வாழ்வின் வளமையை அறியவும், வரும் இன்னல்களை எதிர்கொள்ளும் மனோபலம் பெறவும் ஜோதிடம் வழி வகுக்கிறது. அன்புடன் R.கருணாகரன்,இடைப்பாடி. E.Mail:gurukaruna2006@gmail.com
Saturday, October 20, 2012
நாம் யாரென்றே விளங்காத
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.
இன்றுள்ள நிறைய ப்ளாக்குகளில் இந்து மதத்தையும் , அதனுடைய தோற்றம் , அதன் வழிபாடு , அதன் வழிமுறைகள் , அதன் இறையாண்மை போன்ற பலவற்றையும், கிண்டலும், கேலியும் செய்வதை சில அரைவேக்காட்டு மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள் .
இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை !
தான் வந்த ஒரு மதத்தை தானே கேவலமாக எழுதுவதும் , பேசுவதும் , தன்னை பெற்ற தாயை மகனே தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் ஒன்றே அன்றோ !
தான் மிகவும் நியாயமான மனிதன் பிற மதத்தார் மதிப்பர் என
எண்ணுகின்றனறோ என்னவோ !
எந்த ஒரு வேற்று மதத்தாரும் தன்னுடைய மதத்தை இந்துக்களைப் போல் பரிகசிப்பதில்லை , ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை .
எந்த ஒரு விஷயத்தையும் விமர்சிக்குமுன் அதனுடைய முழுமையையும் அறியாமல் தன்னுடைய புத்திக்கு எட்டியதை எழுதுவதும் , விமர்சிப்பதுவும் ஏதோ கூகுளில் நமக்கு ஒரு இலவச ப்ளாக் தந்துவிட்டார்கள் என்ற நினைப்பில் உளறிக் கொட்டும் மறைகழண்ட மண்டையர்களாகத்தான் நினைக்க வைக்கின்றது.
இந்துக்கள் பொறுமையின் இலக்கணத்திற்கு உட்பட்டு உள்ளதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் - நாம் எங்கிருந்து எழுதுகிறோம் என்று தெரியவாபோகின்றது என்றெண்ணி கன்னாபின்னா என்று எழுதுகின்றார்கள் போலும் .
கண்ணை மறைத்தோ , தன்னை மறைத்தோ எதை செய்தாலும் பூமிக்குள் போட்ட விதை பூமியை துளைத்து வெளி வருவது போல் -
இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் உங்கள் வினைகளுக்கு உண்டான பலனை , இயற்கையே , எங்கு அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கு அடி தரும்.
அப்போதுதான் மதம் என்றால் என்ன , மானுடம் என்றால் என்ன என்று புரியும்.
அன்புடன் உங்கள்
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment