ஓம் நமசிவய ,
உணவுக்கட்டுப்பாடு விரிவான விளக்கம் :
உணவு கட்டுப்பாடு என்பது சைவ உணவை மட்டுமே உட்கொள்ள
வேண்டும் என்பதாகின்றது.
அசைவ உணவை அறவே விட்டொழிக்க வேண்டும் அப்போதுதான் ஆன்ம பலம்
ஏற்படும்.
காரணம் என்ன ?
அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் நம்மை நம்
நிலையில் இருந்து மேலேற விடாமல் செய்யும்..
ஞான ஸித்தி கிடைக்கப்பெறாமலே போய்விடும்.
வேறென்ன நடக்கும் ?
மேலும் நமது கலாச்சாரமும், தர்மமும் மறுபிறப்பையும், யாரும்
விதியின்படி எதுவாகவும் பிறக்கலாம் என்பதையும் போதிக்கின்றது.
அதன்படி நமது உற்றார், உறவினரே நாம் உண்ணும் இறைச்சியாக
இருப்பதற்கு வாய்ப்புள்ளதால் நாம் இறைச்சி உண்பதை தவிர்ப்பது நம்மை மேலும் பல
பாபங்களிலிருந்து காக்கும்.
ஆகவே மாமிசம் உண்பது தவிர்க்கவேண்டும். சைவபிரியாணி
போன்றவற்றையும் உண்பது ஆகாது.
சமரசம் என்பது எவ்வாறெனில்,
நம்மை விட மற்றவர்களை நன்றாக வைத்துள்ளார் எனும் குணம்
கூடாது .
எல்லோரையும் நன்றாகவே இறவன் வைத்துள்ளார்.
எல்லோரையும் நன்றாகவே இறவன் வைத்துள்ளார்.
இறைவனார் அவரவர்களுக்கு உரியதை கொடுத்துள்ளார் .
மதம் என்பது நம்மை சமணப்படுத்துவது மட்டுமே.
மதமே, ஞானம் தருவதோ , ஆன்மீக முதிர்ச்சி தருவதோ இல்லை.
மதம் என்பது காலண்டரில் உள்ள கிழமைகளைப்போல அவ்வளவே .
அதை மீறி அதில் வேறொன்றும் இல்லை.
அதை மீறி அதில் வேறொன்றும் இல்லை.
இன்று திங்கள் கிழமை அலுவலகம் செல்லும் நாள் ஆனால்
எல்லோரும் போவதில்லை, பணியாளர்கள்அலுவலகம்
போகின்றார்கள், மற்றவர்கள்
அவரவர் வேலையை பார்க்கின்றார்கள்.
ஞாயிறு விடுமுறைநாள் ஆனால் எத்தனை பேர் விடுமுறையில்
இருக்கின்றார்கள்.
வண்டி இழுப்பவரும் சுமை தூக்குவோரும் என்றைக்கு ஞாயிறு
விடுமுறையை கொண்டாடினார்கள்.
அதுபோலவே மதமும் மனிதனுக்கு எதையும் போதிப்பதோ மாற்றுவதோ
இல்லை.
மாற்றம் மனிதனிடம் உருவாகவேண்டும்.
ஆக மதம் மனிதனை சமணப்படுத்துவது.
ஆக மதம் மனிதனை சமணப்படுத்துவது.
எப்படி சமரசம் கொள்வது ?
குதர்க்க மற்ற மனநிலையை மனிதன் பெறவே மனிதன் முயலவேண்டும்.
எல்லோரையும் சமமாக எண்ணும் எண்ணங்களால் மனம் நிறைய வேண்டும்.
எல்லோரையும் சமமாக எண்ணும் எண்ணங்களால் மனம் நிறைய வேண்டும்.
இறைவனார் யாரையும் பிரித்துப்பார்ப்பதில்லை எல்லோரையும்
சமமாகவே பார்க்கின்றார், நடத்துகின்றார்
.
ஞானம் பெறவும், மோட்சம் பெற்று அவரை அடையவும்,
மனிதனும் சமரசமாகவும் மனம் சமாதானமாகவும் இருப்பது
அவசியமாகின்றது.
பொறாமையோ துர்குணங்களோ அற்ற இறைவனாரை நாட வேண்டுமானால்,
நாம் அவ்வாறு இருப்பது அவஸ்யமாகின்றது.
நாம் அவ்வாறு இருப்பது அவஸ்யமாகின்றது.
நாம் துர்குணங்களோடு உள்ளவரை இறைவனாரை சேர்வது என்பது,
பகலில் முழு நிலவை காண எண்ணுவது போலாகும்.
ஆகவே சமரசம் நமது குணமாகவேண்டியது மிக அவஸ்யம்.
பூர்ண ஸ்வசதந்திரமே சமரசமாகும்.
நம்முள் எந்த தீயஎண்ணமோ,
செய்கையோ ,
சொல்லோ இல்லாதிருத்தலே
முழுமையான ஸ்வசதந்திரம் ஆகும்.
முழுமையான ஸ்வதந்திரம் என்பது முழுமையான சமரசம்.
சமரசம் உள்ள நெஞ்சில் ஆனந்தம் ஆட்சி கொள்கின்றது.
அங்கே ஏக்கம் இல்லை
துக்கம் இல்லை
தேவை இல்லை அதனால்
துரோக சிந்தனை இல்லை.
துக்கம் இல்லை
தேவை இல்லை அதனால்
துரோக சிந்தனை இல்லை.
எதிலும் சமரசம் கொள் மனமே.
இறைவனாரை உன்னுள் காண்பாய். ஓம் நமசிவய.