என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, March 8, 2014

ஆதாயம் – சாதகமும் பாதகமும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆதாயம் – சாதகமும் பாதகமும்  


அன்பு சிவனருள் கருணாகரன் அய்யா அவர்களுக்கு வணக்கம்
என்மனதில் ஒரு ஆசை.

நீங்கள் கீழ்க்கண்ட குறிப்புகளின் அடிப்படையில் ஒரு நல்ல தலைப்பிட்டு ஒரு கட்டுரை தரவேண்டும்.

குறிப்புகள் :

ஆதாயம் பற்றி விசாரித்ததில், நண்பர்களின் பல கருத்துக்களை கேட்டறிந்தேன். ஆனால் அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஆதாயம் இரண்டு வகைப்படும்.

அவை
1. உபகாரத்தினால் கிடைக்கும் ஆதாயம்.
உதாரணமாக அன்னதானம் செய்து அதனால் வாழ்த்துக்களை ஆதாயமாகப் பெறுவது.

2. சுயநலத்தினால் கிடைக்கும் ஆதாயம்.
உதாரணம் நான் உனக்கு இன்ன காரியத்தை( சுபமோ! பாவமோ? ) செய்து தருகிறேன். நீ எனக்கு இன்ன ஆதாயத்தை தரவேண்டும்.

மேற்படி இரண்டு ஆதாயங்களையும் சற்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

மேற்கண்ட கேள்வியை அடியேனின் அன்பிற்குரிய நண்பர் “இடைசை ஆளவந்தான்” கேட்டுள்ளதற்கிணங்க அவருக்காகவும் , நமது முகநூல் நண்பர்களுக்காகவும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

ஆதாயமும் – ஆபத்தான ஆதாயமும் .

பொதுவாகவே எல்லாக்காலங்களிலும் மனித வாழ்வென்பது ஏதேனும் ஒன்று அல்லது பல ஆதாயங்களை நோக்கியே பயணிக்க முயல்கிறது.

ஆனால் மனிதர்கள் செய்யும் சில கார்யங்களால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதாயம் என்பது குறிப்பிட்ட மனிதர்களை அடைந்தே தீருகின்றது. மேலும் சில வேளைகளில் மனிதர்கள் ஆதாயத்தினை விரும்பிச் செய்தும் ஆதாயம் கிடைப்பதில்லை.
ஆதாயம் என்பதனை என்னவென்று ஆய்வு செய்தால் மனிதர்களின் நற் செய்கையினால் அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி என்று கூறலாம்.

வியாபார நோக்கில் செய்யப்படும் செய்கைகளின் விளைவாக மனிதர்களுக்கு கிடைப்பதை ஆதாயம் எனும் பட்டியலில் சேர்க்க இயலாது , காரணம் அது லாப நோக்கில் ஒருவித எதிர்பார்ப்புடன் செய்யப்படுகிறது.

பிரதிபலனின் எதிர்பார்ப்பின்றி தனது எண்ணப்படியோ , மனநிம்மதிக்காகவோ செய்யப்படும் எந்தக் கார்யமானாலும் நாம் வேண்டாம் என்று சொன்ன போதும் அந்த செய்கைக்கான ஆதாயம் குறிப்பிட்ட அந்த மனிதரை சேர்ந்து விடுகிறது.

அவர்கள் மனம் மட்டுமல்லாமல் , செயலும் இயல்பாகவே எல்லா உயிர்களுக்கும் பொதுவான நன்மையை தருவதாகவே அமைந்து விடுகிறது. அவர்கள் பெரும்பாலும் இறைவனை எல்லா உயிர்களுள்ளும் காணும் பக்குவம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.

மேலும் , ஆதாயம் என்பது எவ்வகையினாலும் கிடைத்தால் போதும், என்றெண்ணும் மனிதர்களின் செய்கையில் இயற்கை இணைவதில்லை. தான் (அதாவது இயற்கை) செய்ய வேண்டிய கார்யத்தினை , தனது பிரதிநிதியாக நின்று செய்யும் மனிதனை இயற்கை மிகவும் நேசிக்கின்றது.

அவர்களின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கின்றது , அவர்களின் சொல்லையும் , செயலையும் இயற்கையே முன்னின்று நிறைவேற்றி தருகிறது.

