என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, January 24, 2015

நித்ய பூஜை

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

நீங்கள் நித்ய பூஜை அதாவது மந்திரங்கள் சொல்லி நைவேத்யம் வைத்து முறைப்படி செய்பவராக இருந்தால் உங்களுக்காக பூஜை செய்வது தொடர்பான சூட்சுமமான தகவல்களை தந்து இருக்கின்றேன் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் . 

பயனுண்டு . 

காலையில் எழுந்தவுடன் முதலில் கண்களை மூடியபடியே வடக்கு நோக்கி அமருங்கள் . 
மனதில் உங்கள் தாய்தந்தையர் முகங்களை கொண்டுவாருங்கள் (அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும்) அவர்களை வணங்கி மனமார அவர்களின் வாழ்த்தை வேண்டுங்கள் , அடுத்து உங்கள் குலதெய்வத்தினை (தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும்) வணங்கி இந்நாளை நன்னாளாக தருமாறு எண்ணி வணங்குங்கள். 

உங்கள் குழந்தைகள் (சிறியவரோ பெரியவரோ) அவர்களை எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்றெண்ணி நீங்கள் வாழ்த்துங்கள். 

இப்போது உங்கள் இரண்டு கரங்கையும் விரித்து உள்ளங்கைகள் இரண்டையும் பார்த்து கண்களை துடைத்து எழுங்கள் . 
அப்படியே பூஜை அறைக்கு செல்லுங்கள் அங்குள்ள நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களையும் கைகூப்பி இந்நாளை அனைத்து உயிர்களுக்கும் நலம்பிறக்கும் நாளாக மாற்றி அருள்வாய் இறைவா என மனம் நிறைந்து வேண்டுங்கள்.

