என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, January 28, 2014

லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள்




பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் (LAL KIDAB) சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.



திருமணம் தாமதமாகி கொண்டுள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :

1.இரவில் கண்ணாடி டம்ளர் முழுவதும் நீர் நிரப்பி படுக்கச் செல்லும் முன்பு தலையனை அருகில்வைக்க வேண்டும். காலையில் ஏதாவது ஒரு மரத்தின் வேரில் (அரசமரத்தின் வேர்) ஊற்ற வேண்டும். 43முறை செய்ய வேண்டும்.

2.வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவையான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

3.வெள்ளியிலான செயினை கழுத்தில் அணிய வேண்டும்.


4.பசுமாட்டிற்கு சாமை அல்லது தெனை இவைகளின் பச்சை இலைகளை அவர் கைகளால் தானம்படைக்க வேண்டும்.

சிவனருள் கருணாகரன்.

Tuesday, January 14, 2014

தீராத கடன் தீர எளிய வழி

தீராத கடன் தீர எளிய வழி : 


செவ்வாய்க்கிழமை , அசுவனி நட்சத்திரம் , மேஷம் இலக்கினம் கூடும் நாளில் நமக்கு 

கடன் தந்த நண்பருக்கு ( நாம் தரவேண்டிய தொகை எவ்வளவாக இருந்தாலும் சரி ) 

ஏதேனும் ஒரு சிறு தொகையை திருப்பித் தாருங்கள் , வட்டியில் அல்ல - நாம் 

தரவேண்டிய முதலில் . அப்புறம் பாருங்கள் , அந்த கடன் சிறுக சிறுக அடைபட்டுவிடும். 

இதைப்போலவே ,


விருச்சிக இலக்கினமும் , அனுஷ நட்சத்திரமும் கூடும் நாளில்திருப்பி கொடுத்தாலும் 

விரைவில் அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அடைபட்டு விடும். 

முயன்றுதான் பாருங்களேன்.(இங்கு எந்த கிழமையாக இருந்தாலும் ஓகே )

***********************
முதலில் குறிப்பிட்ட அந்த நாள் வருகின்ற 01.04.2014 காலையில் 07:06 முதல் காலை 08:06 

வரை இருக்கின்றது .

இரண்டாவது குறிப்பிட்ட விருச்சிக இலக்கினம் - அனுஷ நட்சத்திரம் 15.05.2014 மாலை 

06:40 முதல் இரவு 08:30 வரை உள்ளது .

************************
வாழ்த்துகள் .

அன்புடன் கருணாகரன் .

Friday, January 3, 2014

உயிரின் வருகையும் – புறப்பாடும்


முகநூலில் திவாகர் ரகுநாதன் : வணக்கம் ஐயா, மேலும் ஒரு விளக்கம் தேவை, நம் உடலை பிரிந்த உயிரின் நிலை என்ன?

அன்பு நண்பர்களே, வணக்கம்.

உயிரின் வருகையும் – புறப்பாடும் .

நம் உடலை பிரிந்த பின் உயிர் அடையும் நிலை என்ன ? என அறிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் நம் உடலை உயிர் வந்து சேர்வதை அறிய வேண்டும்.

ஒரு உயிர் எப்படி உடலுக்குள் வந்து சேர்கிறது ?
எந்த அடிப்படையில் உயிர் உடலை தேர்ந்தெடுக்கின்றது ?
மண்ணுலகில் இடைவிடாது நடைபெறும் இந்த ரகசிய தேர்ந்தெடுப்பு யாரால் நிறைவேற்றப்படுகிறது ?

புதிய உயிர் என்று ஏதும் இல்லை – இன்று பல்கிப் பெருகி நிற்கும் அத்தனை உயிர்களும் ஆரம்ப உயிரின் பிரதிகளே –

ஒரு மனிதனின் பாபங்கள் தனித்தனி பிறப்பாகவும் , அவன் செய்த புண்ணியங்கள் ஒரே பிறப்பாகவும் உருப்பெறுகின்றது.

பாபங்களும் புண்ணியங்களும் அற்றதான நிலையில்தான் மனிதன் பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான்.

