என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, March 30, 2013

என்னுடன் வரப்போவது யார் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு நண்பர்களே, வணக்கம்.

என்னுடன் வரப்போவது யார் ? 

நிச்சயமான ஒரு பயணத்தின் திட்டம்.

நம்மில் பலரும் எங்கோ ஓரிடம் பயணம் செல்வதாக இருந்தாலும் , அந்த பயணத்திற்கான பயணச்சீட்டு , அந்த பயணம் செய்யும் தூரம் , அதற்கான நேரம் , அந்த பயணத்தில் உண்பதற்கான உணவு , கொறிப்பதற்க்கான தின்பண்டங்கள், சென்று தங்குவதாக உத்தேசித்துள்ள இடம், அந்த நாட்களுக்குண்டான செலவுக்குரிய தொகை , அங்கே நாம் உடுத்திக் கொள்ள அழகிய நல்ல துணிமணிகள், நம்மை அழகுபடுத்திக் காட்டும் சாதனங்கள், அங்கு சந்திக்க இருக்கும் நபர்கள் , அவர்களுடன் சேர்ந்து நாம் காண விரும்பும் இடங்கள், திரும்பும் நாள், அதற்குண்டான பயணச்சீட்டு என மிக சிரத்தையுடன் கவனமாக ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து பாதுகாப்போம் , அதனை பயணம் துவங்கும் நாள் வரை பத்திரப்படுத்துவோம்.
சிலவேளைகளில் ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமது அந்த பயணம் தடைபட்டு போகும் , அந்த நாளில் நமது மனம் மிகவும்  சங்கடப்படும் , தாங்கவொண்ணாத துக்கப்படும் பின்னர் ஒருவாறாக சமாதானமாகிப் போகும். சிலநாட்கள் வரையிலும் கூட அந்த வேதனை நம்மை வாட்டுவதுண்டு . அவ்வளவு தூரம் சிரமப்பட்டு பயணம் திட்டம் போட்டு கடைசியில் பயணம் நின்று போனதை பலரிடமும் சொல்லி சொல்லி வருத்தப்படுவோம். பயணம் நின்று போனதை மனம் ஏற்க முடியாமல் ஏதேதோ நினைவில் வந்து கலங்க வைக்கும். யாரிடமும் சரிவர பேசமாட்டோம் , ஒரு சோகம் நிறைந்த முகமாக தோற்றம் கொண்டு நடமாடுவோம். ஒரு விபரம் அறியாத குழந்தையின் நிலையை கொண்டிருப்போம்.
காரணம் நாம் பயணத் திட்டத்தை திட்டமிடும்போதே கற்பனையில் மிதந்து மனதால் அந்த இடத்தை அடைந்து விடுகின்றோம் , அங்கே பல இடங்களை கற்பனைக் கண்களால் பார்க்கின்றோம், அங்கே அமர்ந்து நண்பர்களோடு பேசி மகிழ்கிறோம், நாம் துணிமணிகளை தேர்ந்தெடுத்து வைக்கும் போது கற்பனையில் அந்த துணிமணிகளை அணிந்து கொண்டு அங்கே மனதால் நடமாடினோம் , பாடினோம் , ஆடினோம் மிகவும் சந்தோஷமாக அந்த நொடிகளை கழித்துக் கொண்டிருந்தோம்; இன்னும் சொல்லப்போனால் அங்கே போகவில்லையே தவிர அந்த இடத்திலேதான் கற்பனையில் வாழ்ந்து, ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தோம். அதனாலேயே நம்மால் அந்த பயணத்திட்டம் நிறைவேறாது போனதும் நமது உள்மனம் மிகவும் சோர்ந்து போனது.
மேலும் நாம் பயணம் போவதை பலரிடமும் ஆனந்தமாக , கொண்டாட்டமாக ஒரு குழந்தையைப்போல் , குதூகலத்துடன் சொல்லி மகிழ்ந்திருந்தோம்; அவர்கள் இப்போது ஏன் பயணம் போகவில்லையா? எனக்கேட்டால் என்ன வென்று பதில் சொல்வது ? என ஒரு கவலையும் வந்து விடுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு எவ்வளவோ வேலை நாம் பயணம் போகாததை அவர்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை, காரணம் அவர்களுடைய பல பயணத்திட்டங்கள் நிறைவேறாமல் போய் இருக்கின்றது. இது ஒரு கவலைபடத்தக்க விஷயமாக அவர்கள் நினைக்கப்போவதில்லை , ஆனாலும் நமது மனம் போகாத அல்லது போகமுடியாமல் போன ஒரு சாதாரண பயணத் திட்டத்தில் மிகவும் சோர்ந்து போய் விடுகிறது .
மற்றவர்கள் நமது பயணத்திட்டம் நிறைவேறாமல் போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனையும் நம்மால் ஏற்க முடிவதில்லை , ஒரு வார்த்தையாவது ஏன் பயணம் போகவில்லை, காரணம் என்ன  என்று ஆதங்கமாக கேட்கிறார்களா பார் ! நாம் போகாததில் இவர்களுக்கு எல்லாம் ஒரு சந்தோஷம் , நாம் பயணம் போவதை சொல்லும் போதே அவுங்க முகத்தில ஒரு பொறாமை தெரிஞ்சிது, இப்ப போவலைன்னதும் இவுங்களுக்கெல்லாம் ஒரே  குஷி என அதையும் ஒரு குறையாகவே எடுத்துக்கொள்ளும் , உண்மையில்  மற்றவர்கள் நம்மை “ பாவம் அவுங்களே பயணம் போகாத வருத்தத்தில் இருப்பார்கள் நாம் ஏன் அதை கிளறி அவர்களை வேதனைப்பட வைக்கவேண்டும் என எண்ணியிருப்பார்கள்.  ஆனால் நம்மால் அவர்கள் அப்படி சிந்திப்பார்கள் என்று எண்ண முடிவதில்லை .