இனி உங்கள் காலைக் கடன்களை முடியுங்கள்  .   
பதிவில் சொல்லியபடி நீங்கள் எழுந்து காலைக்கடன்களை முடிக்கும் போது மலஜலம் கழிக்கும் போது ( நீங்கள் குண்டலினி பயிற்சி செய்பவராக இருந்தால் )அதிக அழுத்தம் (முக்கி) கொடுத்து மலம் கழித்தல் கூடாது.
குளியல் . . 
சூரியன் உதிக்கும் முன் குளிப்பதாக இருந்தால் வடக்கு நோக்கியும் , சூரியன் உதித்த பின் குளிப்பதாக இருந்தால் கிழக்கு நோக்கியும் நின்று குளிக்கவேண்டும்.
குளிக்கும் முன் ஒரு செம்பு அல்லது பிளாஸ்டிக் மக்கில் முழுக்க ஜாலம் எடுங்கள் , சொல்லப்பட்ட திசையை நோக்கி நில்லுங்கள் .
அந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது விபூதியை போட்டு கலக்கி நீரினுள் ஒரு விரலை விட்டுக் கொண்டு சூரியனை வணங்கி , ஓம் ஸ்ரீ பவசிவ என 18 முறைகள் சொல்லி , குலதெய்வத்தினை எண்ணி வணங்கி , மூன்று தடவைகள் நீரினை தலையில் தெளித்துக்கொள்ளவும் , பின் மூன்று முறைகள் நீரெடுத்து முகம் கழுவவும் , பின் மீண்டும் மூன்றுமுறைகள் நீரினை நீங்கள் குளிக்க வைத்திருக்கும் நீரில் விடவும் .
மீதமுள்ள நீரினை தலையில் வழிய ஊற்றிக் கொள்ளவும் .
இதன்பிறகு குளிக்க துவங்குங்கள் . ஒவ்வொருமுறை நீர் ஊற்றும்போதும் உங்கள் இஷ்ட தெய்வத்தினை பெயர் சொல்லி ஊற்றிக் கொள்ளுங்கள் ( நமசிவய- ஓம் சக்தி-) நன்கு முகம் பின் கைகள் முழங்கைகள் , கால்கள் , பின் கால்கள் , மலபாகம் , மறைவிடங்கள் , குதிகால் உள்ளங்கால்கள் என்று உடலின் எந்த பாகமும் விடாது தேய்த்து நன்கு சுத்தப்படுத்துங்கள் , எல்லாம் மந்த்ரம் சொல்லியபடியே செய்ய வேண்டும்.
தனியறையாக இருந்தாலும் , உள்ளே தாழிட்டு குளித்தாலும் நிர்வாண குளியல் கூடாது . (இது மாத்ரு சாபமும், மாத்ரு தோஷமும் உண்டாக்கும்) சுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள் .
அலங்காரம். . . 
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி என்கிறார் அவ்வையார்.
அலங்காரத்தினை வேடம் என்று சொல்லும் அவ்வை அதனை அழகாக செய்துகொள்ள சொல்கின்றார்.
காரணம் உபாசகன் அலங்காரமாக இருப்பானேயாகில் சந்துஷ்டியாக (குதூகலமாக) கார்யம் செய்வான், அவன் மனதில் ஆனந்தம் இருக்கும். விரைவில் அவனது கார்யம் சித்திக்கும்.ஆனந்தமயமாக இருக்கும்.
தாய்தந்தையர் உள்ளவர்கள் விபூதியை நீரில் குழைக்கக் கூடாது. ஸ்தூலமாக (பவுடராக) தரிக்க வேண்டும்.
வடக்கு நோக்கி நில்லுங்கள். விபூதி தரிப்பவராக இருந்தால் நடுவிரல், மோதிர விரல், கட்டை விரல் மூன்றையும் கூட்டி விபூதியை எடுத்து வானம் , பூமி ,    குல தெய்வம் , உங்கள் இஷ்டதெய்வம் முதலியவற்றை துதித்து இடது உள்ளங்கையில் வையுங்கள் . வலது கையால் சிறிது நீரை எடுத்து கங்கா, யமுனா, சரஸ்வதி, காவிரி, நர்மதா என்று த்யானித்து சிரம் சுற்றி விபூதியில் விட்டு குழையுங்கள் ( தாய் தந்தையர் உள்ளவர்கள் நீர் விடாமல் மேற்கொண்டு செய்யுங்கள்) உள்ளங்கையில் விபூதியை பரப்பி அதில் ஓம் நமசிவய என மோதிர விரலால் எழுதுங்கள். பின் அதனை ஒன்று சேர்த்து இருகைகளாலும் தேய்த்து ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் இம்மூன்று விரல்களாலும் நெற்றியில் நமசிவய என்று சொல்லி மூன்று முறை இடவும்.
பின் புஜம், முன் கை, முழங்கை, பின் தோள்கள், இடுப்பு , மார்பின் மேல், நெஞ்சு , வயிறு போன்ற இடங்களில் மூன்றங்குலத்திற்கு மேல் நீளமில்லாதவாறு இடவும். நெற்றியில் மட்டுமே ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். (பெண்கள் நெற்றியில் மட்டும் இட்டால போதும் மீதியை வயிற்றில் பூசிக் கொள்ளலாம்)
இப்போது குனிந்தமர்ந்து கீழே சிந்தியுள்ள விபூதியை நன்கு துணியால் துடைக்கவும் , பாதம் படலாகாது.
பின்னர் உங்கள் வழக்கப்படி சந்தனமோ குங்குமமோ இட்டுக் கொள்ளுங்கள்.
இனி நீங்கள் வைத்திருக்கும் ஸ்வாமி மூர்த்தங்களை அலங்கரியுங்கள் .
பூ வைத்து , பொட்டிட்டு , பழம் , கல்கண்டு , போன்ற நைவேத்தியங்கள் வைத்து அலங்காரம் செய்து பூஜையை துவங்குங்கள்.
(நீங்கள் குரு உபதேசம் பெற்றிருந்தால் அதன்படியே செய்யுங்கள். இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் குருவிடம் பெற்றதை நிறுத்தக் கூடாது.)
.
தினசரி பூஜை செய்பவர்கள் தேங்காய் உடைத்து படைக்க வேண்டியதில்லை. 
ஆனால் தேங்காய் உடைத்து செய்யவேண்டும் என்பது குரு உத்திரவாக இருந்தால் செய்யலாம்.
வழக்கமான பூஜை முறைகளை செய்து ஊதுபத்தி , சாம்பிராணி தூபம் காட்டி விட்டு , ஊதுபத்தியை (குறைந்தது 5) மட்டும் எடுத்து வீடு முழுவதும் காண்பியுங்கள் , உதடு மட்டும் தெய்வ நாமம் சொல்வதை நிறுத்தக்கூடாது. வாசல் , சமையல் அறை , பணம் வைக்கும் பெட்டி இருக்கும் அறை என எல்லா இடங்களுக்கும் காண்பித்து பின் பூஜை அறைக்கு வாருங்கள் . ஒவ்வொரு அறைக்கும் ஒரு ஊதுபத்தி வையுங்கள். இரண்டு ஊதுபத்தி பூஜை அறையில் வைத்தால் போதும்.
வடக்கு நோக்கி அமருங்கள் அல்லது கிழக்கு நோக்கி அமருங்கள்.   
பூஜையை முதலில் விநாயகரில் துவங்க வேண்டும். கணபதியின் துதி சொல்லலாம் . “சுக்லாம் பரதம்“ சொல்வதானால் அதற்கு சில சடங்குகள் உண்டு , அதன்படிதான் சொல்லவேண்டும் .அதனால் எல்லோரும் அதனை சொல்லமுடியாது .  “ஐந்து கரத்தனை”  அல்லது கணபதி காயத்ரி தத் புருஷாய வித்மஹே“ சொல்லலாம் . வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
பின் உங்கள் பூஜை சிறந்து விளங்க வேண்டுமல்லவா ? அதற்கு எந்த தடையும் வரலாகாது அதனால் ஏதேனும் ஒரு கட்டு மந்த்ரம் சொல்லுங்கள்
உங்களுக்கு கட்டு மந்த்ரம் தெரியாது என்றால் அடியேனின் இ மெயிலில்  gurukaruna2006@gmail.com கேளுங்கள் தருகின்றேன் .
இனி  
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான மந்தரங்களை சொல்லுங்கள்.
மந்த்ரங்களை சொல்லும் போது ஓடாதீர்கள் மந்த்ரத்துக்குள்ளே ஆழ்ந்து சென்று உணர்ந்து அனுபவித்து சொல்லி மகிழுங்கள்.
அனைத்து மந்த்ரங்களும் சொல்லி முடித்த பின் ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்த்ரம் சொல்லி முடிக்க வேண்டும் .
எந்த காரியமும் கணபதியில் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்கவேண்டும் .
இதனை வேடிக்கையாக பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள்.
ஸ்ரீ ராம ஆஞ்சநேயாய நமஹ என்று ஐந்து முறைகள் சொல்லி முடிக்கலாம்.
தீப ஆராதனை காட்டி பூஜையை முடியுங்கள்.

