என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, March 13, 2014

எப்ப கோவிலுக்கு போவது ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பு உள்ளங்களே வணக்கம்.
பலரது மனதிலும் எழும் கேள்வி ஒன்று உண்டு

எப்ப கோவிலுக்கு போவது ?

எப்போது முதல் கோவிலுக்கு போகலாம் அதாவது எந்த வயது முதல் கோவிலுக்கு சென்று ஸ்வாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம் என்பதுதான் அந்த கேள்வி ?

எந்த வயதில் கோவிலுக்கு செல்லலாம் என தெரிந்தால் அப்போது முதல் போகலாம் ஏன் வீணாக முன்பாகவே போய் எதிர்பார்த்திருக்கவேண்டும் என்கின்ற எண்ணமே காரணம் .

மற்ற எந்த தேவைக்கும் , வேலைக்கும் ஒருநாளே முன்பாக போக நினைக்கும் மனிதர்கள் கோவிலுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் போனால் போதும் என எண்ணுகிறார்கள்.

சிறிய வயதில் சிகரெட், பான்பராக் , போதை , பெண் சகவாசம் என இருப்பவர்கள் , நமக்கென்ன வயது இந்த வயதில் இப்படி இருக்கின்றோமே என்று எண்ணுவதில்லை , அது எல்லா வயதுக்கும் ஏற்றதாகின்றது . 
ஆனால் கோவிலுக்கு போக மட்டும் மனிதர்களுக்கு வயதும் காலமும் தேவையாகின்றது.

அம்மா , நான் கோவிலுக்கு போய்வரேன்னு சொன்னவுடன் , நானும் வரேன் வெள்ளிகிழமை போகலாம் எனும் தாயின் குரல் கேட்கிறது.

ஏன் மற்ற நாட்களில் செல்லக்கூடாதா ? மற்ற நாளில் அங்கே கடவுள் இல்லையா ? அப்படி இல்லை நமக்கு வசதியாக இருக்கும் நாளில்தான் கோவிலுக்கு செல்வது எனும் மனப்பாங்கு வந்து விட்டது.

எப்போ பார்த்தாலும் கோவில்லையே இருக்கே சாமியாராயிட்டயா என்கிறார்கள் , கண்டிக்கின்றார்கள் , கோவில்ல இருந்தால் சாமியாரா , கோவிலுக்கு போவது நல்ல பழக்கம் இல்லையா ?

இளம் வயதில் கோவிலுக்கு போகும் பழக்கம் இருந்திருந்தால் இன்றைய இளைஞர்கள் இன்று செல்லும் தவறான பாதையும், கற்பழிப்புகளும் , போதையின் பாதையும் வந்தே இருக்காதே ! 

பெற்றோர்கள் ஏன் அதை மறந்தார்கள் ?

நல்லொழுக்கம்  இல்லாது போனால் நாமும் , நமது வீடும் , நாடும் கெடும் என்பதை மறந்ததின் விளைவே இன்றைய அவலமான நிலைக்கு காரணம் அல்லவா ?

3 வயது குழந்தையை 9 வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்வது மேலை நாடுகளில் கூட நடப்பதில்லை , ஆனால் இன்று நம்நாட்டில் தினசரி நிகழ்வானதற்கு நாமே காரணம் என்பதையும் ,

நமது செயல்கள் கவனிக்கப் படுகின்றன , இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை இறைவனால் (இயற்கையால்) தண்டிக்கப்படுவோம் என்பதை நமது பிள்ளைகளுக்கு நாம் உணர்த்தாததும் தான் காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா ?

பெற்ற தாயே மகனிடம் உறவு வைத்துக் கொள்வதும் , தனது மகளிடம் தந்தையே தொடர்பு வைப்பதும் முதலில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்த காட்டுமிராண்டி கால பழக்கமல்லவா ? முன்தோன்றிய மூத்தகுடி எனப் பெருமையைப் பேசும், 
மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளதாக பேசிக் கொண்டும் , 20 நூற்றாண்டில் பயணிக்கிறோம் வானத்தை வளைப்போம் , மணலைத் திரிப்போம், நாங்கள் புதிய உலகம் படைப்போம் என்றெல்லாம் பேசி இறுதியில் காமத்தில் சிக்கி கந்தலாகிப் போனதே இன்றைய இளைஞிகள் , இளைஞர்களின் வாழ்வு.

ஒரு காலத்தில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அந்தக்கால “பெருசுகள்”  ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்த “ரெக்கார்ட் டான்ஸ் இன்று டி வி வழியாக நடு வீட்டில் அரங்கேறுகிறதே, மோசமான , அசிங்கமான, கண்ணை மூடச் செய்யும் அங்க அசைவுகளை, மனைவியோடு, மகனோடு, மகளோடு, மருமகளோடு, மருமகனோடு, பேரன் , பேத்தியோடு கொஞ்சமும் வெட்கமின்றி கூடிப் பார்க்கின்றோமே அதுதான் புதிய உலக நாகரீகமா ?

இதற்கெல்லாம் வயது தேவையில்லை, ஆனால் கோவிலுக்கு போக மட்டும் வயது ஆகட்டும் இப்ப என்ன அதுக்கு ?

உடல்நிலை சரியில்லாத போதுதான் மருத்துவர் தேவை .

மனநிலை மாற்றம் காணும் வயதில்தான் கோவில் செல்வதும் , பக்தியில் ஆழ்வதும் வேண்டும் .

இன்றைய சிறுவர்கள்தான் நாளைய இளைஞர்கள் அவர்களை சரியான வழிநடத்துதல் நாளைய உலகின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை தேவை.

கெட்டழியும் போது நீதான் காரணம், இல்லையில்லை நீதான் காரணம் என்று ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திப் பயனில்லை . நாமே காரணம் என்றெண்ணி இன்றே நமது பிள்ளைகளை இறைவழியில் , பக்தி மார்க்கத்தில் , இறையுணர்வில் ஒன்றிடச் செய்வோம்.

எந்த வயதில் கோவிலுக்கு போவது நல்லது என்று
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் சொல்வது கேளுங்கள் :
"இளமையில் ஒரு இளைஞன் கோவிலுக்கு போகவில்லை என்றால் கண்டிக்க வேண்டும். முதுமையில் ஒரு முதியவர் கோவிலுக்கு போனால் தண்டிக்க வேண்டும்". சுவாமி விவேகாநந்தர்.

ஏன் முதுமையில் முதியவர்கள் போகக்கூடாது என்றால் அவர்கள் இளமையில் சென்றிருந்தால் இறைவனை உணர்ந்திருப்பார்கள் , இனி போயும் பலனில்லை , பயனற்ற வெற்றுக் கதைதான் அங்கு போய் பேசுவார்கள்.

பக்திப் பெருக கோவிலுக்கு செல்லுங்கள். ஞானம் பருக சத்சங்கம் செல்லுங்கள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.

சிவனருள்.கருணாகரன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...