காரணம் பாபங்கள் இருந்தாலும் , புண்ணியங்கள் இருந்தாலும் அது இல்லாமல் போக பிறப்பெடுத்தே தீரவேண்டும்.

ஒரு உயிரானது தான் வாழ்ந்த உடலைப் பிரிந்த பின் காற்றுடன் காற்றாக கலந்து விடுகின்றது.

காற்றானது இதுபோல தன்னுள் வந்து சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களோடு பெரும் பயணமாக வானவீதியில் பயணித்து அந்த உயிர்களை எல்லாம் இந்த பால்வழியில் (Milky Way) உள்ள வான மண்டலத்தில் சேர்த்து விடுகின்றது. இறந்த உயிர் உடனே பிறப்பதில்லை–(ஒன்றிரண்டைத் தவிர).

இறந்த உயிரின் வாழ்ந்த கால கணக்குப்படி , அதன் பாப புண்ணியங்கள் ஆராயப்பட்டு (இங்கே வேறெதுவும் பார்ப்பதில்லை) இந்த நிலையில் வாழ்ந்த உயிர், தான் செய்த பாபங்கள் அல்லது புண்ணியங்களுக்கான பலன்களை அனுபவிக்க, எந்தெந்த தாய் தந்தையருக்கு பிறந்தால் , உயிர் செய்த அந்த பாபங்கள் , புண்ணியங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையுமோ அந்த அந்த வீட்டில் பிறக்க வைக்கப்படுகிறது.

அது எப்படி என்றால் ....

வானுலகில் சென்று ஒரு ப்ரிஜ்ஜில் வைத்தது போல வைக்கப்பட்ட உயிர்கள் சூல் கொண்ட மேகமாகி – அது இந்தியாவில் இறந்திருந்தாலும் சரி , உலகில் வேறு எந்த இடத்தில்  இறந்திருந்தாலும் சரி – தற்போது எங்கு பிறக்க வைக்க வேண்டுமோ அந்த நாட்டிற்கு , அந்த ஊருக்கு , அந்த தெருவுக்கு , அந்த வீட்டிற்கு , அந்த தம்பதிகள் வாங்க இருக்கும் காய்கறிகள் விளைய இருக்கும் நிலத்திற்கு மழையாக பொழியப்படுகின்றது.     

அந்த மழை நீரின் சக்தியை உறிஞ்சி வளர்ந்த காய் , கீரை , பழங்கள் அந்த குறிப்பிட்ட தம்பதியரால் உண்ணப்பட்டு முதல் நாள் செரித்து , இரண்டாம் நாள் , மூன்றாம் நாள் ரத்தமாகி , பின் நாதமாகி , விந்தாகி அவரவர் உடலில் தங்கி , தம்பதிகள் சேரும் நாளில் ஒன்று கலந்து குழந்தையாக உருவாகின்றது .

இது எனது கற்பனையல்ல – பிரஜோர்பத்தி இப்படித்தான் நடக்கின்றது என ஜோதிட , சாஸ்திர நூல்கள் குறிக்கின்றன.

இப்படி உருவாகும் போதே ஒவ்வொரு மாதமும் , ஒவ்வொரு க்ரஹமும் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்குகின்றன.

உடலில் எந்த உறுப்பு அல்லது நிலைப்பாடு அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதற்குரிய க்ரஹம் முழுபலத்துடன் இருப்பதாக புரிந்து கொள்ளல் வேண்டும்.

ஸ்ரீசனி பகவானின் ஆதிக்கத்தில் பிறக்கும் குழந்தைக்கு பிறக்கும்போதே தலையில் முடி அடர்த்தியாக நிறைந்து காணப்படும். இப்படியாக ஒவ்வொரு கிரஹமும் ........................

இப்படியாக வளர்ந்த உயிர் தனது முன் ஜென்ம வினைகளின்படி வாழ்ந்து தனது பிறப்பின் காரணத்தை புரிந்தோ புரியாமலோ , வந்த பணியை முடித்தோ , முடிக்காமலோ , தான் கொண்ட உடலை பிரிய வேண்டிய  காலம் வரும்போது என்ன நடக்கின்றது ?

இந்த உடலை விட்டு , இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உயிர் உடலை விட்டு பிரியும்.

மனித உடலில் பத்துவித காற்றுகள் உண்டு . இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன.

