என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, January 15, 2013

மனமோடு ஒன்றி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்



அன்பானவர்களே, வணக்கம்.

மனமோடு ஒன்றி எனும் வார்த்தையை வார்த்தையாக பார்த்தால் வெறும் வார்த்தையே, ஆனால் அதனை உள்ளார்ந்து பார்த்தால்... வெவ்வேறு  அர்த்தங்கள் உள்ளது நமக்குப் புரியும்.

மனம் ஒன்றி என்பதுவும் மனமோடு ஒன்றி என்பதுவும் ஒன்றல்ல.

மனம் ஒன்றி என்பது நாம் ஒரு செயலையோ , ஒரு சொல்லையோ தனது மன ஈடுபாட்டுடன் செய்வது, அதில் லயித்து ஊன்றி செயல்படுவதாகும், அதாவது நாம் ஒன்றை நினைக்க மனம் ஒன்றை நினைக்கும் நிலையில் இருந்து மாறுபடுவது, ஒரு செயலை ஈடுபாட்டுடன் செய்வது.  

மனமோடு ஒன்றி என்பது நாம் நமது மனமோடு ஒன்றி 
(அதாவது அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள் இதனை செய்வதால் நமக்கும், நமது குலத்திற்கும் நலம் உண்டாகும் என்று மனம் சொல்வதை கேட்காமல் விட்டு விடாமல் )
பொதுவாகவே நமது மனம் நம்மை எதுவும் செய்யவிடாமல் அலைக்கழிக்கும், இந்நிலையில் மனமே நமக்கு ஒரு வழிகாட்டியாக செயல்பட இருந்தும் நாம் அதனுடன் ஒன்றாமல் நாம் தனித்து நிற்க பிரயத்தனப்படாமல் மனம் சொல்வதை கேட்டு அதனுடன் ஒன்றாக செயல்படுவது.

சரி இரண்டும் ஒன்றுதானே , எந்த செயலையும் மனமொன்றியோ, மனமோடு ஒன்றியோ செய்வதால் நல்லதுதானே ? என்கிறீர்களா?

சரிதான், அதுவும்  உண்மை போல தெரிந்தாலும், ஒன்று போலவே தோன்றினாலும் கொஞ்சம் மாற்றமுள்ளது.

நாம் நமது தொழில், பணி சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும், செயல்களையும், நிகழ்வுகளையும் மனம் ஒன்றி செய்யவேண்டும், அப்படி செய்யப்படும் காரியம், செயல், அதன் வெற்றி பலமடங்காகும், நமக்கு பலவிதமான நன்மையைத் தரும்.

நாம் நமது வாழ்வு, குடும்பம், குல மேன்மை, நமக்குப்பின் தொடரும் நமது வம்சத்தின் வளர்ச்சி, அந்த வளர்ச்சியின் மேன்மை, தாழ்விலாமல் நிலைத்த மேம்பாடு, வம்சம் பெருகித் தழைத்த பெருவாழ்வு, அதில் காணும் வெற்றி, புகழ் இவைகளை அடைய நாம் நமது மனமோடு ஒன்றி செயல்பட வேண்டும், அப்படி மனமோடு ஒன்றி செயல்படும் போது நமது செயலின் பலன் நமக்கு பின்னாலும் நமது குலம் காக்கும் அரணாக துணை நிற்கும்.

ஆக மனமொன்றி செய்யப்படும் செயலானது நமது இன்றைய வாழ்வில் வளம், நலம், சுகம், கொண்டாட்டம் காண்பதற்கு தேவையானதாகின்றது.

ஆனால், மனமோடு ஒன்றி செய்யப்படும் செயலானது இப்பிறப்பில் நமது வளம், செழிப்பு, எல்லோருக்கும் நல்லவர்களாக இருத்தல், வம்ச விருத்தி, வாழ்வாங்கு வாழ்நிலை மட்டுமின்றி, பிற்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கும், மேன்மைக்கும் இன்றியமையாத தாகின்றது.   





மனமோடு ஒன்றி செயல்படுவோம் 
சிந்தையாலும் செயலாலும் உயர்வோம் 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...