என்னை தொடர்ந்து

வாருங்கள், நண்பரே வணக்கம். தங்கள் வருகையை பதிவு செய்யுங்களேன் !அன்புடன் கருணாகரன்6,இடைப்பாடி. அன்பர்களே ! முழுக்க முழுக்க தமிழில் திருக்கணித முறையில் ஜாதகம் கணிக்க வேண்டுமா? உங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பிறந்த இடம் போன்ற விபரங்களை தாருங்கள், உங்கள் ஜாதகம் கூரியர் மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.( நள்ளிரவில் இரவு 12.00 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் பிறந்திருந்தால் விடிந்தால் என்ன கிழமை என குறிப்பிடவும்.K.செந்தில்குமார்,கணேஷ் கம்ப்யூட்டர்ஸ்,34,கடைவீதி, இடைப்பாடி,சேலம் மாவட்டம்-637101.

Tuesday, August 25, 2015

மாந்தியை கணிக்கும் அட்டவணை

அன்பிற்குரியவர்களே, வணக்கம்.
மாந்தியை கணிக்கும் அட்டவணை 


மாந்தியை ஜாதகத்தில் அமைப்பது எப்படி ?

சூரிய உதயத்திற்குப்பின் பிறந்தவர்களுக்கு என்றும் –
சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு என்றும் 

இரண்டு வகையாக பிரித்து மாந்தியை கட்டத்தில் அமைக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :
ஞாயிறு : 26 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 22 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 18 நாழிகைப் பின் உதயம்
புதன் : 14 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 10 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 6 நாழிகைப் பின் உதயம்
சனி : 2 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறந்தவர்களுக்கு :

ஞாயிறு : 10 நாழிகைப் பின் உதயம்
திங்கள் : 6 நாழிகைப் பின் உதயம்
செவ்வாய் : 2 நாழிகைப் பின் உதயம்
புதன் : 26 நாழிகைப் பின் உதயம்
வியாழன் : 22 நாழிகைப் பின் உதயம்
வெள்ளி : 18 நாழிகைப் பின் உதயம்
சனி : 14 நாழிகைப் பின் உதயம்.

அதாவது ஜாதகத்தில் சூரியனிருக்கும் இடத்திலிருந்து ஏழு வீடுகள் தள்ளி மேலே சொல்லப்பட்ட நாழிகையை கூட்டி வரும் கட்டத்தில் மாந்தியை சேர்க்க வேண்டும்.
அல்லது பகல் நேர 30 நாழிகைகளை இதனுடன் கூட்டிக் கொள்ளலாம்.

இனி நீங்களே உங்கள் ஜாதகத்தில் மாந்தியை அமைத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன் .

ஓம் நமசிவய.

Monday, August 24, 2015

மாந்தி பன்னிரு பாவங்களில் நின்ற பலன்

அன்பிற்குரியவர்களே, வணக்கம்.

ஜாதகத்தில் " மா " அல்லது "குளி" என குறிப்பிடப்படும் மாந்தி எனும் காரகம் (கிரகம் அல்ல ) எம் மாதிரியான பலன்களை அந்த ஜாதகருக்கு தர வல்லது என்று பார்ப்போம்.
மாந்தி என்பதுதான் சரியான பதமாகும்.

குளிகன் அல்லது குளிகை என்பது வேறு , மாந்தி என்பது வேறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம் தான் இருக்குமிடத்திற்கு முன்னே உள்ள இடத்தையும் (2ம வீடு ) தான் இருக்குமிடத்திற்கு பின்னே உள்ள இடத்தையும் (12ம் வீடு) பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.

தான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப் பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம் படைத்தவர் .

உதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து இவர் முழு பலத்துடன் இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.

பன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத் தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது

இது பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல.
காரணம் ஜாதகத்தில் உள்ளபலம்பொருந்திய சுபக் கிரஹ பார்வை , மாந்தியின் தாக்கத்தினை குறைக்கலாம் .

இப்போது பன்னிரண்டு பாவங்களிலும் மாந்தி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

1ம் இடத்தில( லக்கினத்தில்) மாந்தி இருந்தால் குண்டான உடல‌மைப்பு, உடல் உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம் இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம் கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

2 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில் தடுமாற்றமும், கீழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வீண் பொருள் விரயம் செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

3ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நல்ல உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை உண்டாகும்.

4ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நிம்மதியற்ற நிலை, உடல் நிலை பாதிப்பு, வீட்டு மனை சேர்க்கை உண்டாகத் தடை, தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்ப்படும்.

5ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம் பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை, கடவுள் நம்பிக்கை இல்லாத்வராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.

6ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், பிற‌ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள் இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில் படிப்படியான உயர்வு பெறுவார்கள்.

7 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடல், இல்லற வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.

8 ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் அதிக பசி கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வீண் விரயம் செய்பவராகவும் இருப்பர்.

9ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் மெலிந்த உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும், தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும் சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.

10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் சுயநலம் மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்ப்படும்.

11ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் செல்வம், செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை கொண்டவராகவும் இருப்பர்.

12ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் விரயம் செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில் குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில் சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.

மற்றபடி மற்ற கிரகங்களின் பார்வை சேர்க்கை பொறுத்து பலன்கள் வேறுபடலாம் 
பெரும்பாலானோருக்கு பொருந்தும்.

மீண்டும் நினைவில் கொள்ளுங்கள் இது பொதுவான பலனே.

ஓம் நமசிவய

மாந்தி என்ன செய்யும் ?

அன்பிற்குரியவர்களே , வணக்கம் 

மாந்தியும் ஜாதகமும்.

ஜாதகத்தில் மாந்தி எனும் காரகம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்தை நாம் அறிய முடியும் .

அதாவது

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 1 4 7 10 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இந்த பிறவியில் பல தவறுகளை தெரிந்தே செய்வார் . அதற்குரிய தண்டனையையும் உடனுக்குடனோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள மறைவு கிரஹ திசையிலோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள அஸ்தங்க கிரஹ திசையிலோ பெறுவார். அதனை இந்த பிறவியிலேயே பெறுவார்.

இந்த ஜாதகருக்கு மறுபிறப்பற்ற நிலை என கொள்ளலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 2 5 8 11 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இப்பிறப்பில் நிறைய தவறுகளை செய்வார் ஆனால் அதற்குரிய தண்டனையை அடுத்த பிறப்பில் அனுபவிப்பார் . ஆனால் அவர் மறுபிறப்பில் நல்லவராக இருப்பார்.

இந்த ஜாதகருக்கு மறுபிறப்பு உண்டு என கொள்ளவேண்டும் .

ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 3 6 9 12 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் சென்ற பிறப்பில் செய்த தவறுகளுக்கான தண்டனையை இந்த பிறப்பில் அனுபவித்துக்கொண்டிருப்பார். அவர் இந்த பிறப்பில் நல்லவராகவும் வசதியோடும் இருப்பார்.

ஜாதகரை மறுபிறப்பற்ற நிலைக்கு கொண்டு செல்லும் , கர்மாவை தீர்த்துக் கொள்ளும் பிறப்பு என கொள்ளவேண்டும் .

மாந்தியை கணிக்காமல் ஒரு ஜாதகத்தை பார்த்து கேரளத்தில் பலன் சொல்வதில்லை .
பொதுவாக மாந்தியை தீய காரகமாகவே பார்க்க முடிகின்றது .

ஆனால் அந்த மாந்தியைக் கொண்டுதான் பிறப்பின் ரகசியத்தினை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு பரிகாரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை ,
என்றாலும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி வர சுபம் வரும் எனும் கருத்துண்டு 

நாம் எப்படி என்பதை தெரிந்து கொண்டு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக முதல் வீடு ,நான்காம் வீடு ,ஏழாம் வீடு மற்றும் பத்தாம் வீட்டில் மாந்தி அமரப் பெற்றவர்கள் மீண்டும் பிறப்பற்றவர்கள் என தெரிகிறது .
ஆகவே அவர்கள் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயலவேண்டும்.
மேலும் தவறுகளை செய்யாமல் இருக்கப் பழக வேண்டும். 

இதுவே சிறந்த பரிகாரம்.

ஆனால் நமக்குதான் பிறப்பில்லையே என தன்னை தவறுகளின் கூடாரமாக்கிக் கொள்ள கூடாது.

காரணம் அதுவே பிறப்பற்று பேயுறு கொண்டு அலையும் நிலையை தந்து விடலாம்.
மாந்தியை பற்றி விரிவாக மற்றொரு பதிவில் தருகின்றேன்.

ஓம் நமசிவய.

