்ன , மானுடம் என்றால் என்ன என்று புரியும்.


அன்புடன் உங்கள் 

Wednesday, October 17, 2012

ஆழ்மனத்தின் அற்புதசக்திகள்

திரு.என். கணேசன் அவர்கள் எழுதிய ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் தொடரை 

கீழ்காணும் 

இணைப்புச் சுட்டி 

யை சொடுக்கி காணுங்கள் , படித்து பயன்பெறுங்கள்.

இந்த தொடரில் மொத்தம் அறுபது அற்புதமான கட்டுரைகள் உள்ளது .

மனித மனதின் அசாதாரணமான சக்தியை படம் பிடித்துக் காட்டும் அனைத்து கட்டுரைகளையும் பொறுமையாக படியுங்கள்.

நமது மனம் பற்றிய அதிசயமான சக்திகளை காணுங்கள் .

நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புங்கள்.  



அன்புடன் உங்கள் 
Related Posts Plugin for WordPress, Blogger...