அன்பானவர்களே !!!
விண்ணகத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் இருந்தபோதிலும் மனிதர் வாழ்வில்,
ஆதாரங்களையும் மாற்றங்களையும் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களே உண்டாக்குகின்றன. என்பதை நமது முன்னோர்கள் கண்டுணர்ந்தார்கள். நமக்கும் உணர்த்தினார்கள்.
மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கும், நமக்கும் (மனிதருக்கு) தொடர்புள்ளதை கண்டு ஆய்ந்து நமக்கு பகுத்து தந்துள்ளார்கள்.
இருபத்தேழு என்றால் வெறும் இருபத்தேழு அல்ல ஒவ்வொன்றிலும் உட் கூறுகளாக நிறைய உள்ளது.
அதில்
அசுவனி, மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,அஸ்தம், சுவாதி,அனுஷம், திருவோணம்,ரேவதி இவைகள் ஒன்பதும் தேவ கணம் என்றும்,
பரணி,ரோஹிணி,திருவாதிரை,பூரம், உத்திரம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி ஒன்பதும் மானுஷ கணம் என்றும்,
மீதி இருக்கும்
கிருத்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,
கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் என்பவை ஒன்பதும் ராக்ஷஸ கணம் என்றும் வகுத்துள்ளார்கள்.
பொறுமை,அடக்கம்,மூர்க்கம் இம் மூன்றும் மனிதர்களின் பொதுவான குணாதிசயமாகும்.
நீங்கள் எந்த நட்சத்திரம் என்று கண்டு உங்களுக்கு அந்த குணம் உண்டா இல்லையா என கண்டு கொள்ளுங்கள்.
அன்புடன் இர.கருணாகரன்.இடைப்பாடி.
No comments:
Post a Comment