என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, April 21, 2014

மணமுறிவு காரணங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


மணமுறிவு காரணங்கள் :


பெற்றோர்கள் பலவிதமாக ஆராய்ந்து பல நாளாக , வாரங்களாக , மாதங்களாக , வருடங்களாக அலைந்து தேடி பிடித்து திருமணம் செய்து வைத்தும் மணமக்கள் அவர்களுக்குள் மன ஒற்றுமையின்றி அவர்கள் பிரிந்து விடுவதும் அல்லது ஒரே வீட்டிலேயே மனம் புழுங்கி வாழ்வதும் , வேறொரு பெண்ணோடு அல்லது வேறொரு ஆணோடு மறைமுக தொடர்பு கொண்டு வாழ்வதும் இன்று மிக அதிகமாகிப்போனது என்பதை மறுப்பதற்கில்லை .

இதனை சமூகமோ , சமுதாயமோ , எதுவோ எப்படிப் பார்த்தாலும் அதன் அடிப்படை காரணம் ஜோதிடத்தில் உள்ள கரணம் எனப்படும் அம்சமாகும்.

கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவைக் குறிப்பதாகும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.

கரணங்கள் 11 வகைபடுகின்றன.

கரணங்களும் அதற்குரிய காரணிகளும் (பறவை மிருகங்களும்) --------------

1. பவகரணம் – சிங்கம்
2. பாலவகரணம் – புலி
3. கெளலவகரணம் – பன்றி
4. தைதுலை – கழுதை
5. கரசை – யானை
6. வணிசை – எருது
7. பத்திரை – கோழி (சேவல்)
8. சகுனி – காகம்
9. சதுஷ்பாதம் – நாய்
10. நாகவம் – பாம்பு
11. கிம்ஸ்துக்கினம் – புழு

மேலே காணப்படும் 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்த அந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

கீழே தரப்பட்டுள்ள குணாதிசயங்கள் பெற்றிருப்பினும் , அவர்களின் தாம்பத்திய உறவுகளில் அந்தந்த பறவை , மிருகங்களின் காம உணர்வினையே மேலதிகமாக பிரதிபலிக்கின்றார்கள்.

உதாரணமாக :

1. பவ கரணம் (சிங்கம் )

பவகரணத்தில் பிறந்தவர் எக்காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர். கூர்ந்து ஆராய்ச்சி செய்பவரும். சுகமுடையவரும், நன்னடத்தை உடையவரும். மென்மையான தலைமுடி உடையவருமாவர்.

2. பாலவ கரணம் (புலி)

பாலவகரணத்தில் பிறந்தவர் சிற்றின்ப பிரியர். நீங்காத செல்வமுடையவர். அற்பத் தொழில் முறையையுடையவர். தருமம் செய்பவரும், பிறரால் நிந்திக்கப்படாத நற்குணமுடையவரும். தன் உறவினரைப் பேணிக்காக்கும் குணமுடையவருமாவார்.

3. கெளலவ கரணம் (பன்றி)

அரசாங்கப் பணியாளராக இருப்பவரும். நல்ல ஆச்சாரமுடையவரும், தந்தை தாய் மீது பற்றுள்ளவரும், நிலபுலன்களைச் சம்பாதிப்பவரும், பராக்கிரமம் உடையவரும் வாகன வசதியுடையவருமாவார்.

4. தைதுலை கரணம் (கழுதை)

தருமம் செய்யாத கருமியும், வேசியர் மீது பற்றுள்ளவரும், அரசாங்கத்தின் மூலம் பொருளை பெறுபவரும், அரசாங்கத்தில் பணி புரிபவருமாவார்.

5. கரசை கரணம் (யானை)

அரசாங்க மூலம் பணவரவு உள்ளவரும், பெண் நேயரும், எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியவரும், எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவருமாவார்.

6. வணிசை கரணம் (எருது)

கற்பனையான வார்த்தைகளைப் பேசுபவரும், பிறருக்கு உதவாதவரும், உலகத்தோடு ஒப்ப ஒழுகாதவரும், பெண் நேயருமாவர்.

7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)

ஆண்மையில்லாதவர், மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவருமாவார்.

8. சகுனி கரணம் (காகம்)

நல்ல அறிவு உள்ளவரும், அழகானவரும், மிகுந்த செல்வம் உடையவரும், தைரியம் உள்ளவருமாவார்.

9. சதுஷ்பாத கரணம் (நாய்)

வறுமையுடையவரும், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவரும், கோபியும், பெண் பிரியரும், தீய நடத்தையுடையவருமாவார்.

10. நாகவ கரணம் (பாம்பு)

துன்பத்தை ஆள்பவரும், உத்தம குணமும், சுவையான உணவு உண்பவருமாவார்.

11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)

தாய் தந்தையர் மீது பற்றுள்ளவரும், சகோதரர்களைக் காப்பவரும், வேத சாஸ்திரம் அறிந்தவரும், உலகத்தை நன்கு அறிந்தவருமாவார்.

இவைகள் கரணத்திற்குறிய பொதுவான பலன்களாக இருக்கும்.



இப்போது திருமண முறிவுக்கான காரணங்களை பார்ப்போம் .

கோழி , நாய் , பன்றி , கழுதை , எருது , பாம்பு போன்றவைகள் எதனைப் பற்றியும் கவலையின்றி தனது இன்பத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு சுகித்திருக்கும்.

மற்ற சிங்கம், புலி, யானை, காகம், புழு போன்றவைகள் தனது இன்பத்தினை யாரும் காணாதவாறு அமைத்துக்கொள்ளும்.