பூஜைக்கு பின் . . .

பூஜை முடிந்தது . இப்போது உங்கள் தெய்வங்கள் உங்கள் முன்னே மிக ஆனந்தமாக அமர்ந்துள்ளார்கள் .
நீங்கள் இப்போது த்யானம் செய்ய துவங்கலாம்.
உங்கள் வழக்கப்படி அமர்ந்து கொள்ளுங்கள்.
மிக மெதுவாக மூச்சினை இழுத்து மூன்றுமுறை விடுங்கள் . அமைதியாகுங்கள்.
உங்களுக்கு தெரிந்த த்யான ஸ்லோகங்கள் மனதிற்குள் சொல்லுங்கள் உங்கள் வேண்டுதல்களை அது எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் .
அவர்களின் ஆசீர்வாதம் வேண்டுங்கள் , மன்றாடுங்கள் , எனக்கு வேறுயார் தருவார்கள் என உரிமையோடு கேளுங்கள் .
(உங்கள் வேண்டுதலில் நியாயமும் , சத்தியமும் இருக்கவேண்டும்)
இனி உங்கள் பூஜையின் பலன் உங்களைத் தேடி வருவதை பாருங்கள்.
நமது மனமே நமது செயல்களை வெற்றியாக்கி தரும் மாயாஜாலக்கன்னாடி.
அதனை நம் பிரியப்படி நடக்க நாம்தான் பழக்கவேண்டும் .
இப்படி சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் அமர்ந்திருங்கள். பின் பூஜையை சிறப்புடன் செய்ததை எண்ணி மகிழ்ந்து எழுங்கள்.
இவ்வாறாக நித்ய பூஜை செய்தால் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விருப்பம் நிறைவேறும்.


ஓம் நமசிவய.

Tuesday, January 13, 2015

உயர்நிலை



குமரவேல் வைத்தியநாதன் அவர்களின் மிக அருமையான கேள்வி :
.நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

அய்யா இந்த பாடலின் படி பார்த்தால் நாம் செய்யும் அனைத்தும் வீண் போல் அல்லவா தெரிகிறது இதன் கூற்று படி பார்த்தோமேயானால் கோவிலே தேவையில்லை என்றல்லவா வருகிறது .

ஆனால் இதே சிவவாக்கியர் நிச்சயம் ஈசனை சிலை வடிவில் தொழாமல் இருந்திருக்கமாட்டார் அப்படி இருக்க ஏன் இந்த முரண்பாடு?