Friday, August 14, 2015

பித்ரு தோஷ நிவர்த்தி -1

பிதுர் கடன் ஸ்லோகம்     (ஆவிகள் உலகம் 2002 இல் பிரசுரமானது )
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
எங்கள்  குல தெய்வம் முதலான *
*தாய் , *தந்தை ,* மனைவி ஈறாக ( * எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொன்னால் போதும் )
உள்ள பிதுர்க்கள் மூதாதையர்கள் அனைவரும்
உயர்நிலையடைய ஏக பிரம்மமே
திருவருள் புரிவாயாக !!!!!
நமசிவய சிவாய நம ஓம்
சரவணபவ ஓம்  சக்தி ஓம்
( அமாவாசை தினங்களில் சொல்லி வந்தால் முன்னோர்களின் நல்ஆசிர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள் )

பித்ரு தோஷ நிவர்த்தி -2

ஏஷாம் ந    பிதா  ந ப்ராத ந பந்து ஹ ;
நான்ய  கோத்ரேணஹ  தேஷாவே  
த்ருப்த் மகிலாயாம்து மயாத் பத்தை ஹ குசைஸ்திலை"  


என் தந்தை , என் சகோதரர்,என் உறவினர் என்ற எந்த வகை  பந்தத்துக்கும்  உள்ளாகாத என் கோத்திர பிரிவுக்குள்ளும்  உள் வராத 
எனக்கு முகம் தெரியாத என்னையும்
எனக்கு தெரியாத  எத்தனையோ புண்ணிய ஆத்மாக்கள் 
இந்த பூவுலகை விட்டு போயிருக்கின்றனர் .
அந்த ஆத்மாக்கள்  எல்லாம் மேல்உலகத்தில் எந்த துன்பமும் அனுபவிக்காமல் இருக்கவும்  புதிதாக பிறப்பெடுக்கும் போது அந்த வாழ்க்கையிலும் எல்லா நன்மைகளையும்பெற நான் ப்பிரார்த்தித்து கொள்கிறேன் .

அந்த ஆத்மாக்களுக்கு எள்ளும்  தண்ணீரும் கொண்டு  நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் திருப்தி அடையட்டும்.

இந்த ஸ்லோகத்தை அமாவாசையன்று சொல்லி வந்தால் 
நமக்கு எந்த வகையிலுவகையிலும் சம்மந்தமே இல்லாத 
புண்ணிய ஆத்மாக்கள் சாந்தியடைந்து 

நம் முன்னேற்றத்துக்கான ஆசிகள் கிடைக்க பெறுவர் .

Friday, July 31, 2015

சொல்லும் மந்த்ரம் ஜெயம் பெற

ஓம் நமசிவய. 


அன்பிற்குரியவர்களே,

மந்த்ரங்களை உச்சரிக்கும் போது இந்த மந்த்ரம் இத்தனை முறைகள் சொல்லவேண்டும் என்று கணக்கிடாதீர்கள் ,
மேலும்,

ஒருமணி நேரத்தில் இந்த மந்த்ரம் முடிக்கவேண்டும் முடித்தபின் அந்த மந்தரம் சொல்லவேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

மந்திர உச்சாடனத்தை (பயிற்சியை) குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிக்கவேண்டுமே என அவசரப்படாதீர்கள் .

மஹா காயத்ரியின் எண்ணிக்கை 24 ஆகும்.

நீங்கள் சொல்வது (காயத்ரி, மூலமந்திரம், மாலா மந்த்ரம் , த்ரிசதி என ) எந்த மந்திரமாக இருந்தாலும் அதனை ஸ்ருதி சுத்தமாக, நிதானமாக , நிறுத்தி , பொறுமையுடன், மந்த்ரத்தினுள் ஆழ்ந்து , மந்த்ரத்தை அனுபவித்து , பொருள் உணர்ந்து , புல்லரிப்புடன் அதன் தன்மை மாறாமல் 24 முறைகள் உச்சரித்தால் போதும்.

பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள மந்த்ரங்கள் உங்களுள் பிரவாகமாக பாய்ந்து அருள்நிலையைத் தந்து நீங்கள் சொல்லும் மந்த்ரத்திற்கு பூரண பலன்களைத் தரும்.

ஆனால்,

அவசர கதியில் வேகமான நடையில் மந்த்ரதினை மனப்பாடம் போல ஒப்பிப்பதால் எத்தனை இலட்சம் சொன்னாலும் எந்த பலனும் ஏற்படாது.

