என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Friday, January 25, 2013

மனமா ? அறிவா ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

"Cheran" wrote:
இருவேறுபட்ட கருத்துகள் தோன்றுகின்றன.

இவற்றில்

எது மனதின் கருத்தாக இருக்க முடியும்? 

எது அறிவின் கருத்தாக இருக்க முடியும்?
இக் கேள்வியின் முழு வடிவம் காண

அன்பு தம்பி திரு.சேரன் அவர்களுக்கு , வணக்கம்.

இந்த கேள்வியில் மனமும் , அறிவும் கேள்விக்குரிய காரணிகளாக அமைந்துள்ளது.


மனமாக இருந்தாலும் , அறிவாக இருந்தாலும் அவையாக செயல்பட முடியாது .

மனம் தன்னிசையாகவோ , அறிவு தன்னிசையாகவோ ஒரு செயலை செய்வது முடியாது.

இந்த இரண்டு சொல்வதையும் தன்னுள் கொண்டுவந்து அதனை முன் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு மனமும் , மூளையும் ஆய்ந்து பின்னர் மூளை முடிவெடுக்கும் . 

ஆனால் இவையெல்லாம் சில நொடிகளில் தீர்மானிக்கப்படுவதால் நாம் அறிய முடிவதில்லை. 
மனம் முடிவெடுப்பதாகவோ , அறிவு முடிவெடுப்பதாகவோ நாம் எண்ணிக் கொள்கிறோம்.

நமது உடலின் அனைத்து இயக்கத்தையும் மூளையே தன் வசம் வைத்துள்ளது . திடீரென வரும் சிறு அசைவினை கூட மூளை,

தான் கவனிக்க முடியாதபோது செயல்படும் விதத்தில் சில அனிச்சை செயலிகளை தன்னுள்ளே கொண்டுள்ளது .

மேலும்,

அதனால்தான் மூளைச்சாவு நேர்ந்தால் அவர்களை எந்த சிகிச்சைக்கும் உட்படுத்துவது இல்லை.

உடலின் மற்ற அவயங்கள் பழுதானாலும் அவர்களை படுக்கையில் வைத்தாவது பார்த்துக்கொள்ளலாம், மூளைச்சாவு நேர்ந்தால்........


அனைத்திற்கும் மூளையே மூல காரணி .

மனம் , அறிவு, சிந்தனை எல்லாம் மூளைக்கு கட்டுப்பட்ட பணியாட்கள் போலத்தான் .


அன்புடன் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...