என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, February 25, 2014

வழக்கு வெற்றி பெற

பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கித்தாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வழக்கு வெற்றி பெற :

1.  கிலோ உடைக்கப்படாத கருப்பு உளுந்து எடுத்துச் சென்று ஆற்று நீரில் விடவும்.

2. சிறிய குடத்தில் தேன் நிரப்பி வீட்டில் வைக்கவும்.


3. சர்க்கரை பொங்கல் அல்லது இனிப்பு பொருள்களை கோவில்களில் தானம் செய்ய வேண்டும்அல்லது ஆற்று நீரில் விட வேண்டும்.

லால்கித்தாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

Thursday, February 20, 2014

கடன் பிரச்சினை முழுமையாக தீர

கடன் பிரச்சினை முழுமையாக தீர 

பாரசீக நாட்டில் உருவாகிய மிக சிறந்த ஜோதிட நூலான
லால்கிதாப் சொல்லும் எளிய முறை பரிகாரங்கள் - பொதுவானவை - அனைத்து இராசிக்காரர்களும் இதனை செய்யலாம் , சுகமடையலாம்.
-+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் தொல்லைகள் முழுமையாக தீர :

1.துப்புரவு பணியாளர்களுக்கு தேயிலை இலைகளையும், புகையிலை தொடர்பான பொருட்களையும் தானம்செய்ய வேண்டும். (புகையிலை பொருட்கள் தவிர்க்கும் பட்சத்தில் பருப்பு வகைகளோ, பணமாகவோ கொடுக்கலாம்).

2.மூங்கில் புல்லாங்குழல் முழுவதும் சர்க்கரை நிரப்பி மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கவேண்டும். (இவ்வாறு புதைப்பதால் யாருக்கும் பயன் இல்லை ஆனால் நடைமுறைக்கு பலன் தருகிறது)

3.கருப்பு நிற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி முகம் பார்த்து ஏழைகளுக்கு தானம் தரவேண்டும்.

லால்கிதாப் பரிகாரங்கள் தொடரும் . . . .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்களுக்காக . . . . சிவனருள் கருணாகரன்.

Tuesday, February 18, 2014

வருங்கால ATM மிஷின்கள்


வருங்கால ATM மிஷின்கள் 


“ இந்த வருஷம் ஸ்கூல் பங்க்ஷன்ல நீதான் முதல்ல வரணும், எல்லா போட்டியிலும் பரிசு வாங்கணும்” னு சொல்லி குழந்தைகளின் மனதில் பாசமோடு பழக வேண்டிய மற்ற குழந்தைகளை போட்டியாக (எதிரியாக) நினைக்கும் மனப்பான்மையை வீட்டில் உள்ளோர் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்ற காலமிது.

நல்ல மார்க் வாங்கணும் , பெரிய வேலைக்கு போகணும் , கைநிறைய சம்பாதிக்கணும்னு சொல்லி சொல்லியே படிப்பைத் தவிர, மார்க்கைத் தவிர, சம்பாதனையைத் தவிர வேறெதையும் அறியாததாகவே ஒரு குழந்தை வளர்க்கப்படுகிறது .

தாத்தா, பாட்டி, அம்மா , அப்பா , அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை போன்ற ஒரு குடும்ப பாசமற்ற ஒரு ஜீவனாக, சம்பாதனை ஒன்றையே குறிவைத்து துரத்தப்பட்ட குதிரையாய் ஓடத் துவங்கிய வாழ்வில், பந்த பாசத்திற்கு இடமின்றி போய் , பின்னாளில் காதலி , மனைவி , குழந்தைகள் என எல்லோரையுமே ரத்தம் சதை எலும்பு கொண்ட உருவமாகவே பார்க்கும் நிலை உருவாகிப்போனது . 

கேள்வியின் தன்மையையே அறியாமல் கேள்விக்குரிய பதிலை மட்டுமே படித்துப் பழகியதால் பதிலின் காரணமும் அறியாமலே போனது. இதுதான் இன்றைய IT – M.B.B.S., போன்ற எல்லாவித படிப்பும் கற்றுத் தரும் அறிவு.