உங்கள் நன்மைக்காக நீங்கள் சொல்லுகின்ற மந்த்ரத்தில் ஏன் பதட்டம், அவசரம்.

பொறுமையாக நிறுத்தி ஆற அமர மந்தரங்களை சொல்லி ஜெயம் பெற வாழ்த்துக்கள்.

ஓம் நமசிவய.


Wednesday, July 29, 2015

கல்ப காலம் என்றால் என்ன ?

அடியேனின் அன்பிற்குரியவர்களே,

அருள்நிறை Kandasamy Siddhappa Chetty :அவர்களின் கேள்வி :

Pranam Guru Ji .
what is called Kalpa kalam or Kalpantha kalam ?

அதற்குரிய பதில் :

ஓம் நமசிவய.

நமது கண்களின் பார்வைக்கு எட்டாத தூரத்தினை நாம் நீலவண்ணமாக உணர்வதுபோல . . . (உதாரணமாக : வானம் )

எண்ணிக்கையில் அடங்காத வருடங்களை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்தகாலம் என்று சொல்கின்றோம்.

உதாரணமாக நாம் அறிந்துள்ள விஷயத்தில் இருந்து பார்ப்போம் :

1. யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்.

2. கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவைப் போல் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000).

3. நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு சதுர்யுகம். இதன் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
ஒரு சதுர்யுகம் என்பது ஒரு மஹா யுகமாகின்றது.

4. 71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். மன்வந்திரத்தின் அதிகாரியை 'மனு' என்று புராணங்கள் குறிக்கிறது.

14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும்.
ஆக,
பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.

14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.

ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.

ஒரு மகாயுகம் 43,20,000.என்றால் ஆயிரம் மகாயுகங்கள் ................

ஆகவே அதனை நாம் கல்பகாலம் அல்லது கல்பாந்த காலம் என்று ஒரே சொல்லில் சொல்லி விடுகின்றோம்.

5. 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்' . இது 1000 சதுர்யுகங்களைக் கொண்டது. இதுவே பிரம்மாவின் ஒரு பகல் பொழுது.

6. பிரம்மாவின் ஒரு நாள் இரு கல்ப காலம்.( 864 கோடி ஆண்டுகள் ).

முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் பிரளயம் வரும்.

பிரயளத்தில் 14 உலகங்களில் மூன்று (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

7. இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்கு படைப்பு இல்லை.

அச்சமயத்தில் ஆன்மாக்கள் உருவமற்று, செயலற்று மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும்.

8. பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கும்.

இக்கால அளவின் படி, பிரமனின் ஒரு நாள்,வாரமாகி, வாரம் மாதமாகி, மாதம் வருடமாகி, அவ்வருடங்கள் நூறு கடந்தால் பிரமனின் ஆயுள் முடிவுறும்.

தற்பொழுது இருக்கும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்து விட்டது.

9. தற்பொழுது நடப்பது 'சுவேத வராக கல்பம்'.

இதன் 14 மன்வந்திரங்களில் இப்பொழுது நடைபெறுவது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரம். 

இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில்
நாம் இருப்பது 28 ஆம் சதுர்யுகத்தில்.

10. தற்பொழுது நடைபெறும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது.

இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது.

ஆக கல்பம்காலம் அல்லது கல்பாந்த காலம் என்பது கணக்கிலடங்காதது எனப் பொருள்.

ஓம் நமசிவய.

Thursday, July 23, 2015

ஒரு முக ருத்ராட்சம்



ஒரு முக ருத்ராட்சம்
அடர்ந்த காடுகளில் கிடைக்கும் ஒரு வகை கடினமான மெழுகில் ஒரு முக ருத்ராட்சம் (கிராப்ட்) சிறிய கத்தி கொண்டு உருவாக்கம் செய்யப்படுகின்றது.
இதுபோல ஒரு ஒருமுக ருத்ராட்சம் கிராப்ட் செய்ய சுமார் 300/- வரை தருகின்றார்கள்.
மெழுகாக இருப்பதால் கனத்தின் காரணமாக நீரில் மூழ்கி விடும்.
நீங்கள் ஒரு முக ருத்ராட்சம் வாங்கினால் அதனை லேசாக விளக்கின் தீபத்தில் காண்பியுங்கள் , மெழுகாக இருந்தால் உருகி விடும்.
பச்சையான ருத்ராட்ச காய்களை வாங்கி வந்தும் இதுபோல வடிவங்கள் அமைத்து உருவாக்கம் செய்கின்றார்கள் .
ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

ஒரு முக ருத்ராட்சம் இறைவனுக்கு நிகரானதாக கருதப்படுகின்றது. 