விள்க்கௌம்.

அன்புள்ள குமரவேல் வைத்தியநாதன் , வணக்கம் , மிகவும் நல்ல கேள்வியைக் கேட்டிருகின்றீர்கள் , காரணம் ஆன்மீக மார்க்கத்தை அடைந்தவர்களும் இதே கேள்வியை மனதில் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அறிந்துள்ளேன் என்பதானால் கூறுகின்றேன்.

நாமும் பெருமானாரான சிவவாக்கியரும் ஒன்றா ? சரி இருக்கட்டும் .

உங்கள் கேள்விக்கு வருவோம்.

மகா பெரியவரான பெருமானார் சிவவாக்கியர் அறியாததா ? அல்லது அவர்களாலேயே அறிய முடியாததை நம்மால் அறிந்து கொள்ளத்தான் கூடுமா ?

அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பல ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளது , ஆனால் நாம் மற்றவர்கள் சொல்லும் எந்த ஒரு சொல்லையும் , விஷயத்தையும் நாம் நமது அறிவினாலேயே தெரிந்து கொள்ள முயல்கின்றோம் , விளங்கிக் கொள்கின்றோம் – காரணம் அதற்குமேல் சிந்திக்க நம்மால் – நாம் கற்ற அறிவால் முடியாததுதான்.

பெருமானார் சிவவாக்கியர் அவர்கள் சொன்னதை அவர் எப்போது சொன்னார் , யாருக்காக சொன்னார் என்பதை பார்க்கவேண்டும் .

நாம் முதல் பக்கத்தையும் இறுதி பக்கத்தையும் ஒரு சேர படித்துவிட்டு எப்படித்தான் இருக்கும் என முடிவெடுக்கின்றோம்.

அவ்வையார் மானிட பிறப்பினை அறிதென்கின்றார் ஓரிடத்தில் , பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டும் என்கின்றார்.

ஏன் இந்த மாறுபாடு.

அதனை பதிலாக சொன்னது மகனிடம் (முருகன்) இதைக் வரமாகக் கேட்டது தந்தையிடம் (சிவபெருமான்).

நாம் உடனே அவ்வையார் பிறவாமை கேட்கிறார் அப்பறம் பிறப்பே அரிது என்கிறாரே என்றெண்ணகூடாது.

அது அந்த இடத்திற்கான பதில் , அடுத்தது இந்த இடத்திற்கான வேண்டல்.

இரண்டுமே பேருண்மை.

மனித பிறப்பில்லாமல் வேறு எப்பிறப்பினாலும் தமது வினைகளை மனிதர்கள் தீர்க்கவே முடியாது.

மிக உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் மனமானது உருவ வழிபாட்டிலேயே இருக்குமானால் அதற்கு உய்யும் நிலையே கிட்டாது போகும்.
அதனாலேயே பெருமானார் சிவவாக்கியர் மிக விளக்கமாக, மனிதர்களுக்கு புரியும் விதமாக,  எளிமையாக அருளிச் செய்த பாடலாகும் .

ஆனால் அதனை மட்டும் படிப்பவர்களுக்கு அது நாத்திகவாதம் போன்று தோன்றும் .

உதாரணமாக :

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சிலேட்டு என்பதும் , அ ஆ அட்டையும் இன்றி அமையாதது.

ஆனால் phd செய்பவர் , அ ஆ அட்டையும், சிலேட்டுமே போதும் என்றிருந்தால் அது சரியா ?

அதுபோலவே

பக்தி மார்க்கம் துவங்கும் ஒருவரின் ஆரம்பகால பக்திக்கு , பாடல்களும் , உருவ வழிபாடும் மிக அவசியமான தேவையாகும்.

ஆனால் . . . .

பக்தி நெறியில் நின்று இறைவனின் மிக மேலான அழகையும் , இந்த பிரபஞ்சத்தை அவர் நடத்தும் அற்புதத்தையும் , அவரையும் உணர்ந்த பின்னும், உருவ வழிபாட்டை தொடர்ந்தால் அது நாம் இன்னும் நமது இறைவழிபாட்டின் முழுமையையும் , இறைவனையும் அறிந்ததற்கு அடையாளம் இல்லை.

அதனால்  

அப்படி உயர்நிலை கண்டு கொண்டவர்கள் இன்னும் உருவ வழிபாட்டிலே இருப்பதால் அவர்களையே மகா பெரியவரான சிவவாக்கிய பெருமானார் சாடுகின்றார்.

