என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Monday, December 9, 2013

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே, வணக்கம்.
மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 6

நாம் அறிந்து கொள்ள முற்படும் யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பயன்படுத்தும் விதம் பற்றிய பாகத்தை காணப் போகின்றோம்.

சென்ற பதிவின் இறுதியில் நாம் கண்டது . . . .
ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .

மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை விரிவாக பார்ப்போம். “ . . .

ஸ்ரீ ஸ்ரீ மகா குருவான கருவூரார் மூலிகைகளையும் `அதற்குரிய மந்த்ரங்களையும் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

அவையாவன :

வசிய மூலிகையில் ஒன்றான சீதாதேவி செங்கழுநீர் எனும் மூலிகையை பறிக்கும் முன் “ஓம் ஸ்ரீம் லட்சுமி தேவி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான பொன்னூமத்தை எனும் மூலிகையை பறிக்கும் முன் “கிறீணி வருணியாரே மதர்நாமி சீவி வசியம் பவ் வே  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான கரும் செம்பை எனும் மூலிகையை பறிக்கும் முன் அதற்கு தாமரை அல்லது கற்றாழை நூலில் காப்புக்கட்டி பூஜைகள் செய்து “ஓம் ஓம் சியாமள ரூபி சாம்பவி கிறீங்கி விலிங் கிறிஞ்சாதகி “ என்ற மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான வெண் குன்றிமணிக் கொடி எனும் மூலிகையை பறிக்கும் முன் அமாவாசையன்று காப்புக்கட்டி பூஜை செய்து “வம்மம் வசவிச நிறை மிருக வசீகரி ஓம் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

வசிய மூலிகையில் ஒன்றான மஞ்சள் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை பறிக்கும் முன் ஒரு வெள்ளிக்கிழமையன்று காப்புக்கட்டி மறு வெள்ளிகிழமை     “ ஓம் கிலியுஞ் சவ்வு மஹி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

மோகன மூலிகையில் ஒன்றான வெண் ஊமத்தை எனும் மூலிகையின் இலையை  பறிக்கும் முன் “ மா இதான் மத்தம் தொன்மத்தி ஓம் ஆம் இலீஞ் சத்திசன மோகினி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான மருளுமத்தை எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

மோகன மூலிகையில் ஒன்றான ஆலம் விழுது எனும் மூலிகையை  பறிக்கும் முன் “ ஓம் தேவ மோகம் வருக வருக “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

******

உச்சாடன மூலிகையில் ஒன்றான நரி மிரட்டி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு வியாழனன்று காப்புக்கட்டி “ சடாய் சடாய் தும்ம சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான மான் செவி கள்ளி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு மன மகிழ்வுடன் வாசனை மலர்கள் தூவி தூபமிட்டு , தீபம் காட்டி  “ அருணகிரி ஆங்கார சத்தி சத்தி தாய் உச்சாடி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

உச்சாடன மூலிகையில் ஒன்றான ஆரண முரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் கோர கோர ரூபி மாயி சடாய் சடாய் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

*******

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான கட்டுக் கொடி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சீலிகிளால் பேத்துலால் பேத்து சிவசிவா“ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜலஸ்தம்பனம்)


ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான பால்பிரண்டி (பாற் குரண்டி)  எனும் மூலிகையை  பறிக்கும் முன் ,  “ நீலகண்டி விசைய விசைய உயர்திற அத்திற் அகலந் தோபா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(சுக்லஸ்தம்பனம்)

ஸ்தம்பனம் மூலிகையில் ஒன்றான நத்தை சூரி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ ஓம் வச்சிர ரூபி சூரி சூரிம, காவீரி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .(ஜெயஸ்தம்பனம்)

*******


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறு முன்னை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடியின் வேருக்கு காப்புகட்டி ,  “ சர்வ ஆகமுஷ்ணி சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும் .

ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான சிறியா நங்கை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு கரி நாளில் காப்புகட்டி ,  “ சர்வ பிசாகர்ஷனி சர்வ மோகினி சூழ் கிருஷ்ணி வா வா  “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


ஆகர்ஷனம் மூலிகையில் ஒன்றான அழுகண்ணி எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி ,  “ சர்வ சித்த மோகினி , சர்வா கிருஷ்ணி சாம்பஷ சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

பேதனம் மூலிகையில் ஒன்றான கோழியவரை எனும் மூலிகையை  பறிக்கும் முன் செடிக்கு திங்கள் கிழமை காப்புகட்டி சித்திரை நட்சத்திரத்தன்று  “ அரி அர தேவி , பிரம தேவி சர்வ தேவியே தீர் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான செம்பசலை கீரை எனும் மூலிகையை  திருவாதிரை அன்று காப்பு கட்டி,  “ சீறியுங்  கீறியுங் சீறியும் “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பேதனம் மூலிகையில் ஒன்றான கீழாநெல்லி எனும் மூலிகையை  புதன் கிழமை  அன்று காப்பு கட்டி வியாழன் அன்று தேங்காய் உடைத்து அளமை பெறும் ,       “ பூமி வித்தேஷணி அஞ்சணி மூலி சகல சர்வ பழமை பல பதார்த்தத் தெரிய சுவாகா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

*******

மாரணம் மூலிகையில் ஒன்றான கார்த்திகை கிழங்கு எனும் மூலிகையை  கார்த்திகை நட்சத்திரத்தன்று மஞ்சள் நூல் காப்பு கட்டி ஆடு பலி கொடுத்து ,      “ சரவணபவா நமா “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.


மாரணம் மூலிகையில் ஒன்றான காஞ் சொறி வேர் எனும் மூலிகையை  பௌர்ணமிக்குப் பின் வரும் முதல் திதியில் காப்பு கட்டி மறுநாள் மத்தியானம்  அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து நீரில் ஆட்டி சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். (மந்திரமில்லை)

மாரணம் மூலிகையில் ஒன்றான நச்சுப்புல் எனும் மூலிகையை  மன மகிழ்வுடன்  பூஜை செய்து காப்பு கட்டி , “ விருகனீ விஷதரி “ என்று செடியின் முன் நின்று மந்த்ரம் ஜபித்து , அந்தச் செடியின் ஆணிவேரை அறுத்து விடாமல் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சில காரணங்களுக்காக எல்லாவித  மூலிகைகளுக்கும் மந்திரங்கள் சொல்லப் படவில்லை.
முழு விபரமும் அறியவும் , பயன்படுத்தும் முறை தெரியவும்  தகுந்த குரு வேண்டும்.
பயிற்சியில் முழுமை கண்டால் குருவே உங்களை வந்தடைவார் .


ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய கிழமைகளை சொல்லும் போது ...

வசியம் – ஞாயிறு , மோஹனம் – திங்கள் , பேதனம் – செவ்வாய் , ஸ்தம்பனம் - புதன் , உச்சாடனம் – வியாழன் , ஆக்ருஷ்ணம் – வெள்ளி , மாரணம் – சனி உகந்ததென்கிறார்.

ஸ்ரீ ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானானவர் அஷ்ட கர்மாக்களுக்கும் உரிய திக்குகளை குறிப்பிடும் போது ...

வசியம் – கிழக்கு , மோகனம் – வடக்கு  , பேதனம்  - வடகிழக்கு , ஸ்தம்பனம் – தென்மேற்கு , உச்சாடனம் – வடமேற்கு , ஆக்ருஷ்னம் – மேற்கு , மாரணம் – தெற்கு என உபதேசிக்கின்றார்.

·         மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஈசான்யம் சிறந்ததெனவும் அருள்பாலிக்கின்றார். 

தீபங்களையும் , மந்த்ரங்களையும் குறிப்பிடும்போது :

கிழமை : ஞாயிறு , வஸ்திரம் : சிவப்பு பட்டு , திசை : கிழக்கு நோக்கி  வில்வ மரப் பலகையில் அமர்ந்து , திரி : தாமரை நூல் ,நெய் : காராம் பசு (கருத்த நிற முள்ள பசு ) நெய் : தீபம் ஏற்றி யநமசிவ என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய வசியம் சித்திக்கும் .

கிழமை : திங்கள்  , வஸ்திரம் : மஞ்சள் பட்டு , திசை : வடக்கு நோக்கி  மான் தோலில் அமர்ந்து , திரி : கன்னி நூல் , எண்ணை : நல்லெண்ணெய் : தீபம் ஏற்றி மசிவயந என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு சொல்லி முறைகள் ஜபம் செய்ய மோகனம் சித்திக்கும் .

கிழமை : செவ்வாய் , வஸ்திரம் : சாதாரண வெள்ளை  , திசை : வடகிழக்கு நோக்கி  பளிங்கு கல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து , திரி : கந்தல் துணி  , எண்ணை : புன்னை எண்ணை : தீபம் ஏற்றி யவசிநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய பேதனம் சித்திக்கும் .