ஒரு முக ருத்ராட்சத்துக்கு ஜின் போன்ற பூத கணங்களை விரட்டும் சக்தி அபரிதமாக இருக்கிறது.

ஒரு முக ருத்ராட்சத்தை ஓடும் நீரில் போட்டால் நீரை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் என்பது ஒரு பரிசோதனை;
ஒரு முக ருத்ராட்சத்தை பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைத்தாலும் அது மேலே வந்துவிடும்.

பெரிய பால் பீப்பாயில் அதைப்போட்டு பஞ்சாட்சர மந்திரம் சொன்னால் பால் பூராவும் உறிஞ்சப்பட்டுவிடும்.
பஞ்சபூதங்களை வெல்லும் சக்தி ஒரு முக ருத்ராட்சத்துக்கு உண்டு.
நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு.
ஒரு செம்பு தாம்பாளத்தில் ஒரு முக ருத்ராட்சம் வைத்து அதன்மேல் சாதாரண ருத்ராட்சங்களை போட்டால் பதினைந்து நிமிடத்தில் ஒரு முக ருத்ராட்சம் சாதாரண ருத்ராட்சங்களை விலக்கிக்கொண்டு மேலே வந்துவிடும். 

இவ்வாறான மகா பெரிய சக்திவாய்ந்த , மகத்தான , இறைவனுக்கு நிகரான ஒரு முக ருத்ராட்சதை வைத்திருப்பவர்கள் , ஏழ்மையில் இருப்பார்களா ? 
அதனை விற்று பிழைக்கும் நிலை அதனை வைத்திருப்பவர்களுக்கு வருமா ? 
பல கோடி ருபாய் தந்தாலும் இறைவனை இழக்க யாராவது சம்மதிப்பார்களா ? 
அல்லது ஒரு நாள் தங்களது வீட்டில் வைத்து பூஜை செய்த ஸ்வாமியின் விக்ரஹத்தை மற்றவருக்கு விற்பார்களா ?

ஆகவே ஒரு முக ருத்ராட்சம் என்பது மனிதனின் ஆசையை பணமாக்கும் ஏமாற்று வேலை 


ஏமாற வேண்டாம் , உஷார்.
ஓம் நமசிவய.

Saturday, July 18, 2015

தலை சுற்றல் மறைய



மிகவும் சோர்வாகவும் , தலை சுற்றலாகவும் இருந்தால் ,


ஒரு பதினைந்து கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து , அதனுடன் கொஞ்சம் சோம்பும் , சீரகமும் , தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அந்த நீரை வடிகட்டி ஒரு தம்ளர் குடியுங்கள் .

பத்து , பதினைந்து நொடியில் உடல் சோர்வு நீங்கி தலை சுற்றல் நின்று புத்துணர்ச்சி தோன்றுவதை உணர்வீர்கள்.

ஓம் நமசிவய.

Tuesday, July 14, 2015

கடன் தீர ஒரு யோசனை





இந்த ஆண்டின் மைத்ரேய முகூர்த்தம் 

Face Book




    https://www.facebook.com/karunakaran.rathinasamy


மோகினி சேட்டை

சிலர் இரவில் உறக்கத்தில் பேசுவார்கள், சப்தமிடுவார்கள், உரக்க கத்தியபடி எழுந்து கொள்வார்கள், பெண்ணோடு உறவு கொண்டது போல் கனவும் , உடல் சோர்வும் , சக்தி வேளியேறுதலும் உண்டாகும்.

இதனை மோகினி பிடித்திருக்கின்றது என்பார்கள் .

இவர்களை இதிலிருந்து காக்கும் வழி .
நல்லெண்ணையை - நல்லெண்ணெய் என்று கேட்காமல் வேறு பெயர் சொல்லி வாங்கி வரவும். அந்த எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வெயிலில் மூன்று நாட்கள் வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து பத்திரப்படுத்தி கொள்ளவும்.

அந்த எண்ணையை சம்பந்தப்பட்ட நபர் இரவில் உறங்கும் போது அவர் அறியாமல் அவரது வலது உள்ளங்காலில் மயிலிறகால் தடவி விடவும் .