உயிர் வெளியே புறப்படும் நாள் , நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு , எல்லாவித காற்றின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக . . . .

ஒரு வீட்டை நாம் காலி செய்யும்போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டுவந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல , நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் , ஒவ்வொன்றாக நிறுத்தி , நமது நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும்.

சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .

ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு , அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு , எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழிக்கு சொந்தமான பத்தாவது காற்று உயிரை உடலை விட்டு வெளியே அழைத்து செல்லும் , அதனுடனேயே அந்த காற்றும் சென்று விடும் . அந்த காற்று, தன்னுடன் கொண்டு செல்லும் உயிரை காற்று மண்டலத்தில் உள்ள அந்த உயிருக்குரிய இடத்தில் சேர்ப்பித்து விட்டு அதனுடையே தங்கி , மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் .

அந்த காற்றினைத்தான் நாம் ஆன்மா என்கிறோம். (உயிர் வேறு ஆன்மா வேறு).

ஆன்மா உயிரைவிட்டு எப்போதும் பிரிவதில்லை , உயிர்தான் உடல்களை  விட்டு பிரிகிறது. புனரபி ஜனனம் , புனரபி மரணம் .  

இவ்வாறாக உடலை பிரிந்தபின் உயிரின் நிலை அமைகிறது .
பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது.

பாபங்களும் , புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும் , அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான நிலையாகும்.

அந்த நிலையை எல்லோரும் இப்பிறப்பிலேயே அடைந்திட விரும்பு கின்றேன்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.

Wednesday, January 1, 2014

ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?

அன்பு நண்பர்களே , வணக்கம்.
ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?

கோவில்களிலும் , மணிமாலை விற்பனை செய்யும் கடைகளிலும் , காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற விற்பனை நிலையங்களிலும் ஸ்படிகமணி மாலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ? அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால் என்ன பயன் ? அதனை ஏன் அணிய வேண்டும் ? பார்க்கலாம்.
படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும் வேறு வேறு.
சிறு சிறு காயங்கள் படும் இடத்தில் படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக தடவினால் காயமான இடம் செப்டிக் ஆகாமல் தடுக்கப்படும். இதனை பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம்.
சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். மேலும் சில சித்த வைத்திய தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது .
ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது.
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில் உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும் , பட்டைதீட்டியும் தயாரித்து அதில் துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது.
இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின் பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை கொண்ட தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம் தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத உள்ளே புகையோ , கருப்போ இல்லாத சுத்தமான ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை செய்கிறார்கள் .
இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது , நீரோடு நீராக ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது.

முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன.
முதல் தரமாலை 108 மணிகளைக் கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.300 முதல் கிடைக்கிறது.
அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும், நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் , முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது.  
பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில கடைகள் நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக சாதாரணமான ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள். அது நல்லதல்ல.
துல்லியமற்றதும் , ஊடுருவும் தன்மையற்றதும் , வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும்.
அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில் ?

மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?
சராசரியாக 21,600 மூச்சாகும்.
நாம் சரியான விகிதத்தில் மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600 மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால் ஆயுள் குறையும்).
இந்த ஸ்படிக மணி ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 21600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.
அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள்.
ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும் முழுமையான கவசமாக முதல்தர ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.
அதனால் என்ன ?
தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய கருவியாகும்.
மேலும் ..
ஸ்படிகமணி மாலை அணிந்து கொண்டவர்களுக்கு , அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள் கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான செய்தியும் , காட்சியும் அவர்களுக்கு உள்ளே புகமுடியாது , அதனால் அவர்களை பாதிக்காது. இல்லாவிடில் ஒருவர்  கேள்விப்படும் அல்லது அவரிடம் சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த சோகமான செய்தியும் அவரை பல நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும். (இது உபாசகர்களுக்கு பொருந்தும்.)
இது ஒரிஜனலான முதல்தர ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே பொருந்தும்.
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது .(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கீழே உள்ளது போல் அணிவது தவறு. 

கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது.
கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான பலன் பெறுங்கள்.
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.  
Related Posts Plugin for WordPress, Blogger...