பார்ப்போமா?
ஒருவர் செய்யும் கர்மாவானது (காரியம்) இந்த உலகில் நம்மோடு ஜனித்துள்ள யாரையும்,
எந்த ஜீவனையும் பாதிக்காத வண்ணமிருந்தால் அது சுபகர்மாவாகவும், எந்த ஒரு
ஜீவனையாவது பாதிக்குமானால் அது அசுப கர்மாவாகவும் உண்டாகிறது. இந்த
பூலோகமானது தன்னுள் பிறந்த எல்லாஉயிர்களுக்கும் பொதுவானது. இங்கு வாழ்வதற்கு மனிதனுக்கு உள்ளது போலவே மற்ற உயிரினங்களுக்கும் சம உரிமை உண்டு.
என்ன நாம் எண்ணிய பின் செய்கிறோம், பிற உயிர்கள் எண்ணிய உடன் செய்கின்றன.
சரி வினைக்கு வருவோம்..
எந்த ஒரு ஜீவனுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யாருக்கும், எந்த ஒரு ஜீவனுக்கும்
வாழ்வின் அமைப்பு நிலை அமைக்கப் படவில்லை என்பதை முதலில் அறிக.
உயிர் வளர்க்க தேவையான உணவு, இருப்பிடம், தொழில் என பூமியில் எல்லா
உயிர்களுக்கும் (மனிதனுக்கு + எதிர்காலம் ) அமைந்துள்ள வாழ்வியல் முறைகள்
எல்லாமே ஏதேனும் ஒரு வகையில் பிற ஜீவனுக்கு பாதிப்பைத் தரும் வகையில்
இயற்கையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
அப்படி என்றால் நாம் செய்யும் காரியம் எல்லாமே அசுப கர்மாதானா ? என்பதுதானே உங்கள் கேள்வி?
அப்படி இல்லை, அப்படி ஒரு காரியம்
நம்மை செய்ய வைத்து நமக்கு வினையை உருவாக்கும் சிறுமதி கொண்டதல்ல இயற்கை எனும்
இறைவன் மனம்.
ஒவ்வொரு நிகழ்வும்
ஒன்றன் தொடர்பாகவேதான் அமைகின்றன.
மிருகங்கள் தனது
தேவைகளை மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. உலகில் உயிரினம் தோன்றிய காலத்திலிருந்தே
உணவு, ஆடை, இருப்பிடம்
எல்லாவற்றிலும் மாற்றம் கொண்டவன் மனிதன் மட்டுமே என்பதை நினைவில் கொள்க.
ஆடு, மான், ஒட்டகசிவிங்கி, ஒட்டகம், மாடு, யானை போன்ற
விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான்.
சிங்கம், கரடி, புலி போன்ற
விலங்குகள் அன்றும் இன்றும் ஒரே உணவுதான். நாய், பூனை போன்ற விலங்குகள் மனிதனிடம் தோழமை கொண்டதால் இவைகளின் உணவில் கொஞ்சம்
மாற்றம் உண்டு.
ஆனால் மனிதர்களாகிய
நமது உணவு பழக்கம் மட்டும் பலவாறாக மாற்றம் கண்டு விட்டது. என்னென்னவோ உண்டு பழகி
இன்று எப்படி எப்படியோ ஆகிவிட்டோம்.
இயற்கையின் பாதையில் என்றுமே தவறுகள் இல்லை.
நாம் நமது எல்லையைத் தாண்டி (இயற்கை நமக்கு அளித்துள்ள) பயணப்படும் போதுதான் அது
அசுபகார்யமாக உருவாகிறது.
உதாரணமாக நமது நண்பரை அவரது உயரிய குணங்களை
மதித்து நமது வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதிக்கிறோம் – ஆனால் அவரது நடவடிக்கைகள் (நாம் அவருக்கு தந்திருக்கும்)
எல்லையை மீறும்போது நாம் அவரது குணம், பெருமை எதையும் யோசிக்கமாட்டோம் அல்லவா?
இந்த
பரந்த உலகை அளித்துள்ள இயற்கை அதனுடைய கரங்களின் உள்ளேதான் அனைத்து ஜீவராசிகளையும்
(நம்மையும் சேர்த்துதான்) வைத்துள்ளது. நாம் இல்லையென்றாலும் சரி,
ஒப்புக்கொண்டாலும் சரி உண்மை அதுதான்.எல்லா உயிரினங் களுக்கும் இயற்கை ஒரு
பவுண்டரி வைத்துள்ளது, அதை மீறி நடந்தால் அது எந்த ஜீவனாக இருந்தாலும் அது
செய்யும் கார்யம் அசுப கார்யம்தான். அதற்கு உண்டான பலன் கிடைத்தே தீரும்.
அந்த பலன்கள் பலனாளர்களுக்கு நலம்
தந்தால் புண்ய மென்றும், சிரமம் தந்தால் பாபமென்றும் நாம் சொல்லிக் கொள்கிறோம்.
இதைதான் நாம் வினைகள் என்று கூறுகிறோம்.