அன்பானவர்களே, வணக்கம்.
எலுமிச்சம்பழத்தில் விளகேற்றலாமா ..தொடர்ச்சி...4.
இனி தீபத்திற்கான எண்ணையைப்
பார்ப்போம்.
இல்லங்களிலும், கோவில்களிலும் தீபம்
ஏற்றுவதில் எண்ணை முக்கிய பங்கு வகிக்கின்றது, காரணம் நமது பூஜை, வேண்டுதல்கள்
போன்றவற்றை குறிப்பிட்ட தெய்வங்கள், தேவதைகள், எல்லா அதிதேவதைகள் மற்றும்
கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ( அந்த அந்த கதிர்வீச்சுகளோடு சேர்ப்பிக்கும்)
உன்னதமான பணியை நாம் ஏற்றும் தீப சுடரின் அதிர்வுகளே செய்கின்றன.
தற்போது சில இல்லங்களிலும், கோவில்களிலும்
பயன்பாட்டில் உள்ள சில எண்ணெய்களை பார்ப்போம்.
ஒருசிலர் விளக்கெண்ணையை
விளக்கேற்றுவதற்க்கு உபயோகிக்கின்றனர், காரணம் அது விளக்கெண்ணெய் என்றபெயருடன்
உள்ளது , மேலும் விளக்கு நன்றாக நின்று எரியும் என்பார்கள்.
அதன் பெயர்
விளக்கெண்ணெய் அல்ல விலக்கெண்ணெய்.
அதாவது நமது உடலில் உள்ள மலக்கழிவுகள்
சரிவர வெளியேராதபோது அந்த எண்ணையை கொஞ்சம் உட்கொண்டால் அது உள் சென்று பேதியாகி
மலக்கழிவுகளை வெளியேற்றம் செய்யும்.
அதற்கும் விளக்குக்கும் எந்த
சம்பந்தமுமில்லை. ஆனால் விளக்கெண்ணையால் விளக்கேற்றினால் அந்த வீட்டில் சங்கடமும்,
சச்சரவுமே மிகுதியாகும். ஏனென்றால் அந்த தீபத்திலிருந்து வெளியாகும் கதிரில் ஒரு
வகை கசப்புத் தன்மை நிறைந்து உள்ளதால் நாம் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அதன்
பயனை அனுபவிக்க முடியாது. ஸ்வாமி குமபிட
அமர்ந்தாலே ஏதாவது ஒரு பிரச்சினை வந்தே தீரும். வீட்டில் சுவாமி கும்பிடவே மனம்
ஒத்து வராது. ஏதோ பேருக்கு கொஞ்சநேரம் அமர்ந்து எழுவோம்.
அதனால் விளக்கெண்ணையை இல்லங்களிலும்,
கோவில்களிலும் விளக்கேற்று வதற்க்கு பயன்படுத்தக்கூடாது.
அடுத்து தற்போது எங்கும் விற்பனை
செய்யப்படும் தீபஎண்ணை எனும் எண்ணை.
இதில் மூன்று எண்ணெய்களை கலந்து
தீபத்திற்கென்றே தயாரானதாக சொல்கிறார்கள்.
உண்மையில் மூன்று வித எண்ணைகள், ஐந்து வித
எண்ணைகள் போற்றவற்றை கலந்து வீடுகளில் அல்லது கோவில்களில் விளக்கேற்றுவது ஆகாது.
ஏனென்றல் அவ்விதமான கலப்பு எண்ணையை
மாந்த்ரீக வேலைகள் செய்யும் போதும் , சில அமானுஷ்ய சக்திகளை பெறும் நோக்கிலும்
பூஜையில் ஈடுபடுவோர் தங்களது பூஜைக்கு மேற்கண்ட கலப்பில் உள்ள எண்ணெய்களை விளக்கிற்கு
பயன்படுத்துவர்.