இதனை மேல்நிலையை அடைந்து , இறைவனை உணர்ந்தவர்களே உணர்வர் .(அறிவர் இல்லை).

ஓம் நமசிவய. 

Saturday, November 22, 2014

பிறப்பும் இறப்பும் ஏன் ?


பிறப்பும் இறப்பும் ஏன் ?

பிறப்பு எனும் பேரதியத்தை இன்னும் மானிடர் எவரும் புரிந்து கொண்டபாடில்லை எனும் போதிலும் பிறப்பு ஒரு புதிராகவேதான் உள்ளது.
எவ்வளவோ புதிர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பிறப்பின் பேருண்மையை இயற்கை (இறைவன்) இன்னும் தனது ஆதிக்கத்திலேயே வைத்துள்ளதை உணர்கின்றோம்.

எதனால் இந்த பிறப்புகள்? பிறப்பினால் யாருக்கு நன்மை ? ஒரு நொடியும் தவறாமல் தைல தாரையாக நடைபெறும் , இந்த பிறப்பெனும் நிகழ்வினால் விளையும் நன்மை யாது?

பிறப்புக்கும் இறப்புக்கும் யார் அல்லது எது காரணம் ? இதனால் அவர்களுக்கு அல்லது அதற்கு என்ன ஆதாயம் ?

விதிப்படி பிறப்பதும் , விதிப்படி மரணிப்பதும் தொடர்கதையானால் இதன் முடிவு எப்போது ?

இப்படியே போனால் பிறப்பின் மீதும் ,
இறப்பின் மீதும் வெறுப்பு ஏற்படாதா ?

ஒருவித அலுப்பும் சலிப்பும் ஏற்படுமானால் பிறப்பினாலும், பின் வரும் இறப்பினாலும் என்ன பயன் ?

எந்தவித காரணமுமில்லாமல் பிறப்பும் இறப்பும் இருக்குமா ?

அப்படியானால் . . . . . .

இந்த பிரபஞ்ச தோற்றத்தின் காரணமென்ன ? அதற்கும் ஜீவன்களின் பிறப்பிற்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா ?

. . . . . . . . .என்பது போன்ற எண்ணிக்கையில் அடங்காத கேள்விகள் அலைஅலையாக மனக்கடலில் எழுந்தவண்ணமாக இருந்ததால் இந்த கட்டுரையை எழுத நேர்ந்தது.

இதனை அன்பு நண்பர்கள் முன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன்.

பிறப்பு என்பது என்ன என்பதை முழுமையாக அறியாத வரையில் பிறப்பின் இரகசியத்தினை அறிந்து கொள்ள முடியாது.

பிறப்பினை அரிதிலும் அரிது என்றனள் ஔவை .
பிறப்பினை எதற்கும் உவமை சொல்லமுடியாதென்றார் மேலோர்.
பிறப்பினை இறப்பாக மாற்றக்கூடாது என்பதில் சமர்த்தர்கள் சித்தர்கள்.

இப்படி பல வகையிலும் சிறந்ததான பிறப்பு ஏன் இறப்பாகவும் மாறுகின்றது?

பிறப்பு சிறந்ததென்றால் இறப்பு வேண்டாமே ?

உத்தமர்களும் மரணிக்கின்றனர் , உன்மத்தர்களும் மரணிக்கின்றனர்.

ஏன் இந்த நேர்தல் ?

உத்தமரும் இறப்பர் என்றால் நான் உன்மத்தனாக இருக்கின்றேன் எனும் மனோபாபம் மனிதர்களுக்கு ஏற்படாதா ?

பிறப்பினை அரிதென்ற ஔவை பிறிதோரிடத்தில் பிறவாமை வேண்டுகின்றார்.
ஏன் இந்த முரண்பாடு ? கேள்விகள் , கேள்விகள் ?!?!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு திரைப்படப்பாடலில் பள்ளிவரை நாங்கள் , படைக்கிறவன் இறைவன் என்கிறார்.
அதாவது பள்ளியறையில் ஒன்று கலப்பதோடு மனிதனின் முயற்சி முடிந்தது அதன்பின் பிறப்பினை அருள்வது இறைவனின் பேரருள் என்கிறார்.
அது உண்மைதான், பள்ளியறையில் ஒன்று கலந்தவர்கள் அனைவரும் புத்திரபாக்கியம் பெறுவதில்லை.

அப்படியென்றால் பிறப்பினை தந்தருள்வது இறைவன்தான் (இயற்கைதான்) என்பதில் வேறு கருத்தில்லை.

