என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, August 2, 2013

அன்பு வேண்டும் ! !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்பு நண்பர்களே வணக்கம்.
அன்பு வேண்டும் என்பதே தலைப்பு .
அன்பு வேண்டும் என்றால் யாருக்கு? எதனிடம் ?
என்கிற ஒரு கேள்வி எழுகிறதா ? சரி . இனி தலைப்புக்குள் போகலாம்.
கேள்வி எழவில்லையானால் மேலே படிக்கவேண்டாம் . ஏனென்றால் ,
நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள் , உங்களுக்கு தெரிய வைக்கவேண்டாம்.

சரி, முதலில் அன்பு என்பதை தெரிந்துகொள்வோம் .

அன்பு என்பது என்ன ? இதன் வேறு பெயர்கள் என்ன ?
முதலில் அன்பின் ஆரம்பத்தை தெரிந்துகொள்ளவேண்டும் ,
அன்பின் தோற்றம் எதனால் உருவானது ? என்பதில்தான் அதன் வலிமை இருக்கின்றது.

அன்பு உரிமையில் உண்டானதா? – உரிமை குறைந்தால் குறையும்.
அன்பு பாசத்தினால் உண்டானதா? – பாசம் மோசமானால் குறையும்
அன்பு மோகத்தினால் உண்டானதா? – மோகம் தீர்ந்தவுடன் குறையும்
அன்பு இரக்கத்தினால் உண்டானதா? – எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு பரிதாபத்தினால் உண்டானதா? - எந்த நேரமும் மாறும் தன்மைஉடையது
அன்பு கடமையினால் உண்டானதா? - எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு - எந்த நேரமும் மாறும் 
அன்பு ஆசையினால் உண்டானதா? – நிராசையானால் மாறிவிடும் 
அன்பு பேராசையினால் உண்டானதா? – கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் மாறும்
அன்பு நடிப்பாக(போலியாக) உண்டானதா? – இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு வேண்டாவெறுப்பாக
(யாரோ சொன்னார்கள் என்பதற்காக) உண்டானதா? - இதனை விளக்கவே வேண்டாம்
அன்பு எல்லை மீறிய அன்பினால் உண்டானதா? – இது பிறருக்கு தீங்கு எண்ணாதது
அன்பு காரணமே இல்லாமல் உண்டானதா? – இது தாயின் அன்பு இது என்றும் நிலையானது .

அன்பினை ; பாசம் , நேசம் , ப்ரியம் , காதல் , கருணை , பக்தி, அபிமானம், அபிலாஷை , பிரயாசை என்றெல்லாம் கூறலாம்.
என்றாலும் கூட அன்பை அன்பு என்று சொல்லும் போதுதான் அழகு , இதில் ஒரு நெருக்கமும் , நெகிழ்வும் , ஆழமும் தெரியும் .

அன்பிற்கு எதிர்பார்ப்பில்லை , தேவைகள் இல்லை, .
அன்பு இயற்கையைப் போன்றது , எல்லோருக்கும் பொதுவானது.
அன்பு சஞ்சலமடையாதது , சந்தேகம் கொள்ளாதது.
அன்பு இறவாத்தன்மை கொண்டது , எந்நேரமும் ஜீவனுள்ளது .
அன்பு எத்தகைய மனதினுள்ளும் நுழையும் தன்மை கொண்டது , இதனை பெரியோர் அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ் என்கிறார்கள்.

எதிர்பார்ப்பில்லாத அன்பினையே அன்பு என்கிறோம். நான் அன்பு செய்கிறேன் நீயும் அன்பு செய் என்றாலே அது வியாபாரம் ஆகின்றது.

நான் அன்பினை தந்தாலும் என் அயலான் எதிர்ப்பினையே செய்கிறானே ! என்றால் நீங்கள்தான் தண்ணீர் ஊற்றினீர்கள் என்பதால் , உங்கள் வீட்டு ரோஜாசெடியின் முட்கள் உங்கள் கையில் குத்தாமல் இல்லையே – அதுபோல் அது அவரின் இயல்பு. அவருக்காக உங்கள் இயல்பினை ஏன் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டும் . அத்துடன் அது அது அதனுடைய இயல்பில் இருந்தால்தான் அழகு.
யோசித்து பாருங்கள் , வெப்பமில்லாத சூரியன் , குளிர்ச்சியற்ற நிலவு, இரவு பகலில்லாத பூமி  ஒருநாள் வாழமுடியுமா நம்மால் ?

காரணம் , காரமான ஒரு சுவை இருப்பதால்தானே இனிப்பின் சுவையை உணர முடிகிறது.
இதனை பெரியோர் வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்கிறார்கள்.

உயர்ந்த அன்பு இறைவனுக்கு நிகரானது ; என்றும் இறையன்பு நிகரற்றது , அதற்கிணையானது ஒன்றுமே இல்லை , அதனால் அதனை அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்.

ஒருவர் கேட்டு அன்பினை பரிமாறுதல் கூடாது , அன்பு , தானே சுரக்க வேண்டும் – குழந்தைகள் கேட்டுக்கொண்டு நாம் அன்பு செய்கிறோமா  இல்லையே , அதுபோல் இதயம் முழுவதுமாக சுரக்கும் அன்பு , எல்லா துன்பங்களையும் மாற்றவல்லது.
ஒரே எண்ணத்துடன் முழுமனதாக ஒன்றுகூடி அன்போடு செய்யும் பிரார்த்தனை எவ்வித தோஷங்களையும் போக்கும் என்பது திண்ணம்.
பாருங்கள் . . .
குழந்தைகளின் அன்பில் களங்கம் இருப்பதில்லை , அவர்கள் எல்லோரிடமும் ஒன்றேபோல் அன்பு செய்கிறார்கள் , ஏழை – பணக்காரன் , படித்தவன் – முட்டாள் , ஞானி – அஞ்ஞானி , நல்லவன் – கெட்டவன் , நோயாளி – திடசாலி என்றெல்லாம் அவர்களுக்கில்லை , எல்லோரையும் மனிதர்களாகவே பார்க்கும் பெரும் பண்பு அவர்களிடம் உண்டு. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள் பெரியோர்.

உங்கள் அன்பினை சோதியுங்கள் , உங்கள் அன்பு எத்தகையது ?
பாரபட்சமற்ற அன்பினை எல்லா உயிரினங்களுக்கும் அள்ளி வழங்குங்கள்.
உயிர் கொன்று உயிர் வளர்க்கும் நிலையில் இருந்து மீளுங்கள்.
பிறப்பென்பது ஒரு சுழற்சி முறையாகும் , ஆகவே, நமது உறவுகளே , மீண்டும் பிறந்து நாம் உண்ணும் உயிரினமாக வருவதற்கு வாய்ப்புண்டு, அதனை நாம் விரும்பி உண்பதற்கும் வாய்ப்புண்டு.
புனரபி மரணம், புனரபி ஜனனம் என்றார் பெரியோர்.

அன்பு , அன்பு , அன்பு அஃதொன்றே அனைத்தியக்கத்திற்கும் மூலதனமாகும்.
அன்பினை தாராளமாக விதையுங்கள் , அன்பெனும் பயிர் செழித்தோங்கினால் உலகில் தீவிரவாதம், தானே ஒழியும்.

அன்பிலார் கண்டும் அன்பு செய் – அஃதொன்றே
பண்பினில் எல்லாம் தலை.                                                  எனது குறள்


அன்புடன் கருணாகரன் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...