நாம் இவ்வகை எண்ணெய்களை விளக்கேற்றி
வணங்கினால் துஷ்ட தேவதைகள், ஆவிகள், அமானுஷ்யமான சில உருவங்கள் உடனே வந்து விடும்,
ஆனால் நமக்கு இவைகளில் பழக்கமில்லாததால் , அவைகள் வந்ததே தெரியாமல் நாம் நமது
பூஜையை முடித்துக்கொண்டு எழுந்துவிடுவோம்,
ஆனால் அந்த குறிப்பிட்ட
தேவதைகளோ,ஆவியோ,அமானுஷ்யமோ வந்திருந்தும் நாம் அதனை (அறியாத காரணத்தினால்)
வரவேற்கவில்லை , அதற்கான நைவேத்யம் படைக்கவில்லை என நம்மீது கோபமாகி விடும்.
அதனால் நல்லநாள் , ஒரு பண்டிகை போல மற்ற எந்த
விசேஷ காலமானாலும் அதனை சந்தோஷமாக கொண்டாட முடியாது. மேலும் விசேஷ நாளில் சண்டைகள்
வந்து, நம்மால் அந்தநாளின் பெரும்பகுதி நிம்மதியற்று விடும். மேலும் நிறைய
பொருட்கள் நல்லநாட்களில் உடைவதும், கிழிபடுவதும் நடைபெறுவது வாடிக்கையாகி விடும்.
இதனால் ஸ்வாமி கும்பிடவே பயமாக இருக்கும்.
ஏனென்றால் ஸ்வாமி கும்பிடும் அன்று ஏதாவது
ஒரு பிரச்சினை வந்தே தீருமே.
ஆனால் மேற்படி நபர்கள் அந்த தேவதையோ ,
ஆவியோ, அமானுஷ்யமோ வந்தவுடன் அதற்குண்டான நைவேத்யம் இரத்தமோ, இறைச்சியோ ஏதோ
ஒன்றினை அதற்கு உடனே தந்து விடுவதால் அவர்களுக்குண்டான தேவையை பூர்த்தி செய்யும்.
நமக்கு அது வந்ததே
தெரியாது, அப்புறம் எங்கே அதற்கு படைப்பது?
ஆகையால் , அந்த தீப எண்ணை என்று
விற்கப்படும், கலப்பு எண்ணையை வீட்டிலும், கோவில்களிலும் இல்லறவாசிகள்
பயன்படுத்தலாகாது.
சரி எந்த
எண்ணையைத்தான் விளக்கேற்ற பயன்படுத்தலாம்?
இல்லங்களிலும்
கோவில்களிலும் விளக்கேற்று வதற்கு உரிய எண்ணைகள் மூன்று .
1. முதல் தரமானது ,
நெய் , இது நித்ய வழிபாட்டிற்கும், கோவில்களில்
பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை குறிப்பிட்ட இடத்தில் மிக
வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
2. இரண்டாவது
தேங்காய்எண்ணை, இதுவும் நித்ய வழிபாட்டிற்கும்,
கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை
குறிப்பிட்ட இடத்தில் வேகமாக கொண்டு சேர்க்கவல்லது.
3. மூன்றாவதாக
நல்லெண்ணெய், இதுவும் நித்ய வழிபாட்டிற்கும்,
கோவில்களில் பூஜைக்கும் மிகவும் உகந்ததாகும் , எளிதில் நமது கோரிக்கைகளை
குறிப்பிட்ட இடத்தில் மிதமான வேகத்தில் கொண்டு சேர்க்கவல்லது.
எல்லா இல்லங்களிலும், கோவில்களிலும்,
எந்தவிதமான விழாக்களுக்கும், எந்த விதமான சூழலுக்கும் விளக்கேற்றி பூஜிக்க தகுந்த
எண்ணைகள் மேலே சொல்லப்பட்ட மூன்று எண்ணைகள்தான் உகந்தவை.
இவைகளையும்
(நெய்யை,தேங்காய்எண்ணையை,நல்லெண்ணையை)
தனித் தனியாகத்தான்
உபயோகிக்கவேண்டும், கலந்து உபயோகிக்கக் கூடாது.
இப்போது
எலுமிச்சம்பழத்தில் தீபம் நல்லதா? ஏற்றலாமா? பார்க்கலாம்.