அவரவர் வம்சம் தழைக்கவும் , வம்சம் தடைபட்டு போகவும் இறைவனே (இயற்கையே) முன் நின்று வழி நடத்துகின்றார்.
எத்துணை பெண் குழந்தைகள் இருந்தாலும் வம்சாவழி தோன்றாது, ஆனால் ஒரு ஆண் குழந்தை இருந்தால் வம்சம் பல்கி பெருகும்.

இந்த தோன்றலையும் , தோன்றா நிலையையும் இறைவன் (இயற்கை) அவரவர் விதிப்படி மிகச் சரியாக அமைத்து தருகின்றது.
இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

ஆனால் இந்த பிறப்பினாலும் அதன்பின் வரும் இறப்பினாலும் 
என்னபயன் ?
ஒரு வம்சம் தழைப்பதனாலும் , வம்சம் அழிந்து போனாலும் யாருக்கு என்ன பயன் ?
பகவான் கிருஷ்ணனாக இருந்தாலும் , மகாத்மாவாக இருந்தாலும் பூமியிலேயே தங்கிவிட முடியாது .
ஹிட்லராக இருந்தாலும் , கொடுங்கோலனாக இருந்தாலும் இங்கேயே தங்கிவிட முடியாது என்றால் . . . . . .
பிறப்பு எதற்கு ? இறப்பு எதற்கு ?

இறந்துதான் போகும் என்றால் பிறப்பே இல்லாமல் இருக்கலாமே !!!!!!!
பிறந்து அதன்பின் ஏன் இறப்பு நேரவேண்டும் ?

1. பிறப்பின் பின் அடையும் நாவின் சுவை , தேக சுகம் , பதவி , புகழ் தரும் மயக்கம் .
மது , மாது என வருகின்ற போக சுகங்களும் . . . . . பின் மரணம்.

2. பிறப்பின் பின் மனிதன் , யோகி , ஞானி , தீர்க்கதரிசி , மகரிஷி பின் மரணம் .
என்ன இது ? ஏதோ ஒன்று இடிக்கின்றதே ? என்ன அது ?  

பிறப்பின் காரணம் புரியாத ஒன்றுதான். ஆனால் அதில் ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது .

அது என்ன ?

பிறப்பு என்பதனை சற்று ஆழ்ந்து ஆய்ந்தால் ஒன்று விளங்குகின்றது , அதாவது ஜீவராசிகளின் பாப , புண்ணிய பலனாகவே பிறப்பு ஏற்படுகின்றது.
முற்பிறப்பிலும் , இப்பிறப்பிலும் செய்த பாப , புண்ணியங்களின் பலனாகவே இறப்பு நேர்கின்றது.
மீண்டும் பாப , புண்ணிய பலனாக பிறப்பு , மீண்டும் முற்பிறப்பின் , இப்பிறப்பின் பலனாக இறப்பு .
இதுவே தொடர்கதையாகி இன்றுவரை மட்டுமல்ல , இனி வரும் காலமும் தொடரும் கதை.
இதன் பொருளென்ன ? இதற்கு விடைதான் என்ன ?

இதோ விடை .....

ஒரு காரியத்தின் நிமித்தமாக நாம் வெளியூருக்கு சென்றால் , அந்த காரியம் நடைபெறவில்லையென்றால் என்ன செய்வோம் ? மீண்டும் அந்த ஊருக்கு சென்று அந்த காரியத்தினை செய்து முடிப்போம்.

அப்போதும் முடியாது போனால் மீண்டும் ஒருநாள் சென்று அந்த காரியத்தினை செய்வோம்.

இப்படி அந்த குறிப்பிட்ட காரியம் முடியும் வரை அந்த ஊருக்கு மீண்டும் மீண்டும் செல்வோம் அல்லவா ?

அது போலவே நாம் நமது ஒவ்வொரு பிறப்பின்போதும் அறிந்தும் , அறியாமலும் நாம் செய்த பாப , புண்ணிய காரியங்களின் தொகுப்பை கரைப்பதற்காக மீண்டும் புவியில் பிறப்பிக்கப்படுகின்றோம் ,

ஆனால் . . . .   

பிறப்பினை , அதன் சிறப்பினை உணராமல் மீண்டும் மீண்டும் பாபங்களையும் , புண்ணியங்களையும் செய்து மரணித்து மீண்டும் இறைவனின்(இயற்கையின்)பேரருள் கருணையால் பிறப்பிக்கப்படுகின்றோம்.