தொடர்ந்து ஐந்து நாட்கள் தடவி வந்தால் அதன் பின் அவர் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார். அவருக்கு அவ்வாறு நடைபெறாது.

ஓம் நமசிவய.

Saturday, January 24, 2015

நித்ய பூஜை

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

நீங்கள் நித்ய பூஜை அதாவது மந்திரங்கள் சொல்லி நைவேத்யம் வைத்து முறைப்படி செய்பவராக இருந்தால் உங்களுக்காக பூஜை செய்வது தொடர்பான சூட்சுமமான தகவல்களை தந்து இருக்கின்றேன் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் . 

பயனுண்டு . 

காலையில் எழுந்தவுடன் முதலில் கண்களை மூடியபடியே வடக்கு நோக்கி அமருங்கள் . 
மனதில் உங்கள் தாய்தந்தையர் முகங்களை கொண்டுவாருங்கள் (அவர்கள் இருந்தாலும் இல்லையென்றாலும்) அவர்களை வணங்கி மனமார அவர்களின் வாழ்த்தை வேண்டுங்கள் , அடுத்து உங்கள் குலதெய்வத்தினை (தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும்) வணங்கி இந்நாளை நன்னாளாக தருமாறு எண்ணி வணங்குங்கள். 

உங்கள் குழந்தைகள் (சிறியவரோ பெரியவரோ) அவர்களை எல்லா நலமும் பெற்று வாழவேண்டும் என்றெண்ணி நீங்கள் வாழ்த்துங்கள். 

இப்போது உங்கள் இரண்டு கரங்கையும் விரித்து உள்ளங்கைகள் இரண்டையும் பார்த்து கண்களை துடைத்து எழுங்கள் . 
அப்படியே பூஜை அறைக்கு செல்லுங்கள் அங்குள்ள நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களையும் கைகூப்பி இந்நாளை அனைத்து உயிர்களுக்கும் நலம்பிறக்கும் நாளாக மாற்றி அருள்வாய் இறைவா என மனம் நிறைந்து வேண்டுங்கள்.

