எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா தொடர்ச்சி ..3
அடுத்து தீப
விளக்கின் திரி..
தற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு
திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என
பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி
பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம்
ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.
விளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக
இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும்
அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய
மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .
சிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான
திரிககளில் தீபம் ஏற்றுவர்.
அனைத்து இல்லங்கள், கோவில்களில்
ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.
ஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு
திரியாக இருத்தல்வேண்டும் .
No comments:
Post a Comment