நாம் எதற்காக பிறப்பிக்கப்பட்டோமோ அதனை முற்றிலுமாக மறந்து , வெறும் கேளிக்கை , பதவி , புகழ் , பணபலம் , பெண் சுகம் அல்லது ஆண் சுகம் என புறச் சுக ஆவலிலேயே வாழ்நாளை கழிக்கின்றோம், மரணிக்கின்றோம்.

நாம் வந்த காரியத்தினை முடிக்காததினால் மீண்டும் ஒரு பிறவி தரப்பட்டு  இப்பிறவியிலாவது நாம் மாறுவோம் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆனால் மனிதன் அதைப்பற்றி கொஞ்சமும் கவலையின்றி மீண்டும் சிற்றின்ப வேட்கையில் சிக்கி சீரழிகின்றான் , மரணிக்கின்றான்.

இப்படியே பிறந்து இறந்து , பிறந்து இறந்து தொடர்கதையாகி போகின்றான்.
ஆக
பிறப்பு என்பது மீண்டும் ஒரு சந்தர்ப்பம்.
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வாய்ப்பு ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு வரம் ,
பிறப்பு என்பது மீண்டும் ஒரு அருள்கொடை ,
பிறப்பு என்பது மீண்டும் தரப்படும் இறைவனின் (இயற்கையின்) பேரருள்.
பிறப்பின் வாய்ப்பினை பயன்படுத்தி பிறப்பற்ற நிலையை ஜீவன்கள் பெற கொடுக்கப்படும் இறைவனின் பெருந்தயை.

இதனை ஸ்ரீ நாரத மகரிஷி கண்ட ஒரு சம்பவம் விளக்குகிறது .

நாரத மகரிஷி ஒருமுறை ஒரு பன்றி குட்டி போடுவதை காண்கின்றார்.
இவரைக் கண்டதும் பன்றியின் குட்டி ம்ரணிக்கின்றது.
பதறிப்போன மகரிஷி வேறுபக்கம் போகின்றார் , அங்கே ஒரு ஆடு குட்டி போடுகின்றது அதனைக் காணுகின்றார் மகரிஷி , பிறந்த அந்த ஆட்டுக்குட்டி இவரைக் கண்டதும் இறந்து போகின்றது , மேலும் பதறிப்போன நாரதர் வேறொரு இடத்தில் காராம்பசு கன்று போடுவதை பார்க்கின்றார் , அந்த கன்றும் பார்க்கின்றது , பார்த்தவுடன் கன்று மரணம் அடைகின்றது .

மிகவும் கவலை அடைந்த நாரத மகரிஷி மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிடுகின்றார் , அவரை சமாதானப்படுத்தும் 

மகாவிஷ்ணு , நாரதா ,   “ நீ சென்று அதோ அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகின்றான் அவனை சென்று கண்டுவா  என்கின்றார்.
ஸ்வாமீ , ஏதும் விபரீதம் நடைபெறாதே என வினவுகின்றார் , நாரதர். கவலைப்படாதே சென்று பார் என்கின்றார் மகாவிஷ்ணு.

நாரத மகரிஷி சென்றார் அந்த குழந்தையை கண்டார் , கண்டவுடன் சட்டென்று திரும்பினார் , 
அப்போது அந்த குழந்தை பேசியது “ மகரிஷி அவர்களே , கொஞ்சம் நில்லுங்கள்.
நான் பன்றியின் குட்டியாக பிறந்தேன் தங்களின் திருப்பார்வை என்மீது பட ஆட்டின் குட்டியாக மறுபிறப்பெடுத்தேன், மீண்டும் தங்களின் பார்வையை என்மீது செலுத்தி என்னை காராம்பசுவின் கன்றாக பிறக்கச் செய்தீர்கள் , மறுபடியும் தங்களின் திவ்ய திருஷ்டியைப் பெரும் பாக்கியம் பெற்ற நான் இன்று மன்னனின் வாரிசாக பிறக்கும் வாய்ப்பினை பெற்றேன் தங்களின் நற்கருணைப் பார்வையைப் பெற்ற நான் புவியில் நல்லவனாக வாழும் பேற்றினை அருள்வீர்களாக என வேண்டிக் கொண்டது.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பும் மேன்மையை நோக்கிய பயணமாக அமையவேண்டியது , ஆனால் மன மாயையினால் கீழ்மையை நோக்கிய பயணமாக மாற்றம் கண்டு இன்று பல்லாயிரம் கோடி உயிரினங்களாக பல்கி பெருகி நிற்கின்றது .
பிறப்பின் அவசியமும் , பெருமையும் ஜீவராசிகளை மேல்நிலையை அடையச் செய்வதற்காக இறைவன்(இயற்கை) தரும் சந்தர்ப்பம்.

