என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, April 10, 2018

கிரிவலமாகும் திருவலம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருவலம்.

உலகத்தின் தந்தையாகிய எம்பிரான் ஸ்ரீ சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் திருவண்ணாமலை மிக உயர்ந்ததாக கருதப்படுகின்றது.

காரணம் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியின் ஸ்தலமாக மேன்மைமிகு திருவண்ணாமலை விளங்குகின்றது .

பஞ்சபூதங்களில் அக்னிக்கு என்ன தனி சிறப்பு ?

பஞ்சபூதங்களில் மற்ற நான்கும் (காற்று,நீர்,ஆகாயம்,நிலம்) எதனுடன் சேர்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் தன்மைகளை கொண்டது.

நீர் கெட்ட நீருடன் கலக்கும்போது கெட்டநீர் ஆகின்றது.

நிலமும் அவ்வாறே கழிவுகளோடு கலக்கும் போது அசிங்கமடைகின்றது.

வானம் மேகங்களோடு சேரும் போது களங்கப்படுகின்றது.

காற்று எதன் மீது தழுவி தவழ்ந்து வருகின்றதோ அதன் வாசனையை சுமந்து செல்லும் . அதனால் காற்றும் மாசடைகின்றது 
.
ஆனால் அக்னி மட்டும் எதனோடு சேர்ந்தாலும் சேர்ந்ததை அக்னியாகவே மாற்றி விடும் தன்மையை கொண்டது.

அது மட்டுமல்ல எப்படி இருந்தாலும் மேல் நோக்கியே நிற்கும் நிலையை தன்னகத்தே கொண்டது. 

ஆகவேதான் உயர்நிலையை அடைய விரும்பும் ஆன்மாக்கள் அக்னியின் ஸ்தலமான திருவண்ணாமலையை விரும்பி நாடுகின்றது.

இருந்தபோதிலும் அனைத்து சிவபெருமான் கோவில்களும் அக்னியின் தன்மையையும் பெற்றே இருக்கின்றது.

பலரும் கிரிவலம் செல்கின்றார்கள். கிரி என்றல் மலை, வலம் என்றால் சுற்றி வருதல், 

ஆகவே மலையை சுற்றி வருவதை வலம் வருதல் என்கின்றோம்

திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்ய முடியாதவர்கள்.

தங்களது ஊரில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமான் கோவில் உள்ள வீதியை சுற்றி வலம் வருவது சிறப்பாகும்.

இதற்கு திருவலம் என்று பெயர் .

இறைவனார் அமைந்துள்ள கோவிலை சுற்றிலும் உள்ள வீதி திரு வீதியாகும். திருவீதியை வலம்வருதல் திருவலமாகும்.

கிரிவலத்திற்கு நிகரான பலன்தரும் இந்த திருவலத்தினை உங்கள் ஊரிலும் செய்யலாமே.

பௌர்ணமி அன்று சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக 
கைகளில் ஏற்றிய ஊதுபத்திகளின் மனம் கமழ ஏந்தியபடி ஸ்ரீ ஸ்ரீ சிவபுராணம் பாடிக்கொண்டு மெல்ல நடந்து 

தங்களது ஊரில் உள்ள
ஸ்ரீ ஸ்ரீ சிவபெருமானின் திருக்கோவிலை மூன்றுமுறை வலம் வருவது மிகவும் சிறந்தது.

கிரிவலம் ஒருமுறை வலம் வரும்வோம், திருவலம் மூன்று முறைகள் வலம் வரவேண்டும்.

திருவண்ணாமலையின் எம்பிரான் ஸ்ரீ ஸ்ரீ அருணாசலேஸ்வரர் எம்மாதிரியான வரம் தருவாரோ அதனை 

உங்கள் ஊர் சிவபெருமானும் தந்து மகிழ்வார்.

ஓடாமல் மெல்ல நடந்து 
ஸ்ரீஸ்ரீ சிவபுராணம் சொல்லி 
வலம் வந்து சகல நலமும் வளமும் பெற்று 
நிம்மதியுடன் சிவனருள் பெற்று வாழ வாழ்த்துகள்.

ஓம் நமசிவய. 
            


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...