என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, March 4, 2014

பிரம்மச்சரியம் என்றால் என்ன ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்புக்குரிய முகநூல் நண்பர் திரு. பாலச்சந்தர் அவர்களுக்காகவும் , மற்ற அனைத்து நண்பர்களுக்காகவும் இங்கே
பிரம்மச்சரியம் என்றால் என்ன ? எனும் ஆரோக்கியமான கேள்விக்கு பதில் தரப்படுகிறது.

முதலில்

பிரம்மம்

பிரம்மா

பிரம்மச்சாரி  

பிரம்மசர்யம் 
எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ப்ரம்மம் என்பது நமது கண்கள், புலன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.

பிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.

பிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமா கின்றது.

பெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .

பிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.

ஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும்.  

ப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. 
இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.

புற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.

வேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்யமான பங்காகும்.

நான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும்.
சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.

ப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .

சரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .

இவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.

ப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .
சரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.

பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.

இந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று . 
      
ப்ரம்மசர்ய மார்க்கம் சென்று ப்ரம்ம பதத்தை அடையுங்கள் , அந்நிலையை நீங்கள் அடைய வாழ்த்துகள்.

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் .

சிவனருள் கருணாகரன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...