கிழமை : புதன் , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தென்மேற்கு நோக்கி  ஆல மர பலகையில் அமர்ந்து , திரி : எவ்விதமான திரியும் , எண்ணை : ஆதளைக் கொட்டை  எண்ணை : தீபம் ஏற்றி நமசிவய என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஸ்தம்பனம் சித்திக்கும் .

கிழமை : வியாழன் , வஸ்திரம் : பச்சை பட்டு  , திசை : வடமேற்கு நோக்கி பலா மர பலகையில் அமர்ந்து , திரி : இலவம்பஞ்சு , எண்ணை : புங்க எண்ணை : தீபம் ஏற்றி வயநமசி என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய உச்சாடனம் சித்திக்கும் .

கிழமை : வெள்ளி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : மேற்கு நோக்கி  சண்பக மர பலகையில் அமர்ந்து , திரி : வெள்ளெருக்கு நார் , எண்ணை : ஏரண்டத்தெண்ணை : தீபம் ஏற்றி வசியநம என்ற மந்த்ரத்தை லட்சத்தி எட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய ஆக்ருஷ்ணம் சித்திக்கும் .

கிழமை : சனி , வஸ்திரம் : சாதாரண பட்டு  , திசை : தெற்கு நோக்கி  அத்தி மரத்தால் ஆன பலகையில் அமர்ந்து , திரி : வேலிப்பருத்தி , எண்ணை : வேப்ப எண்ணை : தீபம் ஏற்றி யசிவநம என்ற மந்த்ரத்தை லட்சத்திஎட்டு முறைகள் சொல்லி  ஜபம் செய்ய மாரணம் சித்திக்கும்.

சில சூட்சும வார்த்தை விளக்கங்கள் :
கன்னி நூல் காப்பு கட்டி  என்பது தாமரை மொட்டு உள்ள (பூ பூக்கும் முன் )  தண்டினை எடுத்து அதிலிருந்து எடுக்கும் (மகரந்த இழை) நூலினால் குறிப்பிட்ட மூலிகையில் மூன்று முறை சுற்றுவது .

மஞ்சள் நூலால் காப்பு கட்டி என்றால் விரலி மஞ்சளை முனை முறியாமல் எடுத்து அறைத்து , அதில் மேற்படி கன்னி நூலை புரட்டி எடுத்து  பின்னர் உலர்த்தி வைத்துக் கொண்டு பயன்படுத்துவதாகும்.

பொதுவான மூலிகை சாப விமோசன மந்திரம் .

 "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாசய நாசய, சித்தர் சாபம் நாசய நாசய , தேவ முனி , அசுர முனி சாபம் நாசய நாசய, ஸர்வ ஸர்ப்ப சாபம் நாசய நாசய ஹூம்பட் ஸ்வாஹா , என்பதாகும்.

அன்பிற்குரிய நண்பர்களே ,

யோகமும், சித்தும், மந்த்ரமும் , மாந்த்ரீகமும் நம் நலனுக்காக இறைவனால் உருவாக்கப்பட்டதேயன்றி பிறருக்கு தொல்லை கொடுக்க அல்ல என்பதனை உணர்ந்து செயல்படுங்கள்.

“ இன்றைய விதைப்பு நாளைய அறுவடை என்பதை
எப்போதும் , எந்த நிலையிலும் மறக்கவேண்டாம்

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி முடிவுற்றது .

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன்.

4 comments:

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

வணக்கம், இனி தங்களின் தளத்திலும் அடியேன் பதிவுகள் இணைக்கப்படும், தங்களின் அன்பான அழைப்புக்கு நன்றி.

பாவா ஷரீப் said...

அய்யா இந்த மந்திரங்கள் எந்த நூலில் உள்ளது

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

சித்தர்களின் மந்திரக்கலை எனும் நூலில் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கருவூராரின் மந்திர காவியம் மந்திர நூலில் இருந்து எடுத்து கையாளப் பட்டிருக்கின்றது , அதிலிருந்து பயனடைந்த பலதில் சிலவற்றை இங்கே தந்துள்ளேன் .

Dr.kr said...

நல்ல தகவல்கள் .முறையாய் பயன்படுத்தினால் இறையருள் கிட்டலாம் .நன்றியின்பால்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...