இனி உங்கள் காலைக் கடன்களை முடியுங்கள்  .   
பதிவில் சொல்லியபடி நீங்கள் எழுந்து காலைக்கடன்களை முடிக்கும் போது மலஜலம் கழிக்கும் போது ( நீங்கள் குண்டலினி பயிற்சி செய்பவராக இருந்தால் )அதிக அழுத்தம் (முக்கி) கொடுத்து மலம் கழித்தல் கூடாது.
குளியல் . . 
சூரியன் உதிக்கும் முன் குளிப்பதாக இருந்தால் வடக்கு நோக்கியும் , சூரியன் உதித்த பின் குளிப்பதாக இருந்தால் கிழக்கு நோக்கியும் நின்று குளிக்கவேண்டும்.
குளிக்கும் முன் ஒரு செம்பு அல்லது பிளாஸ்டிக் மக்கில் முழுக்க ஜாலம் எடுங்கள் , சொல்லப்பட்ட திசையை நோக்கி நில்லுங்கள் .
அந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது விபூதியை போட்டு கலக்கி நீரினுள் ஒரு விரலை விட்டுக் கொண்டு சூரியனை வணங்கி , ஓம் ஸ்ரீ பவசிவ என 18 முறைகள் சொல்லி , குலதெய்வத்தினை எண்ணி வணங்கி , மூன்று தடவைகள் நீரினை தலையில் தெளித்துக்கொள்ளவும் , பின் மூன்று முறைகள் நீரெடுத்து முகம் கழுவவும் , பின் மீண்டும் மூன்றுமுறைகள் நீரினை நீங்கள் குளிக்க வைத்திருக்கும் நீரில் விடவும் .
மீதமுள்ள நீரினை தலையில் வழிய ஊற்றிக் கொள்ளவும் .
இதன்பிறகு குளிக்க துவங்குங்கள் . ஒவ்வொருமுறை நீர் ஊற்றும்போதும் உங்கள் இஷ்ட தெய்வத்தினை பெயர் சொல்லி ஊற்றிக் கொள்ளுங்கள் ( நமசிவய- ஓம் சக்தி-) நன்கு முகம் பின் கைகள் முழங்கைகள் , கால்கள் , பின் கால்கள் , மலபாகம் , மறைவிடங்கள் , குதிகால் உள்ளங்கால்கள் என்று உடலின் எந்த பாகமும் விடாது தேய்த்து நன்கு சுத்தப்படுத்துங்கள் , எல்லாம் மந்த்ரம் சொல்லியபடியே செய்ய வேண்டும்.
தனியறையாக இருந்தாலும் , உள்ளே தாழிட்டு குளித்தாலும் நிர்வாண குளியல் கூடாது . (இது மாத்ரு சாபமும், மாத்ரு தோஷமும் உண்டாக்கும்) சுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள் .
அலங்காரம். . . 
வேடமும் நீரும் விளங்க நிறுத்தி என்கிறார் அவ்வையார்.
அலங்காரத்தினை வேடம் என்று சொல்லும் அவ்வை அதனை அழகாக செய்துகொள்ள சொல்கின்றார்.
காரணம் உபாசகன் அலங்காரமாக இருப்பானேயாகில் சந்துஷ்டியாக (குதூகலமாக) கார்யம் செய்வான், அவன் மனதில் ஆனந்தம் இருக்கும். விரைவில் அவனது கார்யம் சித்திக்கும்.ஆனந்தமயமாக இருக்கும்.
தாய்தந்தையர் உள்ளவர்கள் விபூதியை நீரில் குழைக்கக் கூடாது. ஸ்தூலமாக (பவுடராக) தரிக்க வேண்டும்.
வடக்கு நோக்கி நில்லுங்கள். விபூதி தரிப்பவராக இருந்தால் நடுவிரல், மோதிர விரல், கட்டை விரல் மூன்றையும் கூட்டி விபூதியை எடுத்து வானம் , பூமி ,    குல தெய்வம் , உங்கள் இஷ்டதெய்வம் முதலியவற்றை துதித்து இடது உள்ளங்கையில் வையுங்கள் . வலது கையால் சிறிது நீரை எடுத்து கங்கா, யமுனா, சரஸ்வதி, காவிரி, நர்மதா என்று த்யானித்து சிரம் சுற்றி விபூதியில் விட்டு குழையுங்கள் ( தாய் தந்தையர் உள்ளவர்கள் நீர் விடாமல் மேற்கொண்டு செய்யுங்கள்) உள்ளங்கையில் விபூதியை பரப்பி அதில் ஓம் நமசிவய என மோதிர விரலால் எழுதுங்கள். பின் அதனை ஒன்று சேர்த்து இருகைகளாலும் தேய்த்து ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் இம்மூன்று விரல்களாலும் நெற்றியில் நமசிவய என்று சொல்லி மூன்று முறை இடவும்.
பின் புஜம், முன் கை, முழங்கை, பின் தோள்கள், இடுப்பு , மார்பின் மேல், நெஞ்சு , வயிறு போன்ற இடங்களில் மூன்றங்குலத்திற்கு மேல் நீளமில்லாதவாறு இடவும். நெற்றியில் மட்டுமே ஐந்து அல்லது ஆறு அங்குலம் இருக்கலாம். (பெண்கள் நெற்றியில் மட்டும் இட்டால போதும் மீதியை வயிற்றில் பூசிக் கொள்ளலாம்)
இப்போது குனிந்தமர்ந்து கீழே சிந்தியுள்ள விபூதியை நன்கு துணியால் துடைக்கவும் , பாதம் படலாகாது.
பின்னர் உங்கள் வழக்கப்படி சந்தனமோ குங்குமமோ இட்டுக் கொள்ளுங்கள்.
இனி நீங்கள் வைத்திருக்கும் ஸ்வாமி மூர்த்தங்களை அலங்கரியுங்கள் .
பூ வைத்து , பொட்டிட்டு , பழம் , கல்கண்டு , போன்ற நைவேத்தியங்கள் வைத்து அலங்காரம் செய்து பூஜையை துவங்குங்கள்.
(நீங்கள் குரு உபதேசம் பெற்றிருந்தால் அதன்படியே செய்யுங்கள். இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் குருவிடம் பெற்றதை நிறுத்தக் கூடாது.)
.
தினசரி பூஜை செய்பவர்கள் தேங்காய் உடைத்து படைக்க வேண்டியதில்லை. 
ஆனால் தேங்காய் உடைத்து செய்யவேண்டும் என்பது குரு உத்திரவாக இருந்தால் செய்யலாம்.
வழக்கமான பூஜை முறைகளை செய்து ஊதுபத்தி , சாம்பிராணி தூபம் காட்டி விட்டு , ஊதுபத்தியை (குறைந்தது 5) மட்டும் எடுத்து வீடு முழுவதும் காண்பியுங்கள் , உதடு மட்டும் தெய்வ நாமம் சொல்வதை நிறுத்தக்கூடாது. வாசல் , சமையல் அறை , பணம் வைக்கும் பெட்டி இருக்கும் அறை என எல்லா இடங்களுக்கும் காண்பித்து பின் பூஜை அறைக்கு வாருங்கள் . ஒவ்வொரு அறைக்கும் ஒரு ஊதுபத்தி வையுங்கள். இரண்டு ஊதுபத்தி பூஜை அறையில் வைத்தால் போதும்.
வடக்கு நோக்கி அமருங்கள் அல்லது கிழக்கு நோக்கி அமருங்கள்.   
பூஜையை முதலில் விநாயகரில் துவங்க வேண்டும். கணபதியின் துதி சொல்லலாம் . “சுக்லாம் பரதம்“ சொல்வதானால் அதற்கு சில சடங்குகள் உண்டு , அதன்படிதான் சொல்லவேண்டும் .அதனால் எல்லோரும் அதனை சொல்லமுடியாது .  “ஐந்து கரத்தனை”  அல்லது கணபதி காயத்ரி தத் புருஷாய வித்மஹே“ சொல்லலாம் . வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
பின் உங்கள் பூஜை சிறந்து விளங்க வேண்டுமல்லவா ? அதற்கு எந்த தடையும் வரலாகாது அதனால் ஏதேனும் ஒரு கட்டு மந்த்ரம் சொல்லுங்கள்
உங்களுக்கு கட்டு மந்த்ரம் தெரியாது என்றால் அடியேனின் இ மெயிலில்  gurukaruna2006@gmail.com கேளுங்கள் தருகின்றேன் .
இனி  
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான மந்தரங்களை சொல்லுங்கள்.
மந்த்ரங்களை சொல்லும் போது ஓடாதீர்கள் மந்த்ரத்துக்குள்ளே ஆழ்ந்து சென்று உணர்ந்து அனுபவித்து சொல்லி மகிழுங்கள்.
அனைத்து மந்த்ரங்களும் சொல்லி முடித்த பின் ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்த்ரம் சொல்லி முடிக்க வேண்டும் .
எந்த காரியமும் கணபதியில் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்கவேண்டும் .
இதனை வேடிக்கையாக பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள்.
ஸ்ரீ ராம ஆஞ்சநேயாய நமஹ என்று ஐந்து முறைகள் சொல்லி முடிக்கலாம்.
தீப ஆராதனை காட்டி பூஜையை முடியுங்கள்.