காமத்தில் அதிக ஈடுபாடு கொண்டதாக கோழி, நாய், பன்றி, கழுதை, பாம்பு , புழுக்கள் இருந்தாலும் இவைகள் கலவியில் ஈடுபடும் நேரம் ஒரே மாதிரி இல்லை. குறுகிய நேரம், நீண்ட நேரம் என மாற்றம் உடையதாக இருக்கின்றது.

உதாரணமாக கோழியின் (சேவலின்) , காகத்தின் கலவி என்பது சில நொடிகளே, ஆனால் நாய்,பன்றி,கழுதை,புழு போன்றவற்றின் கலவி நேரம் மிக கூடுதலாகும்.

உதாரணத்திற்கு ஒரு கோழி (பத்திரை கரணம்)அல்லது காகத்தின் (சகுனி கரணம்) கரணத்தில் பிறந்த ஆணின் கலவி நேரம் என்பது குறுகிய நேரமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு பன்றியின் (கௌலவம் கரணம்) நாயின் (சதுஷ்பாதம் கரணம்) கரணத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கலவி பிரியமானது நீண்டநேரம் இருக்கும்.

மேற்படி இருவருக்கும் திருமணமானால் இவர்கள் வாழ்வில் எவ்வாறு கலவி சந்தோஷம் இருக்கும் ? இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எவ்விதமான உணர்வுகளின் சங்கமமாக இருப்பார்கள். இப்படியே போனால் பிற்கால சந்ததிகளின் மனோபாவம் எவ்வாறாக அமையும் ?

யார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காம உணர்வே உலகின் இயக்க மூலமாகும். ஆனால் மேலே சொல்லப்பட்டவைகள் காம உணர்வுகளல்ல, அவை காம வெறியாகும் . 

காரணம் அடக்கப்பட்ட உணர்வுகள் வெளிப்படும்போது வெறியாக மாறுகிறது. 
அதனால்தான் தனது காம உணர்வுகளுக்கு எதிராக இருப்பவர்களை மகன், மகள், கணவன், மனைவி, அண்ணி, அண்ணன், நண்பன், தந்தை, தாய், மாமனார், மாமியார் என யாராக இருந்தாலும் கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது .

கலவியில் தன்னை திருப்தி செய்யாத ஆண்மகனை , அவன் நாட்டின் அரசனாகவே இருந்தாலும் மனைவி மதிப்பதில்லை, அதனால் அவளோ, அவனோ தடம் மாறுகிறார்கள். இதனை அன்று நாம் கதைகளில் பலவாறாக கேட்டு இருக்கின்றோம். அதனை இன்று உலகியலில் கண்கூடாக காண்கிறோம்.

ஆனால் இன்றைய ஜோதிடர்களும் , திருமண அமைப்பாளர்களும் (புரோக்கர்கள்) செவ்வாய் தோஷம், நாக தோஷம் பார்க்கின்றார்கள் , செவ்வாய்க்கு செவ்வாய் , நாகத்திற்கு நாகம் என்று சேர்த்து வைக்கின்றார்கள் , கரணம் பார்ப்பதே இல்லை.

மேலும் செவ்வாய்க்கு செவ்வாய் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய பொருத்தம்.

ஆனால் நாகதோஷத்திற்கு நாக தோஷம் என்பது மிகவும் தவறான ஒன்றாகும்.

அதிலும் இவர்கள் பார்ப்பது லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ இருந்தால் நாக தோஷம் , இப்படித்தான் பார்க்கின்றார்கள்.

ஆனால் மேலே சொல்லப்பட்ட இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்குமாயின் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் வாயாடுபவர்களாகவும், சொல்லும் அறிவுரையை கேளாதவர்களாகவும், எதிர்ப் பேச்சு பேசுபவர்களாகவும் இருப்பார்கள். இதனை இந்த ஜாதகர்களின் உறவினர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

இதுபோன்ற அமைப்பினைப்பெற்ற (லக்கினம் , இரண்டாமிடம் , சந்திரன் , இரண்டாமிடம் இந்த இடங்களில் இராகுவோ கேதுவோ அமைந்து இருக்கும்) இரண்டு ஜாதகர்கள் தம்பதிகளாக இணைந்தால் அவர்களின் வாழ்வு எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள் .

எவ்வளவுதான் சகிப்புத்தன்மையும் , பொறுமையும் , குடும்ப மானத்தையும் எண்ணிஎண்ணி தன்னை கட்டுக்குள் வைத்தாலும் இத்தனையையும் மீறவே மனம் வழி வகுத்து கொடுக்கும் .

காரணம் , நாம் சரியான பொருத்தத்தை தேர்வு செய்யாததே .

ஆனால் நாம் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களை குறையாக சொல்வோம் , குற்றம் காண்போம்.

நாகதோஷம் உள்ள ஜாதகத்திற்கு நாகதோஷம் இல்லாத ஜாதகம்தான் சேர்க்க வேண்டும். நாகதோஷம் உள்ள இரண்டு ஜாதகங்களை இணைப்பது நல்லதல்ல.

சரியான தேர்வினை செய்ய நீங்கள் முதலில் சரியான அனுபவமுள்ள ஜோதிடரை தேர்வு செய்யுங்கள். அடுத்து சரியான திருமண அமைப்பாளரை கண்டுபிடியுங்கள்.

இதைத்தான் கரணம் தப்பினால் மரணம் என்றார்கள் பெரியோர்.

உங்கள் மகனோ, மகளோ சரியான துணையுடன் வாழ வழி செய்யுங்கள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
சிவனருள் கருணாகரன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...