என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, June 4, 2013

உடலெனும் அதிசய கருவி

அன்பு நண்பர்களே , வணக்கம்.

உடலெனும் அதிசய கருவி .
ஆம் . நமது உடலெனும் அதிசய கருவியைப் பற்றித்தான் இந்த கட்டுரை .
எல்லோரும் இந்த உடலைப்பற்றி முடிந்தவரை சொல்லியாகிவிட்டது, புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்றுதானே நினைக்கின்றீர்கள் ?
நிறைய இருக்கிறது !!!
நமது உடல் ஒரு அற்புதமான பொக்கிஷம் .
நமது உடல் ஒரு அதிசயமான செயல்பாட்டு கருவி.
நமது உடல் தோண்ட தோண்ட குறையாத ஒரு புதையல் குவியல்.
அதனால் யார் எவ்வளவு சொல்லியிருந்தாலும் அது குறைவுதான்,  சொன்னாலும் குறைவுதான்.
பொதுவாகவே உடலின் ஒவ்வொரு செயல்களும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றது .
ஒருவர் அனாயாசமாக செய்யும் செயலை மற்றவர் மிகுந்த சிரமத்தின் பெயரிலேயே செய்ய முடிகிறதைப் பார்க்கின்றோம். ஒரு சிலரால் செய்யவே முடிவதில்லை .
எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடலின் அமைப்பு அமைந்தாலும் , செயல்திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை . காரணம் எதுவாக இருந்தாலும் பொதுவான பதில்:
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட செயல்திறன்தான்.
ஒரு ஆசிரியரிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஒரே பாடத்தினை முறையாக படித்தாலும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை பெறுவதில்லை.
ஒரு குருவிடம் பயிலும் சிஷ்யர்கள் கூட குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட கால அவகாசம் என முறையோடு, கிரியாக்களை சிரத்தையாக பயின்றபோதும் பயற்சியின் முதிர்ச்சி காலத்தில் ஒரே மாதிரியான தகுதியுடன் வெளியேறுவதில்லை . செயல்திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. சிலர் அதிகமான செயல்திறனோடும், சிலர் குறைந்த அளவுகூட செயல்திறன் இல்லாமல் இருக்கின்றார்கள். சிலர் பெயரளவில் கற்றவர்களாக உள்ளார்கள்.
ஆனால் உடலிலோ , அவயங்களிலோ , மற்ற எதிலும் தோற்றக் குறைவில்லை , ஆனால் செயல்திறன் மாறுபாடு உண்டாகின்றது.
இந்த அதிசயம் என்ன ?
சிலர் விரல் நுனியில் எல்லாவித தகவல்களையும் உள்ளடக்கி வைத்திருப்பார்கள் , கேட்கும் கேள்விக்கெல்லாம் மின்னலாய் பதில்கள் பளிச் பளிச்சென்று வரும் .
சிலர் நிறைய படித்திருப்பார்கள் , எல்லாவிஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள் ஆனால், கேள்வி கேட்டால் பதில் சொல்ல தடுமாறுவார்கள் .
சிலர் பேசத்துவங்கினால் சிரிப்பலைகள் ஓயவே ஓயாது அரங்கமே அதிரும் , சிலர் அங்கும் கூட அமைதியாக அமர்ந்திருப்பார்கள் .
ஒரு சிலர் மிக சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வார்கள் , ஒரு சிலரோ மிக பெரிய காரியங்கள் தவறாகிப் போனால் கூட அதனை அமைதியாக ஏற்றுக்கொள்வார்கள் .
சிலர் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள் , ஒரு சிலர் குழந்தைகளிடம் கூட எரிந்து விழுவார்கள் .
என்னதான் நடக்கிறது இந்த உடலுக்குள்?
கிராமங்களில் இன்றும் ஒரு நிகழ்வு உண்டு , அதாவது ஒரு கிராமத்து பெரியவரைப் பார்த்து மணி என்ன இருக்கும் என்று கேட்டால் , வானத்தைப் பார்த்து விட்டு , இவ்வளவு இருக்கும் என்பார் , அது மிகவும் சரியாக இருக்கும் , அவருக்கு கடிகாரத்தில் மணி பார்க்கக் கூட தெரியாது . ஆனால் அவர் சொல்லும் நேரம் சரியாக இருக்கும். அந்த அளவு அனுபவ ஞானம் .