அவ்வாறு இயற்கையின் நேசிப்பினை பெற்றவர்களைத்தான் , நாம் தேவ மகரிஷிகள் , மகரிஷிகள், ஞானிகள் , முனிவர்கள் , சித்தர்கள் , உத்தம புருஷர்கள் என்றெல்லாம் வாயார, மனமார புகழ்ந்து, அண்ணாந்து பார்க்கின்றோம்.

காரணம், மனிதர்களிடமிருந்து எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல்தான் இயற்கை மனித இனத்தை பல ஆயிரம் கோடி வருடங்களாக காப்பாற்றி வருகின்றது .

அதைப்போலவே மனிதர்களும் , தனது சக மனிதஇனத்தையும், பிற உயிரினத்தையும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் , நற்செயகையினால் மகிழ்வுற செய்வார்களேயானால் இயற்கை அவர்களை தனது செல்லப்பிள்ளைகளாக பாவிக்கின்றது. (எல்லோரும் இயற்கையின் பிள்ளைகளாக இருந்தபோதும் )

நான் இதனை செய்கிறேன் அதற்காக நீ அதனை தரவேண்டும் (அது புண்ணியமோ , பாபமோ) எனும் பேரத்தோடு செய்யப்படும் செய்கையினால் கிடைக்கும் ஆதாயம் நிலைப்பதில்லை , காரணம் அது வியாபார நோக்கோடு செய்யப்படும் செய்கை.

இதற்கான ஆதாயத்தை அவர்களே பேசி முடிவெடுத்துவிட்டார்கள் , இங்கே புண்ணியமோ , பாபமோ அவர்களே தீர்மானித்துக் கொண்டதனால் இயற்கையின் பங்களிப்பு ஏதுமில்லாமல் போகின்றது.

இப்படியான செய்கைகள் இயற்கையின் நியதியை மாசுபடுத்துவதால் (உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்) இயற்கை அதிகமான பாதிப்புக்குள்ளாகி இவ்வாறான செய்கைகள் செய்பவரின் வாழ்வில் எல்லாவகையிலும் தீமைகளே சூழ்ந்திருக்கும் நிலைப்பாட்டினை அவர்கள் அடைந்துவிட காரணமாகின்றது.

இந்நிலையை அவர்கள் பின்னாளில் உணர்ந்து திருந்தினாலும் கூட அவர்களின் வாழ்க்கைப்பாதை கடுமையான மேடுபள்ளங்கள் நிறைந்ததாகவே இருப்பதையும் , அதனால் அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் மிக அதிக அவமானங்களை சந்தித்து, வாழ வேண்டுமே என்று சலிப்புடன் வாழ்வதையும் காண முடிகிறது.

ஆகவே ,

பிரதிபல நோக்கின்றி பிற உயிர்க்கு செய்யும் நற்செய்கைகள் இயற்கையின் உறுதுணையையும் , இக பர வாழ்வில் நன்மையைத்தான் தரும் என்றும்,
பிரதிபலன் எதிர்பார்த்து பிற உயிர்க்கு செய்யும் தீயசெய்கைகள் இயற்கையின் துணையற்ற நிலையை மட்டுமல்ல ,

லௌகீக வாழ்வில் தாங்கவொண்ணாத துன்பத்தைத்தான் தருகின்றது என்பதையும், ஆன்மீக வாழ்க்கையை நினைக்கக்கூட விடுவதில்லை என்பதனையும் நாம் காணும் மக்களின் இன்றைய வாழ்வின் நிலைமையில் நன்கு உணரலாம்.

ஆனால் பிரதிபலன் எதிர்பாராமல் தனது செய்கைகளை அமைப்பது , அமைத்துக் கொள்வது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை என்பதும் சத்யமான உண்மையாகும்.

அப்படியானால் நம்மால் ஒன்று நிச்சயமாக செய்யமுடியும்.
அதாவது , நாம் மற்றவர்களுக்கு தீய செய்கைகளை செய்யாமல் இருக்கலாமே , அதுவே நன்மைதானே .

ஆதாயத்திற்காகவோ, கோபத்திலோ அல்லது காழ்ப்புணர்விலோ நம்மால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யப்படவில்லை என்றாலே அது நமக்கு நற்செய்கையின் பலனை எந்த வடிவிலோ கொண்டு வந்து சேர்த்துவிடும். (நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும்).

நற்செய்கை செய்வோம் அல்லது தீய செய்கையை தவிர்ப்போம்.

வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம் .

சிவனருள் கருணாகரன் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...