பூஜைக்கு பின் . . .

பூஜை முடிந்தது . இப்போது உங்கள் தெய்வங்கள் உங்கள் முன்னே மிக ஆனந்தமாக அமர்ந்துள்ளார்கள் .
நீங்கள் இப்போது த்யானம் செய்ய துவங்கலாம்.
உங்கள் வழக்கப்படி அமர்ந்து கொள்ளுங்கள்.
மிக மெதுவாக மூச்சினை இழுத்து மூன்றுமுறை விடுங்கள் . அமைதியாகுங்கள்.
உங்களுக்கு தெரிந்த த்யான ஸ்லோகங்கள் மனதிற்குள் சொல்லுங்கள் உங்கள் வேண்டுதல்களை அது எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் .
அவர்களின் ஆசீர்வாதம் வேண்டுங்கள் , மன்றாடுங்கள் , எனக்கு வேறுயார் தருவார்கள் என உரிமையோடு கேளுங்கள் .
(உங்கள் வேண்டுதலில் நியாயமும் , சத்தியமும் இருக்கவேண்டும்)
இனி உங்கள் பூஜையின் பலன் உங்களைத் தேடி வருவதை பாருங்கள்.
நமது மனமே நமது செயல்களை வெற்றியாக்கி தரும் மாயாஜாலக்கன்னாடி.
அதனை நம் பிரியப்படி நடக்க நாம்தான் பழக்கவேண்டும் .
இப்படி சுமார் 15 அல்லது 20 நிமிடங்கள் அமர்ந்திருங்கள். பின் பூஜையை சிறப்புடன் செய்ததை எண்ணி மகிழ்ந்து எழுங்கள்.
இவ்வாறாக நித்ய பூஜை செய்தால் உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விருப்பம் நிறைவேறும்.


ஓம் நமசிவய.
Related Posts Plugin for WordPress, Blogger...