நாம் கையிலேயே கடிகாரம் கட்டிக் கொண்டிருப்போம் , இருந்தாலும் நேரம் சொல்வதாக இருந்தால் கடிகாரதைப் பார்க்காமல் இவ்வளவு என்று சொல்ல முடியாது . இதனை அனுபவக் குறைவு என்று சொல்ல முடியாது , சரியான கணிப்புத் திறன் குறைவு.
எப்படி நேர்கிறது இந்த மாறுபாடு?
ஒரு சில குழந்தைகள் கூட சிறு வயதிலேயே பெரியவர்களைப் போன்ற நடை உடை பாவனைகளுடன் கம்பீரமாக இருக்கின்றன. ஒரு சில பெரியவர்களிடம் சிறு குழந்தைகளைப் போல பாவனை காணப்படுவதுண்டு .
ஒரே வீட்டில் உள்ளவர்களுள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்கள் கொண்டுள்ளதை பார்க்கின்றோம் , ஒருவர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார் , ஒருவர் மிகவும் சோம்பலாக இருப்பார் , ஒருவர் மிக ஆச்சாரமாக இருப்பார் , ஒருவர் குளிப்பதற்கே பலநாள் ஆகும்.
இப்படி ஒரு வீட்டில் உள்ளவர்களே மாறுபடும் போது இந்த மாபெரும் உலகில் உள்ளோருக்குள் ஒரே மாதிரியான எண்ணங்களும் , செயல்திறனும் எப்படி இருக்கமுடியும் ?
இத்தனை அதிசயங்களை நிகழ்த்தும்படி இந்த உடலில் அப்படி என்னதான் உள்ளது ?
நமது உடல் பலவகையான் அதிசய கோட்பாடுகளைக் தன்னகத்தே கொண்டுள்ளது .
தனக்குள்ளே வருகின்ற உணவின் அடிப்படையிலேயே தனது இயக்கத்தை அது நிகழ்த்துகிறது. அது எந்த வகையான எரிபொருளாக இருக்கின்றதோ அதன் குணபேதங்களை உருவாக்கிக்கொண்டு தன்னை இயக்கிக் கொள்கிறது.
சாத்வீக குணம் , தாமச குணம், ரஜோ குணம் போன்ற குணாபேதங்கள் நமது உட்கொள்ளும் உணவினாலேயே மாறுபடுகின்றன.
சுறுசுறுப்போ, சோம்பலோ , சிரிப்போ , அமைதியோ எது தேவையோ அதனை அதிகமோ, குறைவோ உண்டாக்கி வெளியே அழகாகக் காட்டுகிறது .
உதாரணமாக , மூன்று  வெவ்வேறு விதமான (A,B,O) இரத்த வகையைச் சேர்ந்த நண்பர்கள் ஒரு உணவகம் சென்று ஒரே விதமான சாப்பாட்டிற்கு ஆர்டர் தருகிறார்கள். சாப்பாடு, சாம்பார், ரசம் , பொரியல், கூட்டு , அப்பளம் எல்லாம் வருகிறது , மூவரும் உண்கிறார்கள் , வெளியேறுகிறார்கள் .
ஆனால் உள்ளே சென்ற உணவானது செரித்தலை துவக்கி , அவரவரின் உடலின் இரத்த வகையாக மாறுகிறது , ஒருவருக்கு A , மற்றொருவருக்கு B, இன்னொருவருக்கு  O , இதில் பாசிட்டிவ் , நெகடிவ் பிரிவுகளும் உண்டு.
என்ன மாயம் இது ? யார் செய்த விந்தை இது ? யாரால் முடியும் இது ? இயற்கையின் அற்புத கொடை அல்லவா?
எங்கே ஹோட்டலில் ஒரு சாதம் வாங்கி அதனை A, B, O வகை இரத்தமாக நமது விஞ்ஞானிகளை மாற்றித் தர இயலுமா ? எனக் கேளுங்கள் . செய்கிறார்களா ? பார்ப்போம்.
நிச்சயமாக முடியாது , ஆனால் இந்த உடலானது  அவரவருக்கு தேவையான இரத்தமாக மாற்றிக்கொள்ளும், அதிசயத்தை அனுதினமும் சர்வ சாதாரணமாக நிகழ்த்திக் கொண்டிருகின்றது.
என்ன ஆச்சர்யம் ?
மனித இனம் புரிந்து கொள்ள , தெரிந்து கொள்ள முடியாத விந்தைகளும் , அதிசயங்களும் நிறைந்ததுதான் நமது இந்த உடல் .
இந்த அதிசய பொக்கிஷத்தைத் தான் நாம் தினசரி பான்பராக், புகையிலை , சாராயம் , மது , கஞ்சா, சிகரெட் போன்ற கண்ட கண்ட ஆகாத விஷ பொருட்களை எல்லாம் உள்ளே செலுத்தி உடலை செயலிழக்க செய்து மகிழ்கிறோம். பின்னர் அவதிப்படுகிறோம். போனால் வராது என்பார்கள், புரிந்து நடந்தால் வாழ்வு நம் கையில் ,புரிந்தும் புரியாமல் நடந்தால் வாழ்வு? யார் கையில் ?
வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
நமசிவயம்.       

  

  


      
Related Posts Plugin for WordPress, Blogger...