என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Wednesday, January 23, 2013

மனம் என்பது என்ன? அறிவு என்பது என்ன?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





"Cheran" wrote:
மனம் என்பது என்ன?

மூளை என்பது என்ன?

சிந்தனை என்பது என்ன?

அறிவு என்பது என்ன? இந்த ஐயப்பாட்டிற்கான காரணம்....

நாம் எந்த வேலை செய்தாலும் நம்மிடம் இருவர் வந்து ஆலோசனை சொல்வார்கள்.

ஒருவர் மனம்!

இன்னொருவர் அறிவு!

பலநேரம் மனம் சொல்வதையும்
சிலநேரம் அறிவு சொல்வதையுமே சராசரி மனிதர்கள் கேட்கிறார்கள்.

இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு எது சரியானதோ அதைச்செய்பவர்களை இவ்வுலகம் புத்திசாலிகள் என்றழைக்கிறது.


என் ஐயம் :
மனம் சொல்வது சரி.. அல்லது அறிவு சொல்வது சரி... என்று நிர்ணயம் செய்வது...
மனமா? அறிவா??

அன்புள்ள தம்பி சேரன் அவர்களுக்கு, வணக்கம்.

தங்களின் கேள்வி முதலில் சாதாரணமாகவே எனக்கு புலப்பட்டது , மிக சாதாரணமான கேள்வியையா சேரன் கேட்டார் என எண்ணினேன் .
ஆனால் அதன் ஆழம் மிகவும் அதிகம் என்பதை பதிலளிக்கும் போதுதான் புரிந்தேன் ,

சேரன் சாதாரணமான கேள்வியை கேட்கவில்லை , பலரும் மனதில் போட்டு தவிக்கும் அற்புதமான பலம் பொருந்திய கேள்வியைத்தான் கேட்டிருகின்றார் என உணர்ந்தேன் .

இத்தகைய கேள்வியை உங்களால்தான் கேட்கமுடியும் , இந்த கேள்விக்கு முதலில் நன்றி.


இதோ அதற்கான எனது பதில் :

1.மனம் என்பது என்ன? , மனம் 
2.மூளை என்பது என்ன?, மூளை 
3.சிந்தனை என்பது என்ன?, சிந்தனை 
4.அறிவு என்பது என்ன? அறிவு 

இந்த வரிசையை மாற்றி அமைத்துப் பார்க்கலாம்.
1.மூளை , 2.அறிவு , 3.சிந்தனை , 4.மனம்.

முதலில் உள்ள மூளையும் , இறுதியாக உள்ள மனமும் இடைவெளி கண்டிருந்த போதும் ஒன்றாக இருப்பதாக காண்கிறோம்.

எப்படியெனில் ,
முதலில் உள்ள மூளை, தான் அறிந்ததை (அறிவு) , சிந்தித்து (சிந்தனை) முடிவெடுக்கும். 
அறிந்ததை சிந்திக்கும் ஆற்றலை மனம்தான் பெற்றுள்ளது.


மனம் எனும் ஒரு உரு, மனித, மிருக உடம்புகளில் காணப்படாததாகும் , அது தகவல்களின் தொகுப்பாக இருக்கின்றது.

மூளையில் மிகச்சரியாக பதிவான தகவல்களே, மீண்டும் நமக்கு தேவையான போது கிடைக்கும். 

ஒருவரின் படிப்பு , குடும்ப சூழல் , அமைவிடம் பொறுத்தே அவரது மூளை பதிவுகளை ஏற்கும்.


உதாரணமாக ப்ளஸ்டூ மாணவனிடம் – ஒரு அட்வகேட் சம்பந்தமான தகவல்கள் பதிவு செய்தால் அவன் மூளை அதனை ஊன்றி கேட்பதில்லை , கேட்டாலும் அதனை பதிவு செய்வதில்லை,

உதாரணமாக் அன்றாடம் உணவுக்கே முடியாமல் ஏழ்மையில் உள்ள குடும்பத்தாரிடம் உயர்ந்த நிலையைப் பற்றிய பேச்சுகள் பதிவாவதில்லை.
உதாரணமாக சுற்றிலும் இரைச்சலும் , துர்நாற்றமும் சூழ்ந்த இடத்தில் உள்ளோரிடம் , சாந்தம் , சமாதானம் , அமைதி போன்ற பதிவுகள் இருப்பதில்லை.

