அன்பானவர்களே ! நாம் காணும் எந்த ஒரு சாதனையாளரும் தனது சாதனையை நொடியில் சாதித்தில்லை,பலநாட்கள் முயன்று,பலநூறு முறை தோற்று, கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி சலிக்காமல் தனது நோக்கம்,எண்ணம்,செயல் என ஒரே நேர்கோட்டில் பயணித்ததால் சாதித்தார்கள்.
நாம் ஏதாவது சாதனை செய்தால் உடனே அதனுடைய வெற்றியை காண துடிக்கிறோம், வரவில்லை என்றால் சோர்ந்து போகிறோம், அதுமட்டுமல்ல, மீண்டும் முயற்சிப்பதுமில்லை.
பொறுமையும்,விடாமுயற்சியும், சாதிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கமும் இருந்தால் மட்டுமே சாதனையை செய்ய இயலும்.
பலநாட்கள் உறக்கமும், பசியும், உடல் மற்றும் மன ஒற்றுமையும் கலந்ததே ஒரு சாதனை.
இதனை நினைவில் கொள்ளவேண்டியது சாதனை செய்ய எண்ணுபவர்களின் முதல் விதியாகும்.
நம்மை நாம் புடம் போடுவோம்.
பற்பல சாதனைகள் செய்வோம், நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்ப்போம்.
அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.
No comments:
Post a Comment