என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Thursday, July 23, 2015

ஒரு முக ருத்ராட்சம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஒரு முக ருத்ராட்சம்
அடர்ந்த காடுகளில் கிடைக்கும் ஒரு வகை கடினமான மெழுகில் ஒரு முக ருத்ராட்சம் (கிராப்ட்) சிறிய கத்தி கொண்டு உருவாக்கம் செய்யப்படுகின்றது.
இதுபோல ஒரு ஒருமுக ருத்ராட்சம் கிராப்ட் செய்ய சுமார் 300/- வரை தருகின்றார்கள்.
மெழுகாக இருப்பதால் கனத்தின் காரணமாக நீரில் மூழ்கி விடும்.
நீங்கள் ஒரு முக ருத்ராட்சம் வாங்கினால் அதனை லேசாக விளக்கின் தீபத்தில் காண்பியுங்கள் , மெழுகாக இருந்தால் உருகி விடும்.
பச்சையான ருத்ராட்ச காய்களை வாங்கி வந்தும் இதுபோல வடிவங்கள் அமைத்து உருவாக்கம் செய்கின்றார்கள் .
ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

ஒரு முக ருத்ராட்சம் இறைவனுக்கு நிகரானதாக கருதப்படுகின்றது. 

ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;
ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.

பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.
பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.
நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.
ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும். 

இவ்வாறான மகா பெரிய சக்திவாய்ந்த , மகத்தான , இறைவனுக்கு நிகரான ஒரு முக ருத்ராட்சதை வைத்திருப்பவர்கள் , ஏழ்மையில் இருப்பார்களா ? 
அதனை விற்று பிழைக்கும் நிலை அதனை வைத்திருப்பவர்களுக்கு வருமா ? 
பல கோடி ருபாய் தந்தாலும் இறைவனை இழக்க யாராவது சம்மதிப்பார்களா ? 
அல்லது ஒரு நாள் தங்களது வீட்டில் வைத்து பூஜை செய்த ஸ்வாமியின் விக்ரஹத்தை மற்றவருக்கு விற்பார்களா ?

ஆகவே ஒரு முக ருத்ராட்சம் என்பது மனிதனின் ஆசையை பணமாக்கும் ஏமாற்று வேலை 


ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...