மேலும், 

நமது அறிவின் அறியும் தன்மைக்கேற்ப உள்ள தகவல்களை மட்டுமே ஒவ்வொரு மனிதனோ, மிருகமோ தனக்குள் பதிவிட முடியும். 

மூளை சிந்திப்பதில்லை அந்த பணியை அது மனதினிடம் தந்து விடுகிறது. 

மனம் , அறிந்ததை சிந்தித்து அதன் விடைகளை மூளைக்கு தெரிவிக்கும், அதன்பின் மூளை அதனை மீண்டும் மனதின் துணையோடு ஆராய்ந்து செய்யலாமா வேண்டாமா என தீர்மானிக்கும்.

ஒருதகவல் , ஒரு நிகழ்வு அல்லது ஒரு பிரச்சினை என வரும்போது , அதே போன்று முன்னாளில் நடைபெற்ற ஒரு நிகழ்வு , ஒரு தகவல் அல்லது ஒரு பிரச்சினையில் எவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்பதை மூளை,

தான் சேமித்து வைத்துள்ள முடிவுப் பெட்டகத்திலிருந்து எடுத்து மனதிற்கு தந்து – தற்போதைய நிகழ்வில், தகவலில் , பிரச்சினையில் எவ்விதமான முடிவெடுக்கலாம் – என தீர்மானிக்கின்றது.

மனம் இவ்வகை காலங்களில் தனக்கு சாதகமான முடிவுகள் எடுப்பதுவும் நேர்வதுண்டு.(சுயநலமாக)
(இன்றும் கூட நமது நாட்டில் நீதிமன்றம் ஒரு வழக்கில், வேறொரு நீதிமன்றம் இதே போன்ற வழக்கில் எவ்வாறு தீர்ப்பு தந்தது என குறிப்பிடுவதை காண முடிகிறது.) 


இத்தகைய தீர்மானங்கள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். மூளைதான் தீர்மானிக்கின்றது எனும் போது இந்த மாற்றம் ஏன் ?

ஏன் என்றால் , 

மூளைக்குள் பதிவு செய்யப்படும் தகவல்கள் எல்லாம் அந்த அந்த மனிதர்களின் அறியும் , அறிந்த , அறிவுத் திறனை பொறுத்தே அவர்களின் சிந்திக்கும் திறன் அமைவதால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பதிவுகள் மூளைக்குள் பதிவாகி இருக்கும்.

அதன்பொருட்டே அவர்களின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் , பேச்சுகள் , செயல்கள் , வாழ்வியல் அனைத்தும் அமைகின்றன.

ஒருவர் ஒன்றை உண்டென்பார் அது அவர் அறிந்து கொண்டதை அவர் புரிந்து கொண்ட விதம் . 

வேறு ஒருவர் அதையே இல்லையென்பார் அது அவர் அறிந்து கொண்டதை புரிந்து கொண்ட விதம். 

இருவரும் தவறாக பேசவில்லை அவர்கள் அறிந்து கொண்டதை மிகவும் நம்புவதால், அந்த தனது நம்பிக்கையின் மீதுள்ள உறுதியினால் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். 


இது போன்ற நேர்மறையான , எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவதில்லை , அப்படி நண்பர்களாக இருந்தால் இவர்களுக்கு ஒவ்வாத பிரச்சினைகளை பேசாமல் வேறு விஷயங்களை பேசுவார்கள்.

நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர் களோடும் , எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் தங்களைப் போன்றே எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களோடு நட்பாகும் போது தங்கள் தங்கள் கருத்துகளுக்கு ஆதரவு பெருகுவதால் அங்கே தீவிரவாதம் உண்டாகின்றது.

அப்படியென்றால், 


மூளை, அறிவின் மூலம் தான் அறிந்ததை மனம் மூலமாக சிந்தித்து தனக்கோ, பிறருக்கோ , சாதகமோ , பாதகமோ , நல்லதோ , கேட்டதோ முடிவெடுக்கும்.

காரணம் ஞானியின் மூளையும் , கசாப்புக்கடைகாரரின் மூளையும் ஒரே சிந்தனையில் இருக்கமுடியாதல்லவா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...