பலரது மனதிலும் எழும் கேள்வி ஒன்று உண்டு
எப்ப கோவிலுக்கு போவது ?
எப்போது முதல் கோவிலுக்கு போகலாம் அதாவது
எந்த வயது முதல் கோவிலுக்கு சென்று ஸ்வாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம் என்பதுதான் அந்த கேள்வி ?
எந்த வயதில் கோவிலுக்கு செல்லலாம் என
தெரிந்தால் அப்போது முதல் போகலாம் ஏன் வீணாக முன்பாகவே போய்
எதிர்பார்த்திருக்கவேண்டும் என்கின்ற எண்ணமே காரணம் .
மற்ற எந்த தேவைக்கும் , வேலைக்கும் ஒருநாளே
முன்பாக போக நினைக்கும் மனிதர்கள் கோவிலுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் போனால்
போதும் என எண்ணுகிறார்கள்.
சிறிய வயதில் சிகரெட், பான்பராக் , போதை ,
பெண் சகவாசம் என இருப்பவர்கள் , நமக்கென்ன வயது இந்த வயதில் இப்படி இருக்கின்றோமே
என்று எண்ணுவதில்லை , அது எல்லா வயதுக்கும் ஏற்றதாகின்றது .
ஆனால் கோவிலுக்கு போக
மட்டும் மனிதர்களுக்கு வயதும் காலமும் தேவையாகின்றது.
அம்மா , நான் கோவிலுக்கு போய்வரேன்னு
சொன்னவுடன் , நானும் வரேன் வெள்ளிகிழமை போகலாம் எனும் தாயின் குரல் கேட்கிறது.
ஏன் மற்ற நாட்களில் செல்லக்கூடாதா ? மற்ற
நாளில் அங்கே கடவுள் இல்லையா ? அப்படி இல்லை நமக்கு வசதியாக இருக்கும் நாளில்தான்
கோவிலுக்கு செல்வது எனும் மனப்பாங்கு வந்து விட்டது.
எப்போ பார்த்தாலும் கோவில்லையே இருக்கே
சாமியாராயிட்டயா என்கிறார்கள் , கண்டிக்கின்றார்கள் , கோவில்ல இருந்தால் சாமியாரா
, கோவிலுக்கு போவது நல்ல பழக்கம் இல்லையா ?
இளம் வயதில் கோவிலுக்கு போகும் பழக்கம்
இருந்திருந்தால் இன்றைய இளைஞர்கள் இன்று செல்லும் தவறான பாதையும், கற்பழிப்புகளும்
, போதையின் பாதையும் வந்தே இருக்காதே !
பெற்றோர்கள் ஏன் அதை மறந்தார்கள் ?
நல்லொழுக்கம் இல்லாது போனால் நாமும் , நமது வீடும் , நாடும் கெடும்
என்பதை மறந்ததின் விளைவே இன்றைய அவலமான நிலைக்கு காரணம் அல்லவா ?
3 வயது குழந்தையை 9 வயது குழந்தையை பாலியல்
கொடுமை செய்வது மேலை நாடுகளில் கூட நடப்பதில்லை , ஆனால் இன்று நம்நாட்டில் தினசரி
நிகழ்வானதற்கு நாமே காரணம் என்பதையும் ,
நமது செயல்கள் கவனிக்கப் படுகின்றன ,
இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை இறைவனால் (இயற்கையால்) தண்டிக்கப்படுவோம் என்பதை நமது
பிள்ளைகளுக்கு நாம் உணர்த்தாததும் தான் காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா ?
பெற்ற தாயே மகனிடம் உறவு வைத்துக்
கொள்வதும் , தனது மகளிடம் தந்தையே தொடர்பு வைப்பதும் முதலில் மனிதன் தோன்றிய
காலத்தில் இருந்த காட்டுமிராண்டி கால பழக்கமல்லவா ? முன்தோன்றிய மூத்தகுடி எனப் பெருமையைப்
பேசும்,
மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளதாக பேசிக் கொண்டும் , 20 நூற்றாண்டில்
பயணிக்கிறோம் வானத்தை வளைப்போம் , மணலைத் திரிப்போம், நாங்கள் புதிய உலகம்
படைப்போம் என்றெல்லாம் பேசி இறுதியில் காமத்தில் சிக்கி கந்தலாகிப் போனதே இன்றைய
இளைஞிகள் , இளைஞர்களின் வாழ்வு.
ஒரு காலத்தில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு
அந்தக்கால “பெருசுகள்”
ஊருக்கு வெளியே
யாருக்கும் தெரியாமல் பார்த்த “ரெக்கார்ட் டான்ஸ்”
இன்று டி வி வழியாக நடு வீட்டில் அரங்கேறுகிறதே, மோசமான , அசிங்கமான, கண்ணை மூடச் செய்யும்
அங்க அசைவுகளை, மனைவியோடு, மகனோடு, மகளோடு, மருமகளோடு, மருமகனோடு, பேரன் , பேத்தியோடு
கொஞ்சமும் வெட்கமின்றி கூடிப் பார்க்கின்றோமே அதுதான் புதிய உலக நாகரீகமா ?
இதற்கெல்லாம் வயது தேவையில்லை, ஆனால்
கோவிலுக்கு போக மட்டும் வயது ஆகட்டும் இப்ப என்ன அதுக்கு ?
உடல்நிலை சரியில்லாத போதுதான் மருத்துவர்
தேவை .
இன்றைய சிறுவர்கள்தான் நாளைய இளைஞர்கள்
அவர்களை சரியான வழிநடத்துதல் நாளைய உலகின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை தேவை.
கெட்டழியும் போது நீதான் காரணம்,
இல்லையில்லை நீதான் காரணம் என்று ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திப் பயனில்லை .
நாமே காரணம் என்றெண்ணி இன்றே நமது பிள்ளைகளை இறைவழியில் , பக்தி மார்க்கத்தில் ,
இறையுணர்வில் ஒன்றிடச் செய்வோம்.
எந்த வயதில் கோவிலுக்கு போவது நல்லது என்று
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் சொல்வது கேளுங்கள்
:
"இளமையில் ஒரு இளைஞன் கோவிலுக்கு போகவில்லை என்றால் கண்டிக்க
வேண்டும். முதுமையில் ஒரு முதியவர் கோவிலுக்கு போனால் தண்டிக்க வேண்டும்".
சுவாமி விவேகாநந்தர்.
ஏன்
முதுமையில் முதியவர்கள் போகக்கூடாது என்றால் அவர்கள் இளமையில் சென்றிருந்தால்
இறைவனை உணர்ந்திருப்பார்கள் , இனி போயும் பலனில்லை , பயனற்ற வெற்றுக் கதைதான் அங்கு
போய் பேசுவார்கள்.
பக்திப் பெருக
கோவிலுக்கு செல்லுங்கள். ஞானம் பருக சத்சங்கம் செல்லுங்கள்.
வளமோடு
வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.
சிவனருள்.கருணாகரன்.
No comments:
Post a Comment