என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, December 31, 2016

உங்கள் கேள்வி அடியேன் பதில்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஓம் நமசிவய :

கேள்வி :

 உயிர் வேறு ஆன்மா வேறு பின் ஏன் இரண்டும் ஒன்றாக சென்று வருகின்றன விளங்கவில்லை, விளக்கம் தாருங்கள்.

பதில் :

அன்பிற்குரிய அய்யா , உயிர் என்பதும் ஆத்மா என்பதும் ஒன்றே
ஆனால் ஆத்மா வேறு ஆன்மா வேறு.  ஆன்மா என்பது பூமியில் பிறந்துள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானஒன்றே ஆனது. எம்பெருமான் எனும் மூல ஜோதியில் இருந்து உருவானது. ஆத்மா எனப்படும் உயிரானது பல பிறப்புகளில் தான் பெற்றிருந்த உடலால் செய்த பாபங்களையோ புண்ணியங்களையோ கரைப்பதற்க்காக கர்ம பூமியில்(பூலோகத்தில்) அவதரிக்கின்றது
அவ்வாறு அவதரிக்குங்கால் அதற்கு அதனை அது யார் என நினைவூட்டவும் ,அந்த உயிர் வந்த நோக்கம் தெரிவிக்கவும் அதனுடன்ஆன்மா பயணிக்கின்றது 

ஓம் நமசிவய .

எது தர்மம்? இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை ஐயனே

தர்மம் எது ?
தர்மத்திற்கு ஒரு சிறு உதாரணம் சொல்கின்றேன் .
ஒரு நண்பரை நம் வீட்டுக்கு அழைக்கின்றோம் அவர் வருகின்றார் . நாம் அவரை அமரச்செய்து அவருக்கு வேண்டியவற்றை செய்கின்றோம்.
இப்போது நமது வீட்டிக்குள் நாம் அங்கும் இங்கும் செல்ல வேண்டியுள்ளதற்காக அவரை அதாவது நம் வீட்டிற்கு வந்துள்ள நண்பரை அவர் அமர்ந்துள்ள இடத்தில இருந்து நகரச் செய்வது , TV தெரியவில்லை கொஞ்சம் சாய்ந்து கொள்ளுங்கள் - அங்கு வேண்டாம் இங்கே வந்து அமர்ந்து கொள்ளுங்கள் என வேறு இடத்தில் அவரை எழுந்து அமரச் செய்வதும் தர்மம் இல்லாத செயலாகும்.

ஓம் நமசிவய

அப்படியானால் இன்று உலகில் நடைபெறும் அனைத்து காரியங்களுமே அதர்ம செயலே ஆகும்.
இது கலியின் பாதையில் செல்லும் லோக வர்த்தமான செயலாகும்.
இதிலிருந்தும் தப்புகின்றவனே மெய்ஞானவான் . துஷ்டர்களின் மத்தியில் இருந்த விதுரனைபோல 
.
ஒரே வரியில் சொல்வதென்றால் மனசாட்சிக்கு த்ரோகம் அதாவது உறுத்தாத விசயத்தை செய்வதே தர்மமாக எடுத்துக்கொள்ளாலாமா இந்த கலியில் .

நிச்சயமாக ... அருமை மிக சரியாக சொல்லிவிட்டீர்கள் ஓம் நமசிவய .
மிக்க நன்றி ஜி. திருச்சிற்றம்பலம்



ஓம் நமசிவய

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...