என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, August 25, 2010

ஜோதிட சிக்கல்கள்

அன்பானவர்களே !!
இந்த உலகில் எங்கு சென்று நீங்கள் கேட்டாலும் இரண்டும் + இரண்டும் நான்குதான் அதில் எங்குமே, என்றுமே மாற்றமில்லை,
ஆனால் ஜோதிடத்தில் மட்டும் ஒருவருக்கு நடைபெறும் ஒரே திசை- ஒரே புக்தி காலத்தை ஒவ்வொரு ஜோதிடர் ஒவ்வொரு மாதிரி சொல்வதன் காரணம் என்ன ?
முழுமையாக க்ரஹங்களையும், முழுமையாக ஜோதிடத்தையும் அறியாததே காரணமாகும். 
ஆகவே பெயரையும், பந்தாவையும், பரம்பரையையும், ஆளின் தோற்றத்தையும் வைத்து ஜோதிடம் பார்க்க செல்லாமல் அந்த ஜோதிடருக்கு முதலில் ஜோதிடம் தெரியுமா? என்று தெரிந்துகொண்டு ஜாதகம் பார்க்க செல்வது சிறந்ததாகும்.  

அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.  

ஜோதிடம் காட்டும் நல்வழிகள்

அன்பானவர்களே!
              ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த வேளையில் வானவெளியில் அமைந்திருந்த கிரகங்களின் அமைப்பினை வைத்து அந்த ஜாதகர் வாழ்வு எவ்வாறு அமையும் ? அவர் என்னென்ன சாதனைகள் செய்வார்? கல்வி, திருமணம், தொழில் போன்ற அனைத்து விபரங்களையும் அறியமுடியும் என்பது தெரிந்ததே.

ஆனால் இன்னும் பலபடிகள் மேலே போய் வாழ்வின் சகல உண்மைகளையும் அறியலாம் என்பதும், பலவிதத்திலும் நல்ல வழிகளையும், ஆன்மீக பலம் , தெய்வீக பலம் பெற்று பலருக்கும் நல்ல தலைமையாளனாக, 
வழிகாட்டுபவனாகவும் வாழ முடியும் என்பதுவும் உண்மை.



அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.      

Monday, August 23, 2010

உண்மையை சொல்லும் நட்சத்திரங்கள்.

அன்பானவர்களே !!!



விண்ணகத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் மனிதர் வாழ்வில்,



ஆதாரங்களையும் மாற்றங்களையும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களே உண்டாக்குகின்றன. என்பதை நமது முன்னோர்கள் கண்டுணர்ந்தார்கள். நமக்கும் உணர்த்தினார்கள்.



மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கும், நமக்கும் (மனிதருக்கு) தொடர்புள்ளதை கண்டு ஆய்ந்து நமக்கு பகுத்து தந்துள்ளார்கள்.


இருபத்தேழு என்றால் வெறும் இருபத்தேழு அல்ல ஒவ்வொன்றிலும் உட் கூறுகளாக நிறைய உள்ளது.


அதில்


அசுவனி, மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம், சுவாதி,அனுஷம், திருவோணம்,ரேவதி இவைகள் ஒன்பதும் தேவ கணம் என்றும்,


பரணி,ரோஹிணி,திருவாதிரை,பூரம், உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி ஒன்பதும் மானுஷ கணம் என்றும்,


மீதி இருக்கும்


கிருத்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,
கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் என்பவை ஒன்பதும் ராக்ஷஸ கணம் என்றும் வகுத்துள்ளார்கள்.


பொறுமை,அடக்கம்,மூர்க்கம் இம் மூன்றும் மனிதர்களின் பொதுவான குணாதிசயமாகும்.

நீங்கள் எந்த நட்சத்திரம் என்று கண்டு உங்களுக்கு அந்த குணம் உண்டா இல்லையா என கண்டு கொள்ளுங்கள்.




அன்புடன் இர.கருணாகரன்.இடைப்பாடி.
Related Posts Plugin for WordPress, Blogger...