அன்பானவர்களே! உங்கள் அனைவருக்கும் அடியேனின் அன்பு வணக்கங்கள்.
நமது வாழ்வில் ஏன் துன்பம் தொடர்கதையானது ?
நமது எண்ணமே நமது வாழ்வை அமைக்கிறது.
அதிகமாக எண்ணும் எண்ணமானது, அவரவர் வாழ்வை தீர்மானிக்கிறது.
மனம் போல் வாழ்வு,
எண்ணம் போல் வாழ்வு,
மனம் போல் வாழ்வாய் மகளே என்பார்கள் பெரியோர்.
ஞானிகளும், மகரிஷிகளும், முனிவர்களும் ஒரு வார்த்தையை சொல்லி இதனை விடாமல் உச்சரித்து வந்தால் உனக்கு இந்த தெய்வம் பலன் தரும் என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா?
நாம் எதனை விடாமல் சொல்லி வருகிறோமோ அல்லது செய்து வருகிறோமோ அது நமக்கு கிடைக்கும் என்பதுதான் பொருள்.
உண்மையில் நடப்பது என்ன தெரியுமா?.
நாம் எல்லோரும் இறையருளுடன் கூடிய அமைதியான, சந்தோஷமான, யாரையும் தூஷிக்காத, நலமான, வளமான வாழ்வைத்தான் விரும்புகிறோம் .......
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது எண்ணமெல்லாம் துன்பத்தையும், வாழ்வின் இயலாமையையும், முடிந்துபோன தோல்வியையும், முறிந்துபோன உறவையும், பிரிந்துபோன சொந்தங்களையும் என்று நமது நொந்துபோன வாழ்நாளை இடைவிடாது நினைத்தே அல்லது விடாமல் சொல்லியே வாழ்கிறோம்.
அதனால்தான் அதுவே ஒரு மந்த்ரமாக உருமாறி பின் அதுவே நமக்கு ஒரு வரமாகி பலன்தர துவங்குகிறது.
இன்று பலரின் வாழ்வின் போராட்ட நிலைக்கு இதுவே காரணமாகிறது.
ஓயாத சோகமான நினைவலைகளில் இருந்து நம்மை நாம் மாற்றிக்கொண்டு (துன்பமிருந்தாலும்) ஆனந்தமான நினைவுகளில் ( நமது வாழ்வில் சில நேரம் கூடவா இன்பமில்லை ), இறைவனை நினைத்து இடைவிடாது சிந்தித்திருந்தால் நிச்சயம் ஒருநாள் மாற்றம் காணும்,
இது சத்தியம்.
அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.
2 comments:
நல்ல பதிவு
அன்பு வேலு.G அவர்களுக்கு,
வருக வணக்கம்.
தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
Post a Comment