நாம் திட்டமிடும் நம்முடைய எல்லா பயணத்திட்டங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தடைபடக்கூடும் , ஏனெனில் நம்முடைய முன்னோடிகளான தாத்தா , பாட்டி, தந்தை, தாயார், அண்ணன், மாமா, நண்பர்கள், நண்பிகள் என இன்னும் உள்ள பலருடைய பயணத் திட்டங்களெல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டிருக்கின்றன,அதன்பொருட்டு அவர்கள் நம்மைப்போல் ஒரு துக்கசாஹரத்தில் மூழ்கவில்லை என்பதை ஏன் நாம் நினைவில் கொள்வதில்லை.
அதே வேளையில் எவராலும் மாற்றி அமைத்துக் கொள்ளவே முடியாத , தனக்காக வேறொருவரை மாற்றி அனுப்ப முடியாத, தவிர்க்கவே முடியாத ,  எந்த காரணத்தினாலும் தடைபடவே முடியாத, பயணத்திற்கான வயது உனக்கு இல்லை , பாஸ்போர்ட் வேண்டும், உன்னிடம் இல்லை, நீயெல்லாம் பயணம் செய்யமுடியாது என்று நம்மை ஒதுக்க முடியாத , நானெல்லாம் வரமுடியாது என்று தப்பித்துக் கொள்ள முடியாத, அடுத்த முறை வருகிறேன் இப்போது வரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லமுடியாத, இந்த ஒரு வேலை முடிந்தவுடன் நானே வந்து விடுகிறேன் என்று சொல்லமுடியாத, பையனுக்கு ஒரு கல்யாணம் அதைமட்டும் பார்த்து விட்டு வருகின்றேனே, பேரனை அல்லது ஒரு பேத்தியை அல்லது ஏதாவது ஒரு வாரிசை பார்த்து விட்டு அல்லது ஒரு வீடு எனது சின்ன வயது கனவு அதை மட்டுமாவது கட்டிவிட்டு வந்து விடுகின்றேன் , ஒரே ஒரு நிமிடம் கொடுங்கள் அந்த பணம் எங்கிருக்கின்றது என்பதை குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு வந்து விடுகின்றேன் என்று “டைம்ப்ளீஸ் கேட்க முடியாத , கையெழுத்து போடும் வரையாவது கொஞ்சம் விடுங்களேன் , கொஞ்சம் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு வருகின்றேன் என்று கெஞ்ச முடியாத, எனக்கு அங்கு வர பிடிக்கவில்லை என்றால்  என்னை விடுங்களேன் என்று அதட்ட முடியாத , எனக்கு எந்த அளவு செல்வாக்கு உண்டு தெரியுமா ? வரமுடியாது என்று சொன்னால் உன்னால் என்னை என்ன செய்யமுடியும் ? என்று இறுமாப்புடன் பேசமுடியாத , மந்திரி முதல் ஜனாதிபதி வரை எனக்கு அடக்கம் நீ யார் என்னை வா என்று அழைக்க என்று மிரட்டி தட்டிக் கழிக்க முடியாத ஒரு நிச்சயமான ஒரு பயணம் இருக்கின்றது என்பதை நாம் அறிவோமே, அந்த பயணத்திற்கான முன்னேற்பாடுகளை என்றாவது செய்திருக்கின்றோமா ? சிந்தித்திருக்கின்றோமா ?
ஏதோ நாம் மட்டும் அந்த பயணத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் போல அல்லவா நமது நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஞானிகளையும், ரிஷிகளையும், முனிவர்களையும், சித்தர் களையும் கூட விடாமல் அழைத்து சென்ற  பயணம். இந்த திட்டத்தை உருவாக்கிய இறைவனே மனித , மிருக, பறவை என பல்வேறு உருக்கொள்ளும் போது தட்டாமல் சென்ற பயணம். நாம் மட்டும் மீற முடியுமா ? என்ன !
பயணம் தெரியும் ஆனால் எங்கே என்று தெரியாது , கண்டிப்பாக பயணம் உண்டு ஆனால் என்றைக்கு என்று தெரியாது என்ற சூழலில் நாம் என்றைக்கும் அந்த பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கவேண்டாமா ? நாளைக்கு என்பது சாஸ்வதமான ஒன்றா ? இன்றைக்கு அதிலும் இந்த நொடிதானே உண்மை
அதனை மறப்பது நன்றல்லவே என்பதனை நினைவு படுத்தவே இந்த கட்டுரை .
இது நிச்சயமான பயணம், இதற்கான பயணத்திட்டம்; அதற்கான முன்னேற்பாடுகள் செய்து கொள்ள மறக்கவேண்டாம் .
நான் ரெடி , என் பயணத்திட்டம் ஓகே!
அப்ப நீங்க !!!!!!!
மீண்டும் ஒரு தலைப்புடன் சந்திக்கின்றேன் ..          

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...