தான் , தன்னுடைய படிப்பு , பதவி , சம்பாத்தியம் என குறுகிவிட்ட மனதில் பாசமும் , நேசமும், அன்பும் , காதலும் பேசுதலுக்குரிய பட்டிமன்ற கருவாகி போனது விந்தையல்லவே.

பெற்று வளர்த்த அப்பா, அம்மாவுக்கு நீ காட்டும் அன்பு , பரிவு இதுதானாப்பா என்று மகனை கேட்கும் பெற்றோரை பார்த்து மகன் கேட்கிறான் ,
 “அப்பிடின்னா என்ன ? நோட்சில் இல்லையே அப்பா ?” உண்மைதானே .

நாம் சொல்லித்தரவே இல்லையே ? நமது கவனம் முழுவதும் மார்க் , முதலிடத்தில் வெற்றி, கைநிறைய சம்பளம் இதுதானே .

தெரியாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறுதானே .

வெறும் பணம் பண்ணும் கருவியாக நாம் உருவாக்கிய பிள்ளைகளிடம் பாசம், நேசம், மரியாதை, பாதுகாப்பு என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியாது.

வெளிநாட்டில் வாழும் மகனிடம் (மகளிடம்)

கதறி அழுது

 “உடல்நிலை கேட்டுப் போச்சுப்பா கொஞ்சம் வந்து போய்யா” என்று கெஞ்சினாலும் , அங்கிருந்து வரும் பதில் “ பணம் அனுப்பி இருக்கிறேன் , விசா கிடைக்கல , நல்ல டாக்டரா பாருங்க விசா கெடைச்சதும் வரேன் “ அவ்வளவுதான் .

அவர்கள் மனதில் உங்களுக்கு தேவை பணம்தான் என்றாகிப் போனது , இது  உங்கள் தயாரிப்பின் பலன்தான் என்பதை தவிர வேறென்ன சொல்லமுடியும்.

உங்கள் தயாரிப்பில் உருவான ஒரு ATM மனித கருவி அவர்கள் அவ்வளவுதான், கடிதம் போட்டால் பணம் வரும் , பாசம் வராது , ஏனென்றால் அப்படித்தான் நம்மால் ப்ரோக்ராம் (அவர்கள் உருவாக்கம்) செய்யப்பட்டது. 

இனி வருங்காலங்களில் முதியோர் இல்லங்கள் நிறைய உருவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகின்றதை மறுப்பதற்கில்லை. 

மனதளவிலும், உடலளவிலும் இன்றே அந்த வாழ்விற்கு தயாராகிவிட்டால் நாளை விரட்டப்படுமுன் நாமே சென்று விடலாம்.

இதுவும் நாம் பெரிதும் எதிர்பார்த்த மேலைநாட்டு கலாச்சாரம்தான் , எப்போது அம்மாவை “மம்மி” (பிணமே) என்றழைக்க விரும்பினோமோ – அன்றே நாம் மற்ற விஷயத்திற்கும் தயாராக வேண்டியதுதான். 

அன்பையும் , பாசத்தையும் , பரிவையும் , மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும், கருணையையும் கற்றுத் தந்து சக மனித உயிர்களையும் தனது உறவாக பார்க்கும் உணர்வை குழந்தைகளுக்கு பாலுடன், சோறுடன் ஊட்டினால் நாளை அவர்கள் ஒரு ATM மிஷினாவதை மாற்றலாம்.

இல்லையென்றால் முக்கிய வீதிகளில் அமைக்கப்படும் ATM சென்டர் போல எல்லா வீடுகளிலும் மனித உருவில் ATM மிஷின்கள் இருக்கும், அதில் பணமும் இருக்கும், 

ஆனால் மருந்துக்கு கூட அன்போ , பாசமோ , கருணையோ , பரிவோ இருக்காது. 

மிஷினுக்கேது பாசம் ?

இன்றைய குழந்தைகள் நாளைய ATM மிஷின்களா இல்லை அன்பு, பாசம், பரிவு, கருணை எல்லாம் கொண்ட மனித இன வழித்தோன்றல்களா ?

பதில் : உங்கள் குழந்தையை நீங்கள் வளர்ப்பதில் உள்ளது .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம். 

அன்புடன் கருணாகரன்
Related Posts Plugin for WordPress, Blogger...