என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Saturday, January 5, 2013

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அன்பானவர்களே, வணக்கம். 

எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ? - 2


முதலில் தீபம் ஏற்றும் விளக்கினை பார்ப்போம்.

இறைவனுக்கு எல்லாமே அவனால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் பொன்னும், மண்ணும் ஒன்றே !!!!

ஆகவே பொன்னால் செய்த விளக்கேற்றினால் எந்த வகையான பலன்கள் சொல்லப்படுகின்றதோ அவை அனைத்தும் மண்ணாலான அகல்விளக்கினை ஏற்றி வைத்து வழிபட்டாலும் கிடைக்கும், பித்தளை , வெண்கலம் போன்றவையும் அப்படித்தான் .

செல்வ வசதிமிகுந்தவர்கள் , கோவிலில் அல்லது வீட்டில் விலை உயர்ந்த விளக்குகளை ஏற்றி வழிபடும்போது , வசதியற்ற ஏழைமக்களின் உள்ளம் “இறைவா, எங்களுக்கு விலை உயர்ந்த விளக்குகளால் உனக்கு தீபம் ஏற்றி வழிபட முடியாததால்தான் எங்களுக்கு உனதருள் கிடைக்கவில்லையா ? என்றேங்கும் அல்லவா ? அதனால்தான் , எல்லா விளக்குகளையும் தனக்கான தீபவிளக்காக இறைவன் ஏற்று நமக்கு அருள்பாலித்தான் .    

ஆனால்,

இரும்பு எனும் உலோகத்தினால் தீபம் ஏற்றுவது மட்டும் சில காரணங்களினால் அனைத்து வீடுகளிலும் , ஒரு சில கோவில்களிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.  

ஏன் என்றால், இரும்பு ஸ்ரீ சனைச்வரரின் அம்சமாக திகழ்கின்றது. ஆகையால்,

தாந்த்ரீக வழிபாட்டிலும் , சில மாந்த்ரீக செயல்பாட்டின் போதும் இரும்பினால் ஆன விளக்கு பயன்படுத்தப்படுகின்றது. (சில காரணங்களுக்காக அந்த விபரம் தரப்படவில்லை).

சில்வர் எனும் உலோக விளக்கினைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை , ஆனால் காந்தம் அதனை ஈர்ப்பதால் அதனை இரும்பின் ஒரு கூறாகவே கருதுவதற்கு வாய்ப்புள்ளது , (வெண்ணிற இரும்பு?) மேலும் சில்வர் விளக்குகளை எந்த ஒரு காரியத்திலும் ஏற்றுவது உசிதமானதாக கருதுவதற்கு இல்லை , அது ஒரு அலங்கார பொருளாகவே கருதவேண்டும். (மேலும் சில்வரால் உருவாக்கப்பட்ட விளக்குகள் நீண்ட நேரம் எரியும் போது அவை அதிக சூடாகி (சூடு தாங்காமல்) வேறு சில தொல்லைகள் உருவாக வாய்ப்புள்ளது, ஜாக்கிரதை.).


ஆக, பொன் விளக்கு, பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு போன்றவைகள் தரும் அதே பலன்களை சற்றும் கூட்டாமல் , குறைக்காமல் மண்ணாலான விளக்கும் தரும்.

அனைத்து வீடுகளிலும் , ஒருசில கோவில்களிலும் இரும்பாலான விளக்குகளால் தீபம் ஏற்றுவது நல்லதல்ல . சில்வரால் ஆன விளக்குகள் அலங்கார பொருளே அன்றி தெய்வ வழிபாட்டிற்கு ஆகாது.

அடுத்தது தீப விளக்கின் முகங்கள் .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...