பிறப்பு ஜீவன்களுக்குத்தான் ஆதாயம்.

ஆகவே பிறப்பினை கேவலப்படுத்தி வாழ்ந்து மரிக்காமல் , பிறப்பினை உணர்ந்து மேன்மையான வாழ்நிலையை அடைந்திட பயன்படுத்தினால் , நிச்சயம் , மீண்டும் பிறக்கும் நிலை அற்றுபோகும் வாய்ப்பினை பெறலாம் என்பது சர்வ நிச்சயம்.

இல்லையானால் மீண்டும் மகாபாரதம் போல ஒரு பேரழிவினை காண்பது திண்ணம்.
கொத்துகொத்தாக ஜீவன்கள் கொல்லப்படும் , சுனாமி, பெருந்தீ போன்ற அதனை இறைவனே (இயற்கையே) முன் நின்று நடத்தும் என்பதும் நிச்சயம்.

பிறந்து பிறப்பினை உயர்த்துவோம், இறந்து பிறப்பினை தவிர்ப்போம்.

அன்புடன் கருணாகரன்.

ஓம் நமசிவய.  

Wednesday, August 13, 2014

தன ஆகர்ஷணம்


உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பரிகாரங்கள்

அய்யா அவர்களுக்கு நன்றி :

தன ஆகர்ஷனம் செய்யும் அமானுஷ்ய பரிகாரம்.


பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை.

இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும்.

எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.

குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்கில்லை.

பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம்

(பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)

வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும்.

பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும்.

ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.

காயத்ரி மந்திரம் :

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத்ச விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோ ந: ப்ரசோதயாத் ||

உச்சரிப்பு முறை தகுந்த நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

(கோவில்களில் உள்ள அந்தணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்-

இப்பொழுது ஸீடீ வடிவிலேயே கிடைக்கிறது)


Vamanan Sesshadri  அய்யா அவர்களுக்கு நன்றி

எல்லோரும் கடைபிடித்து பயன் பெற வாழ்த்துகள்

ஓம் நமசிவய.

Wednesday, July 23, 2014

தீராப் பெருங்கடன் தீர எளிமையான வழி

மைத்ரேய முகூர்த்தம்


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.

நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் .....

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும். நமக்கு சிரமம் இல்லாமலே.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் எப்போதெல்லாம் சம்பவிக்கின்றது என்பதனை காண்போம்.


வருகின்ற 05.08.2014 அன்று 01.10PM  to 03.10PM இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.)

வருகின்ற 02.09.2014 அன்று 11.30 AM  to 01.30 PM –(01.20)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.


வருகின்ற 29.09.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது திங்கள்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 09.10.2014 அன்று 06.50 PM  to 08.30 PPM – (08.10)*
இது வியாழக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.


வருகின்ற 26.10.2014 அன்று 09.45 AM  to t11.45 AM –(11.35)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 05.11.2014 அன்று 06.00 PPM  to t06.45 PM –(06.30)*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 23.11.2014 அன்று 06.30 AM  to t08.15 AM –(06.00-to 08.00)*
இது ஞாயிற்றுக்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் விருச்சிகம்-நட்சத்திரம் அனுஷம்.) *திருக்கணிதம்.

வருகின்ற 03.12.2014 அன்று 03.15 PPM  to 04.45 PM–(03.10 to 04.40  )*
இது புதன்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி) *திருக்கணிதம்.

வருகின்ற 30.12.2014 அன்று 01.15 PM  to 02.45 PM – (01.10-to 002.50)*
இது செவ்வாய்க்கிழமையில் வருகின்றது. 
(லக்கினம் மேஷம்-நட்சத்திரம் அஸ்வினி.) *திருக்கணிதம்.


05.08.2014 , 02.09.2014 , 30.12.2014 ஆகிய நாட்கள் மிக விசேஷமான நாட்களாகும்.

*திருக்கணித பஞ்சாங்க முறை ( பொதுவாக உள்ளது வாக்கிய பஞ்சாங்க முறை )

இந்த நேரம் சேலம் மாவட்டம் இடைப்பாடியின் சூரிய உதயமாகும்.


உங்கள் தீராக்கடன் தீர வாழ்த்துகள்.

ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...